மதமும் மூடநம்பிக்கையும்/தேவதைகள் பறந்துவிட்டன

மூடநம்பிக்கை 5


தேவதைகள் பறந்துவிட்டன!

இப்பொழுது, எவன் கொழுந்துவிட்டெரியும் பகுத்தறிவுச் சுடரைத் தன்மூளையில் ஏற்றிவைத்திருக்கிறானோ, எவன் ஆராய்ச்சி செய்துபார்க்கும் அறிவைப் படைத்திருக்கிறானோ, எவன் சிரித்துப் பார்க்கும் தன்மையைக் கொண்டிருக்கிறானோ, எவன் சான்றுகளைச் சரி தூக்கிப் பார்க்கும் திறம் உடையவனாக இருக்கிறானோ, அவ அடையாளங்களிலும். அதிர்ஷ்ட – துர் அதிர்ஷ்ட நாட்களிலும், அதிர்ஷ்ட – துர் அதிர்ஷ்ட எண்களிலும் நம்பிக்கை கொள்ளவே மாட்டான். வெள்ளிக்கிழமைகளைப் போன்றவையே தாம் வியாழக்கிழமைகளும் என்பதையும் பன்னிரண்டைக் காட்டிலும் பதின்மூன்று எந்த விதத்திலும் கேடுபயக்கக்கூடியது அல்ல என்பதையும் அவன் அறிவான். சிவப்புக் கற்கள், வைரங்கள் சாதாரண கண்ணாடி எந்த அளவுக்கு மனிதனைப் பாதிக்குமோ அதே அளவுதான் வெள்ளைக் கற்களும் பாதிக்கும் என்பதை அவன் அறிவான், ஒரு பெண்ணின் திருமண வாய்ப்புகள் ஒரு மலரிலுள்ள இதழ்களைப் பொறுத்தோ அல்லது ஒரு ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளைப் பொறுத்தோ, கூடவோ குறையவோ ஆகிவிடா என்பதையும் அவன் அறிவான். ஒரு படக் கொட்டகைக்குள் முதன்முதல் நுழைகிறவன் ஒற்றைக் கண்ணணாக இருந்தாலும் ஓடிந்த கையனாக இருந்தாலும், வணங்கிய முதுகினனாக இருந்தாலும் வளைந்த காலனாக இருந்தாலும் அல்லது ‘அப்பலோ' போல முழு அழகுவாய்ந்தவனாக இருந்தாலும் அவன் கவலைப்படுவதில்லை. குடும்பத்திற்கு எவ்வித குறைபாடும் தோன்றாத நிலையில்கூட, வேற்றுப் பூனைக்கு இடமளிக்க மறப்பதால், ஒன்றும் நேராது என்பதை அவன் அறிவான். ஒரு முக்கியமான மனிதன் இறந்து படப்போகிறான் என்பதற்காக, முழு நிலவு நாளில் ஆந்தையொன்று அலறிக்காட்டாது என்பதை அவன் அறிவான் மக்கட் கூட்டம் எல்லாம் இறந்து பட்டாலும்கூட, வால்நட்சத்திரங்களும், கிரகணங்களும் வரத்தான் செய்யும் என்பதை அவன் வானவில்லைக் கண்டோ அல்லது வடக்கே இருளைக் கிழித்துக்கொண்டு வெளிச்சம் வெளிப்படுவதைக்கண்டோ அவன் அஞ்சுவனங்களும் வரத்தான் செய்யும் தில்லை. மனிதசமுதாயத்தைச் சிறிதளவும் பொருட்படுத்தாமலேயே இவையெல்லாம் நிகழ்கின்றன என்பதை அவன் அறிவான். வெள்ளங்கள் அழிவையுண்டாக்கும். புயற்காற்றுகள் பாழ்படுத்தும், நில அதிர்ச்சிகள் விழுங்கும் என்பதையெல்லாம் அவன் உறுதியாக உணர்கிறான். நட்சத்திரங்கள் ஒளிவீசும், உலகைச்சுற்றி இரவும் பகலும் ஒன்றையொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும், பூக்கள் தம் நறுமணத்தைக் காற்றில் கமழச் செய்யும். காலை மாலை வேலைகளில், மேகங்கள் நிறைந்திருக்கும் பொழுது, ஒளி ஏழுநிற வானவில்லை, மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமலே வானத்தில் தீட்டும் என்பதை யெல்லாம் அவன் உறுதியாக அறிகிறான்.

நல்ல சிந்தனையும், தெளிவான உணர்வும் உடைய மனிதன் சரத்தான் வாழ்கிறான் என்பதை நம்பமாட்டான். அவன் உறுதியாக உணர்கிறான், பேய்களும், பூதங்களும், பிசாசுகளும், கெட்ட ஆவிகளும், அறியாமையும் அச்சமும் கொண்டவர்களின் கற்பனையுள்ளத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை மிகக் கீழ்த்தரமான கட்டுக்கதைகளெல்லாம் எப்படி இயற்றப்பட்டன என்பதை அவன் அறிகிறான். அந்தக் கட்டுக்கதைகள் எல்லா மதங்களிலும் எந்த அளவுக்கு வேலை செய்கின்றன என்பதையும் அவன் அறிகிறான். பூதங்களிடத்தும், கெட்ட ஆவிகளிடத்தும் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை பன்னெடும் நூற்றாண்டுகளாக, எல்லா நாடுகளிலும் இருந்து வருகிறது என்பதை அவன் அறிகிறான். சாதாரணக் குடியானவன் போலவே, மதக் குருக்களும் மிக அழுத்தந் திருத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதையும் அவன் அறிகிறான். அந்த நாட்களில் மிகப் படித்தறிந்தவர்களும், மிக அறியாமையில் மூழ்கியவர்களும் ஒரே மாதிரியான ஏமாற்றுக்காரர்களாகத் திகழ்ந்தனர். அரசர்களும் அவரது அவையினரும், பெண்களும், பேடிகளும் போர்வீரர்களும், கலைவாணர்கள்களும், அடிமைகளும், குற்றவாளிகளும் கடவுளை எந்த அளவு அழுத்தமாக நம்பினார்களோ அதே அளவு அழுத்தமான நம்பிக்கையைத்தான் சாத்தானைப் பொறுத்தும்கொண்டிருந்தனர்.

இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக எந்த ஓரு சான்றும் இருக்கவில்லை; இதுவரையிலும் இருந்ததில்லை. இந்த நம்பிக்கை எந்த உண்மை மீதும் நிலை நின்றதில்லை இந்த நம்பிக்கையானது, தவறுகளாலும்,உயர்வு நவிற்சிகளா பொய்களாலும் ஆதரிக்கப்பட்டு வந்தது. அந்தத் தவறுகள் இயல்பாகவே எழுந்தனவாக இருந்தன; உயர்வு நவிற்சிகள் மக்களின் உணர்வற்ற நிலையிலேயே வெளி வந்தன. பொய்களெல்லாம் கூடப் பொதுவாக நாணயமாகச் சொல்லப்பட்டன. இந்தத் தவறுகள், இந்த உயர்வு நவிற்சிகள் இந்தப் பொய்கள் ஆகிய இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது, பேரதிசயத்தின்பால் கொண்ட அன்பேயாகும். அதிசயம், பேராசை கொண்ட காதுகளால் கேட்கப்பட்டது; அகன்ற கண்களால் பார்க்கப்பட்டது; அறியாமை திறந்த வாயால் பருகப்பட்டது!

அறிவு வளர்ந்த ஒருவன். இந்த நம்பிக்கை வளர்ந்த வரலாற்றை நன்கு அறிவான். பல நூற்றாண்டு காலமாக நம்பிக்கை பற்றிய உண்மை, 'புனித பைபிளால்' நிலை நாட்டப்பட்டு வந்தது என்பதையும் அவன் அறிவான். பழைய வேதம், சாத்தானைப்பற்றியும் தீய ஆவிகளைப்பற்றியும் எழுதப்பட்ட கதைகளால் நிரம்பியது என்பதையும், அதுபோலவே புதிய வேதமும் நிரம்பியது ஆகும் என்பதையும் அவன் அறிவான். ஏசு கிருத்துவே சாத்தானையும், தீய ஆவிகளையும் நம்பியிருந்தவர் என்பதையும், ஆடவர் பெண்டிர் ஆகியோரைப் பிடித்திருந்த அந்தத் தீய ஆவிகளை,விரட்டுவதை, அவர் முக்கிய பணியாகக் கொண்டிருந்தார் என்பதையும் அவன் அறிவான். புதிய வேதத்தில் சொல்லப்பட்டபடி, ஏசு கிருத்துவே தீய ஆவியால் ஆசைகாட்டி மயக்கப்பட்டார் என்பதையும், சாத்தானால், அவனது கோயிலின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டார் என்பதையும் அவன் அறிவான். புதிய வேதமானது உள்ளபடியே ஆண்டவனால் மொழியப்பட்டது எனில், பூதங்கள் பிசாசுகள் இருக்கின்றன என்பதையும், அவைகள் மக்களை வசப்படுத்தியிருக்கின்றன என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன் !

இந்தத் தீய ஆவிகள் இல்லை என்று மறுப்பது - இந்தச் சாத்தான இல்லை என்று மறுப்பது, புதிய வேதத்தின் உண்மையையே மறுப்பதாகும். இருளில் பிசாசுகள் இல்லை என்று மறுப்பது, ஏசு கிருத்துவின் சொற்களையே மறுத்துக் கூறுவதாகும். இந்தப் பூதங்கள் இல்லை என்றால், இவைகள் நோயை உண்டாக்கவில்லை என்றால், இவைகள் மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களைத் தவறான வழியில் இழுத்துச் செல்லவில்லை என்றால், பிறகு, கிருத்து, அறியாமை நிரம்பியவராகவும், மூட நம்பிக்கை மனிதராகவும்,மனங்குழம்பியவராகவும், ஏமாற்றுக்காரராகவும்தான் இருக்கவேண்டும்; அல்லது, அவர் சொல்லியதாகவும் செய்ததாகவும் சொல்லப்படுகிற புதிய வேதம் என்பது, உண்மையான பதிவாக இருக்கமுடியாது. நாம் பேய் – பூதம் – பிசாசு பற்றிய நம்பிக்கையைக் கைவிடுகிறோம் என்றால், பழைய - புதிய வேதங்களின் கடவுள் கருத்துக்களையும் நாம் கைவிடத்தான் வேண்டும் ! நாம் கிருத்துவின் கடவுள் தன்மையைக் கைவிடத்தான் வேண்டும்! தீய ஆவிகள் இருப்பதை மறுப்பது என்பது கிருத்தவ மதத்தின் அடிப்படையையே அடியோடு அழிப்பதாகும். அப்படிக் கிப்படிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இரண்டிற்கும் ஒத்தவொரு சமாதானம் தேடுவது ஆகாத ஒன்றாகும். புதிய வேதத்தில் சொல்லப்பட்ட பிசாசுகளை விரட்டுவதுபற்றிய கருத்துக்களெல்லாம் தவறு என்று ஆயினால், பின்னர் அந்த புனித நூலின் எந்தப்பகுதிதான் உண்மையாக இருக்கமுடியும்?

அதன் உண்மைவழிப் பார்க்கப்போனால், ஏடன் தோட்டத்தில் சாத்தானுக்கு ஏற்பட்ட வெற்றியின் விளைவே கிருத்துவைத் தோற்றம் செய்யும்படியான அவசியத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. கிருத்து உயிர்த்தியாகம் செய்வதற்கு வழி அமைத்தது; கிருத்துவைச் சிலுவையில் அறைந்தது; தந்தை–மகன்–புனிதப்பிசாசு ஆகிய மூன்றும் சேர்ந்து முத்தன்மையை நமக்குக் கொடுத்தது!

சாத்தான் வாழவில்லை என்றால் கிருத்துவமதக் கருத்துக்கள் அத்துணையும் சிதறுண்டு போகும்; "கிருத்தவம" என்று சொல்லப்படுகிற பெருங்கட்டிடம் முழுவதும் எரிந்து போய்விடும்? பாதிரிமார்களாலும் குருமார்களாலும், புரோகிதர்களாலும் மதவாதிகளாலும், தவறுகளாலும் பொய்மைகளாலும், ஜாலவித்தைகளாலும், அதிசயங்களாலும், குருதியினாலும், நெருப்பினாலும், காட்டுமிராண்டிகளிடமிருந்து கற்றுக்கொண்ட பொய்களாலும் பொய்மைக் கதைகளாலும் கட்டப்பட்ட “கிருத்தவம்" என்ற அந்தப் பெருங்கட்டிடம் உருத்தெரியாமல் அழிந்து போய்விடும்!

பூதங்களிடத்தும் தீய ஆவிகளிடத்தும் கொண்டிருந்த நம்பிக்கையை நாம் கைவிடுவோமேயானால், பேயாட்டுபவள் என்று ஒருத்தி வாழ்ந்திருக்கமுடியாது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியவர்களாவோம் இப்பொழுது அறிவுள்ள எந்த மனிதனும், பேய் - பூதம்- பிசாசு ஆகியவற்றை அடக்கியாளும் தன்மையில் நம்பிக்கை கொள்வதில்லை. அது ஒரு ஏமாற்று வித்தையாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நடைபெற முடியாத ஒரு குற்றத்தைச் செய்தார்கள் என்ற காரணத்துக்காக,ஆயிரமாயிரம் ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும். சித்ரவதை செய்யப்பட்டும், கொளுத்தி எரிக்கப் பட்டும் கொடுமைக்குள்ளாக்கப்பட்டும் போயினர் என்பதை நாம் இப்பொழுது அறிகிறோம். மத நம்பிக்கையால் நமது உள்ளங்கள் பாழ்படாமலிருந்திருக்குமேயானால். பேயாட்டுபவர்கள் வாழ்ந்ததைப்பற்றிக் கற்பிக்கிற புத்தகங்களெல்லாம் அறியாமையும் மூடநம்பிக்கையும் கொண்டவர்களாலேயே எழுதப்பட்டன என்பதை நாம் இப்பொழுது நன்கு அறியலாகும். பேயாட்டுபவர்கள் வாழ்ந்ததைப் பழைய வேதம் உறுதிப்படுத்துகிறது என்பதையும் நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம். அந்தப் 'புனித வேத'த்தின்படி, ஜெகோவா பேயாட்டுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதும், அவரைப் பின் பற்றினவர்களுக்கு அவர், 'பேயாட்டுபவன் ஒருத்தியை வாழவிட்டுவிட்டு நீங்கள் துன்பம் அடையாதீர்கள்" என்று போதனை புரிந்தார் என்பதும் அறியப்படுவனவாகும்.

இந்த ஒரு கட்டளை, இந்தச் சாதாரணமான ஒருவரி போதும், ஜெஹோவா கடவுள் அல்ல என்பது மட்டுமல்லாமல், அவர் பரிதாபத்திற்குரிய – அறியாமை நிரம்பிய – மூட நம்பிக்கை மனிதர் என்பதை நிரூபிக்க பழைய வேதம் சாதாரண மனிதர்களால் அதாவது காட்டுமிராண்டிகளால் எழுதப்பட்டதாகும் என்பதை, ஐயப்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லாதவகையில் இந்த வரி ஒன்றே நிரூபிக்கும்.

பேயாட்டும் தன்மையிலுள்ள நம்பிக்கையைக் கைவிடுவது என்பது, பைபிளையே கைவிடுவதாகும் என்று, ஜான் வெஸ்லி கூறியது, முற்றிலும் உண்மையாகும்.

பூதத்தைக் கைவிடுவதென்றால், பின்னர் வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அஹாம் என்பானை ஏமாற்றுவதற்காக ஜெஹோவாவால் அனுப்பப்பட்ட பொய்யான ஆவிகளுக்குப் பின்னர் எப்படிப்பட்ட சமாதானத்தைத் தேடுவது?

பேயாட்டுவது ஒரு மூட நம்பிக்கை என்று என்று ஒப்புக் கொண்ட போதனையாளர்கள், எண்டார் என்ற பேயாட்டியைப் பற்றிய கதையினைப் படிப்பார்களா? அதளைப் பயபக்தியோடும், அடக்கத்தோடும் படிக்க அவர்களால் இயலுமா? மத உணர்வோடுதான் அதனைப் படிக்க முடியுமா? அல்லது அதனை நம்புகிறோம் என்று தான் சொல்ல அவர்களுக்கு உறுதி பிறக்குமா?

தேவதைகள் காற்றில் உலாவுகின்றன; அவைகள் ஏதும் அறியாதவர்களைப் பாதுகாக்கின்றன; அவைகள் நல்லவர்களுக்கு ஆதரவு தருகின்றன; அவைகள் தொட்டில்களைச் சூழ்ந்து நினறு குழந்தைகளுக்கு உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன; அவைகள் இருட்டறைகளில், தங்கள் ஒளியின் மூலம் வெளிச்சத்தை உண்டாக்குகின்றன; சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கு அவைகள் நம்பிக்கை அளிக்கின்றன; அவைகள் வீழ்ச்சியுற்றவர்கள் தவறு செய்தவர்கள்–தள்ளப்பட்டவர்கள்–ஆதரவற்றவர்கள் ஆகியோரைத் தொடர்ந்து போய், அவர்களுக்கு நன்மையும், அன்பும், மகிழ்ச்சியும் தருகின்றன. கெட்ட ஆவிகள் இல்லை என்பதற்கு எவ்வளவு காரணங்கள் உண்டோ, அவ்வளவு காரணங்கள் உண்டு. நல்ல ஆவிகள் இல்லை என்பதற்கும் என்பதை இப்பொழுது நாம் அறிவோம். பேய்களும் பூதங்களும் இடைக்காலங்களில் உலாவின என்பது எவ்வளவு பொய்யோ, அதே அளவு பொய்யான செய்திதான் ஆப்ரஹாமையும், சாம்சானுடைய தாயாரையும் தேவதைகள் கண்டு பேசின என்பதும், பலாம் என்ற தேவன ஏறிய கழுதையை நிறுத்திய தேவதை; நெருப்புக் குண்டத்தில் நடந்த தேவதை: ஆசிரியர்களைக் கொன்ற தேவதை; ஜோஸப்பின் கனவில் தோன்றி ஐயங்களைப் போக்கிய தேவதை என்று சொல்லப்படும் தேவதைகளெல்லாம், ஏமாற்றுக்காரர்களின் கற்பனைகளில் உதித்தவைகளாகும். மிகப் பேரதிசயங்கொண்டவைகளாக மதக் கருத்துக்களைச் சித்தரிக்கவேண்டும் என்று ஆசை கொண்டவர்களால், இட்டுக்கட்டப்பட்டவைகளே அவைகள். ஏமாற்றுக்காரர்கள், அந்தக் கதைகளை, வயது முதிர்ந்த தளர்ந்த வரிலிருந்து, துள்ளி விளையாடும் குழந்தைப் பருவத்தினர் வரையிலுமுள்ள எல்லோரிடமும் பரப்பினர்; எல்லாக் காலங்களிலும் பரப்பினர். அந்தக் கதைகள், அறியாதவர்களிடமிருந்து அறியாதவர்களிடம் தாவித் தொடர்ந்து வளர்ந்து வந்தன. கத்தோலிக்க நாடுகளைத்தவிர, ஏனைய நாடுகளில் சென்ற பல நூற்றாண்டுகளாக, 'இறக்கை கட்டிய தேவதை' எதுவும் பறந்துவந்து மக்களைப் பார்த்ததில்லை. உண்மைகளை அறிந்துகொள்ள முடியாத குருட்டு நம்பிக்கைகொண்ட ஒரு சில மூடர்களே. இத்தகைய 'அதிசயப் பிராணிகளை'ப் பாசாங்காகப் பார்ப்பார்கள். சான்றுகளைக்கொண்டு ஒரு முடிவுக்கு வராமல், தான் தோன்றித்தனமாக எதையும் முடிவு செய்துகொள்ளும் ஒருசிலர்தான், அவைகள் இருப்பதாக நம்புவர் ஆஞ்செலோ என்ற சிறந்த ஓவிய நிபுணன். மாதா கோயிலை ஓவியங்களால் அழகுபடுத்தும்போது, செருப்பு போட்டுக் கொண்ட தேவதைகளை வரைந்தானாம். அந்தப்படத்தைப் பார்த்த பாதிரியார் ஒருவர், "செருப்புப் போட்டுக்கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்தவர் யார்?" என்று ஓவியனைப் பார்த்துக் கேட்டாராம். அதற்கு ஆஞ்செலோ தேவதைகளை வெறுங்காலோடு பார்த்தவர்கள் யார்?" என்று மறுமொழியாகக் கேட்டானாம்.

தேவதைகள் வாழ்ந்தன என்பது ஒருபொழுதும் நிலை நாட்டப்படவில்லை. ஆனால் உயர்ந்ததர தேவதைகளையும் தாழ்ந்ததர தேவதைகளையும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டு வருகிறார்கள் என்பதை நாமறிவோம். கேப்ரியல் என்ற தேவதை, மோசஸின் உடலுக்காகப் பூதத்தோடு போரிட்டதையும், டேனியலைக் காப்பாற்றுவதற்காகச் சிங்கங்களின் வாய்களைத் தேவதைகள் அடைந்ததையும், ஏசுகிருஸ்துவிற்குத் தேவதைகள் போதனை புரிந்ததையும், ஏசு உலகத்திற்கு வரும்போது அவருக்குத் துணையாக எண்ணற்ற தேவதைகள் வந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். மத நூல்களில் உரைக்கப்பட்ட சான்றுகளையும் - உண்மைகளையும் மட்டும் வைத்துக்கொண்டு, குருட்டுத்தனமான போக்கில் பகுத்தறிவற்ற பக்தியன்போடு இவைகளையெல்லாம் அம்மக்கள் நம்பிவருகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்!

ஆனால் இனிமேல் தேவதைகள் எதுவும் வராது! புண்பட்ட நெஞ்சத்திற்குத் தடவ அவைகள் களிம்பு எதனையும் இனி எடுத்துக் கொண்டு வாரா! நீண்ட நாட்களுக்கு முன்பே அவைகள் தமது இறக்கைகளைச் சுருட்டிக் கொண்டு, உலகிலிருந்தும், காற்றிலிருந்தும் மறைந்து விட்டன! இந்த இறக்கை கொண்ட தேவதைகள் இனி மேல் அறியா மக்களைக் காப்பாற்ற முன்வரா; துன்புறுகின்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தா; ஆதரவற்றோர்க்கு ஆதரவு நல்கும் சொற்களைக் கூறா! அவையெல்லாம் கனவுகளாகிவிட்டன; மறைந்த தோற்றங்களாக மாறிவிட்டன!