மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/அறனோ திறனோ?

92. அறனோ? திறனோ?

நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்க்கச் சென்றார். இன்முகத்தோடு வரவேற்றான். மகிழ்ந்து உரையாடத் தொடங்கினார். “அரசே உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. உன்னிடம் வருவோர் அனைவரையும் ஒரே தன்மையாக வரவேற்பதில்லை நீ”

“எல்லோரையும் நன்கு வரவேற்கிறேனே. இப்போது தானே உங்கள் கண்முன் பாணர்களுக்குப் பரிசளித்தேன்”

“ஆம், பாணர்களுக்குப் பொற்றாமரைப் பூவைச் சூடுகிறாய். புலவர்களுக்கு யானையும் தேரும் அளிக்கிறாய். ஆனால் உன்னிடம் வரும் பகைவர் மண்ணைப் பறித்துக் கொள்கிறாயே, புலவரிடம் இனிக்கப் பேசும் நீ பகைவரை சினந்து நோக்குகிறாயே!”