மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பாட்டுக்குப் பரிசு

91. பாட்டுக்குப் பரிசு!

பெருங் கடுங்கோ சேரவேந்தன். அவன் ஆறு வளம் மிக்கது. அவ்வூர்ச் சிறுமியர் ஆற்றில் நீராடுவர். ஆற்று மணலில் சிற்றில் கட்டுவர். பாவை செய்து அதற்கு மாலை சூட்டுவர். மக்கள் உள்ளத்தில் கலை வாழ்ந்தது. மகிழ்ச்சி தவழ்ந்தது.

பாணனும் பாடினியும் அவனைப் பார்க்கச் சென்றனர். அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடினாள் பாடினி. பாணன் ஒத்துப் பாடினான். பாடினி பல கழஞ்சுப் பொன்னால் ஆன பொற்கொடியைப் பரிசாகப் பெற்றாள். பாணனோ வெள்ளிநாரில் தொடுக்கப் பெற்ற பொற்றாமரைப் பூ மாலை பெற்றான்.

இதனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் இளவெயினி.

“எனக்கேன் பரிசளிக்கவில்லை” என்றாள். பரிசுப் பொருள்கள் வந்து குவிந்து கிடந்தன.