முதற் குலோத்துங்க சோழன்/திருவைகாவூர்க் கல்வெட்டு

சேர்க்கை - 3

திருவைகாவூர்க் கல்வெட்டு

(1) ஸ்வஸ்திஸ்ரீ

புகழ்மாது விளங்க ஜெயமாதுவிரும்ப
நாமகள் நிலவ மலர்மகள் புணர
உரிமையிற்சிறந்த மணிமுடிசூடி
மீனவர்நிலைகெட வில்லவர்குலை(2)தர
ஏனைமன்னவர் இரியலுற்றிழிதரத்
திக்கனைத்துந்தன் சக்கரநடாத்தி

வீரசிங்காசனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந் தருளிய கோவிராஜ (3) கேசரிவர்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜ வளநாட்டுப்பாவை சுற்றுப்பூண்டி (4) பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரான வன நாடுடையார் உலகுய்யவந்த சோழவள நாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை (5)ய மகாதேவர் கோயில் முன்பு இஷ்டிகையாய் ஜீரணித்தமையில் இக்கோயில் இழிச்சித்திருக்கற்றளியாகச் செய்கைக்கு யாண்டு முப்பத் திரண்டாவ (6)து விண்ணப்பஞ்செய்து இஷ்டிகை இழிச்சி வித்துத் திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டப மும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதானமான (7) நிலத்து நெல்லு திருப்படிமாற்றுக்கும் நிபந்தத்திற்கும் போதாமையில் தேவதானம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய்ய வந்த சோழவள (8) நாட்டு விறை கூற்றத்துக்களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதேசிந்தத்தால் நெல்லு ஆயிரத்து இருநூற்றுச் சிந்தமும் தேவதானமா (9)க இடுவித்து நிவந்தஞ் செல்லப்பண்ணுவித்தார் ராஜராஜவள நாட்டுப்பாவை சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரான (10) வனநாடுடையார் - இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயேஸ்வரர் திருவெண்காடுடையான் திருச்சிற்றம்பல முடையானான தந்தைவிரதமுடித்தார்.