வெற்றி விளையாட்டு காட்டுகிறது

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


வெற்றி

விளையாட்டு

காட்டுகிறது!
(ஒறு மாறுபட்ட நாவல்)


மூன்று முறை தேசிய விருது பெற்ற நூலாசிரியர்
{{larger|டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா}

M.A., M.P.Ed., Ph.D., D.Litt. D. Ed., FUWAI,



8, போலீஸ் குவாட்டர்ஸ் ரோடு,
தி. நகர், சென்னை-600 017.

முதற்பதிப்பு : 1988
இரண்டாம்பதிப்பு : 1996


விலை ரூபாய் 12.00


கிரேஸ் பிரிண்டர்ஸ்
சென்னை-17.

முன்னுரை

வெற்றி விளையாட்டு காட்டுகிறது என்னும் நூல் ஒரு நீண்ட கதையின் முழுவடிவமாகும். ஒரு புதிய முயற்சியாக உருவம் பெற்றிருக்கிறது.

நாவல் என்றவுடன், காதலன், காதலி, வில்லன். அவன் போராட்ட வெறி போன்ற நிகழ்ச்சிகள் தான் சாதாரணமாக இடம் பெறும்.

இவையெல்லாம் இல்லாமல், புதுமையாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற என் நெடு நாளைய ஆசை, இன்று - நிறைவு பெறுகிறது.

இலட்சிய வேகமும். பிறர்க்குதவும் பண்புகளையும் காண்ட குணசேகர் என்பவர் தான் இக்கதையின் நாயகர் . இவருக்கு ஓர் ஆசை பிறக்கிறது. அது இலட்சியமாக வளர்கிறது. ஆனால் இலட்சியத்தை வளர்க்க வந்தவர்கள் எல்லாம் காட்டிய அலட்சியமும், ஆணவமும் அவரை வெற்றி யடைய விடாமல் தடைபோடுகிறது. இடை மறிக்கிறது. ஏனனம் செய்கிறது. இதயத்தையே எரிமலையாக்கி விடுகிறது

அவரது இலட்சியத்தில் அவர் வெற்ற பெற்றாரா? வேதனைகளை விரட்டினாரா? என்பது தான் இந்த நாவலின் கதையோட்டம்.

வெற்றி என்பது தானாக மடிமீது வந்து விழும் கனி அல்ல. அது உழைப்பினால், பெறுகின்ற செல்வமாகும்.

அந்த அற்புத வெற்றியானது, குணமுள்ள குணசேகருக்கு எப்படியெல்லாம் விளையாட்டு காட்டுகிறது என்ற, நிகழ்ச்சிகள் தாம் கதை முழுதும் கண்சிமிட்டிக் காட்டுகின்றன.

யாரும் படிக்கலாம், எந்த வயதினரும் படிக்கலாம். என்னும் அளவில் எழுந்த குடும்ப நாவல் இது.

மனித வாழ்வு இலட்சியத்தினால் நடத்தப்படுகிறது என்பதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து, கடந்து. முயன்று, வென்று பயன் பெற வேண்டும் என்ற எனது. ஆசை, நியாயமானது தான்.

உங்களுக்கு இந்த நாவல் நிச்சயம் பிடிக்கும். ஏனென்றால், விளையாட்டுத் துறையில் வருகின்ற முதல் நாவல் முற்றிலும் புதிய கோணத்தில் அணுகுமுறை கொண்டது. அதனால் தான் உங்களை நிச்சயம் கவரும், என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் அளிக்கிறேன்.

வெற்றி மட்டும் விளையாட்டு காட்டவில்லை. உற்சாகமும் உவப்பும், உண்மையான இன்பமும் உங்களுடன் விளையாட்டுகள் காட்டும், படிக்கப் படிக்க சுவைகளை ஊட்டும் என்றும் நம்புகிறேன்.

'ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை' என்று விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழில் தொடர்ந்து வெளி வந்த நாவல் தான் இது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்து மகிழ்ந்த இந்த தொடர்கதை. இப்பொழுது அழகான நூலாக வத்திருக்கிறது.

இதற்கான ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்ட R. ஆதாம் சாக்ரட்டிஸ், மற்றும் கிரேஸ் பிரிண்டர்ஸ் அச்சகத் தாருக்கும் என் அன்பார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானமலர் இல்லம்
எஸ்.நவராஜ்செல்லையா

தி.நகர்
சென்னை -17 30-12.88.

இந்த நாவலைப் படிக்குமுன்

திரு. எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் எழுதிய புத்தகங்களுள் இது தனித்தன்மையைப் பெற்றுத் திகழ்கிறது !

நாவல் தான் இது என்றாலும் தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் நாவல்களில் இடம் பெறும் காதல், கலாட்டா போன்ற நிகழ்ச்சிகளை சேர்க்காமல் இந்தப் புத்தகத்தை அவர் எழுதியிருப்பது நம்மை நிச்சயம் வியப்பிலாழ்த்தும் !

விளையாட்டுத்துறை நூல்களையும் கதை, கவிதை, நாடக நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ள இந்நூலாசிரியர் நவராஜ் செல்லையா, தான் சுவீகரித்துக் கொண்டுள்ள விளையாட்டுத் துறையைப் பின்னணியாகக் கொண்டு குணசேகர் என்ற ஒரு கதாபாத்திரத்தையும். அவரைச் சுற்றிப் பலரையும் நமது சிந்தனையில் நிலைக்கும் வண்ணம் உலவவிட்டிருக்கிறார்.

தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றி தோல்வியைக் காணும் ஒரு மனிதனின் மனநிலையை சுவையோடு நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த ஆசிரியர் கதாபாத்திரங்களை நகர்த்தியுள்ள முறை பிரமிக்க வைப்பதாக அமைந்துள்ளது !

காதல் இல்லாமல், கலாட்டாக்கள் இல்லாமல் ஒரு சுவையான கதையைச் சொல்ல முடியும் என்ற மாயா ஜாலாத்தை நவராஜ் செல்லையா அவர்கள் இந்த நாவலின் வாயிலாக நிரூபித்து , எழுத்துலகத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை செய்திருக்கிறார்.

அவரது மாறுபட்ட முயற்சியின் சாதனையைப் படித்து சுவைக்க நாங்கள் தடையாக நிற்க மாட்டோம் என்ற உத்திர வாதத்துடன் உங்களை நூலினுள் நுழைய அழைக்கிறோம்.

பதிப்பகத்தார்
.

ஒரு முன்னோட்டம்

ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை என்பார்கள். ஏனெனில் ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பதால்.

ஆத்திரப்படுபவன் ஏமாந்து போகிறன் என்பார்கள், ஏனெனில் ஆத்திரம் அன்பை மறைத்து விடுகிறது, ஆராயும் பண்பினைக் குறைத்து விடுகிறது என்பதால்.

இவ்வளவு தெரிந்தும் ஏன் ஆத்திரப்படுகிறோம்? ஆங்காரம் கொள்கிறோம்? ஆவேசமடைகிறோம்? ஆடிப்பெருக்கு வெள்ளம் போல அடங்காது குதிக்கிறோம்? ஏன்?

ஏமாற்றம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். ஏமாற்றம் எப்பொழுது வருகிறது? எதிர்ப் பார்க்கும்பொழுது தான். எந்த முடிவும் தனக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் பொழுது, திடீரென்று எதிர்மாறாக நடந்துவிட்டால்............ ?

அப்பொழுதுதான் ஆத்திரம் வரும். அப்படி ஆத்திரப்படுவதற்கு அர்த்தமேயில்லை. ஏனென்றால் நம்முடைய வாழ்கை அப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஆ-1

இருட்டு வெளிச்சம், பள்ளம் மேடு, வெண்மை கருமை, இன்பம் துன்பம் என்பதாகவே வாழ்க்கை எதிர்மாறாகவே அமைந்து விட்டிருக்கிறது இந்த உலகத்தின் உருவகமாகவே வாழ்க்கையும் வழி காட்டுகிறது.

நினைப்பது நம்வசம் இருக்கிறது. ஆனால் நடப்பது நம் கையில் இல்லை என்பதை மட்டும் நாம் புரிந்துகொண்டு விட்டால், நெஞ்சத்திலே தெளிவு வந்துவிடும். நினைப்பிலே வலிமை வந்துவிடும், வழியிலே நிதானம் வந்துவிடும். வாழ்க்கையில் அமைதி வந்துவிடும்.

ஆகவே, ஆத்திரப் படக்கூடாது என்று இருந்து விட வேண்டியது தான் என்ற முவுக்கு வந்து விடலாமா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அதுவும் நியாயம் தான்.

கோபப்படாதவன் கோழை என்பார்கள் சிலர். கோபப்படத் தெரியாவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று வாதம் பன்ணுபவர்களும் உண்டு.

கோபப்படலாம். கொந்தளிப்படையலாம், குமுறலாம், ஆனால் இவையெல்லாம் நடை முறைக்கு, வாழ்வின் முன்னேற்றத்திற்கு வெற்றிக்கு ஒத்துவருமா!

அனுபவமில்லாதவர்கள் ஆத்திரப்பட்டு வார்த்தைகளை இறைத்து விடுவார்கள், அடக்கும் சக்தியற்றவர்கள் சிலர் அடிதடியில் இறங்கி விடுவதுமுண்டு. அடாவடிக்காரர்கள் என்பார்களோ ஆர்ப்பாட்டத்தல் புகுந்துவிடுவார்கள்.

இவையெல்லாம் ஏன் ? ஆத்திரமடைந்த மனதை அமைதிப் படுத்திக் கொள் வதற்காக. ஆனால், அறிவுள்ளவர்கள் என்ன சொல்வார்கள் ? என்ன செய்ய வேண்டும் ?

ஆத்திரம் ஊட்டுவதற்குரிய சூழ்நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தது ஏனென்ற நியாய தர்மங்களையும் சீர்தூக்கப் பார்க்க வேண்டும். அப்பொழுது தான் அடங்காது குதித்து ஆத்திரப்படும் மனதை சமாளிக்க முடியும். சமானப்படுத்தவும் முடியும்.

வேறு வழி இல்லை என்று விளங்கிக் கொள்பவர்களால் தான் வாழ்க்கையை சமாளிக்க முடியும். வளர்ச்சியடைய முடியும். மற்றவர்களை விட அதிகமாக முன்னேறவும் முடியும்.

இப்படி உள்ளதை விளங்கிக் கொள்ளாதவர்கள் வாழ்வு எப்பொழுதும் விடிவதேயில்லை. எப்பொழுதும் இருட்டிலேயே வாழ வைத்துவிடும்.

இங்கே தொடங்க இருக்கின்ற ஒரு புது விளையாட்டுத்துறை நாவலுக்குரிய முன்னுரை தான். நீங்கள் இதுவரை படித்து வந்தது. தலைப்பும் ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை என்பது தான்.

அர்த்தமில்லாத தலைப்பாக இது இருக்கலாம், அர்த்தமில்லாத விஷயங்கள் கூட இதில் வரலாம். ஆனால் இது நமது விளையாட்டுத் துறையின் நிகழ்காலத்தையும் எதிர் காலத்தில் வரலாறாகக் காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கும் என்பதற்காக எழுதப்படுகின்ற நாவல் இது.

இதில் வரும் கதாநாயகன் குணசேகர் தனது வாழ்க்கையில் எத்தனையோ வேதனைகளைச் சந்தித்தவர். இங்கே பல சோதனைகளைச் சந்திக்க இருக்கின்றார். கதாநாயகன் என்றவுடன் பழக்கமாகத் தமிழ் நாவல்களில் வரும் 'பாணிகள்' 'பாவனைகள் தோரணங்கள்' 'குடைச்சல்கள்', குமட்டல்கள் காதலர்கள், கவிழ்ப்புகள், மோதல்கள் இதிலிருக்காது.

புதுவிதமாக இந்த நாவலை எழுத முயன்று இருக்கிறேன். நீங்கள் படித்துக் கொண்டு வரும்பொழுது ஆத்திரப் பட்டு விடக்கூடாது. ஏனென்றால் ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை என்றும் முன் கூட்டியே உங்களுக்கு சொல்லி, விட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உலக அரங்கில் ஒரு தங்கப்பதக்கம் கூட விளையாட்டுப் போட்டிகளில் வாங்க முடியவில்லையே என்று ஏங்கும். உணர்வுகளின் வெளிப்பாடாக, விளங்கி வரும் சூழ்நிலைகளை விளக்கிவிட முயன்றிருக்கிறேன். இந்த உண்மையை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டால் போதும். இனிமேல். நீங்கள் படிக்கத் தொடங்கலாம்.