வேங்கடம் முதல் குமரி வரை 4/018-032

18.சங்கரன் கோயில் சங்கர நாரணர்

கோயமுத்தூர் மாவட்டத்திலே பழைய கோட்டை என்று ஓர் ஊர். பழைய கோட்டையில் இருப்பவர் பட்டக்காரர். அவரைவிடப் பிரசித்தமானது அவருடைய மாட்டுப் பண்ணை. ஆயிரக்கணக்கான காளைகளும் பசுக்களும் கன்றுகளும் அங்கே இருக்கின்றன. நான் கோவையில் இருந்தபோது பட்டக்காரரது பண்ணையைப் பார்க்கச் சென்றேன், பல கண்காட்சிகளில் பரிசு பெற்ற காளைகளையெல்லாம் பார்த்தேன். அங்கே ஓரிடத்தில் பால் கறக்கும் பசுக்கள் நூற்றுக்கு மேலே வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பசுக்களின் கன்றுகளை வேறு ஒரு தனியிடத்தில் பட்டியிட்டு நிறுத்தியிருந்தது. மாலை நாலு அல்லது நாலரை மணி; பால் கறக்கும் நேரம். ஒவ்வொரு பசுவினிடம் ஒரு கறவைக்காரன், பின்னர் பட்டியிலுள்ள கன்றுகளை அவிழ்த்து விட்டு விட்டனர். கன்றுகளெல்லாம் துள்ளிக் கொண்டு வந்தன. ஒவ்வொரு கன்றும் அதனதன் தாய்ப் பசுவை நோக்கி ஓடின: மடியில் முட்டிப் பால் குடித்தன. ஒரு கன்றுகூடத் தவறி வேறு தாய்ப் பசுலினை நாடவில்லை. இதே போல் ஆயிரம் பசுக்கள் நிற்கும் இடத்திலும் கன்று ஒன்றை அவிழ்த்து விட்டால் போதும். அது அத்தனை பசுக்களிடையேயும் புகுந்து சென்று தன் தாய்ப் பகவைக் கண்டுபிடித்து விடும். இந்தப் பண்ணையில் இந்த அதிசயத்தைப் பார்த்ததும், கவிச் சக்கரவர்த்தி கம்பன் பாடிய பாடல் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது.

தாய் தன்னை அறியாத கன்றில்லை
தன் கன்றை
ஆயும் அறியம், உலகின் தாயாகி
ஐய! நீ அறிதி எப்பொருளும்

என்று இறைவன் தாய் ஆகி உலக மக்களைப் புரக்கும் அருமையைப் பாடுகிறான் கம்பன். தாய்த் தன்மையிலும் தலைசிறந்த தாய்த் தன்மையாக அவன் கருதுவது பசுவுக்கும் கன்றுக்கும் உள்ள தொடர்பைத்தான். நாம்தான் பார்த்தோமே, ஒரு பசுவின் கன்று தன் தாயை ஆயிரம் பசுக்களிடையே நின்றாலும் கண்டு கொள்வதை. அதே போல் தன் கன்றையும் ஆயிரம் கன்றுகளிடையே நின்றாலும் தெரிந்த கொள்ளும் பசு. இது ஓர் அதிசய அறிவுதானே. அந்த அறிவை உடையவள் உலகு புரக்கும் அன்னை. ஆம், அதனாலே ஒரு பெயர் ஆவுடையாள்-கோமதி என்று. பசுக்களாகிய உயிர்களைத் தன் உடைமையாகக் கொண்டு காப்பாற்றுகிறவள் ஆவுடையாள். இந்த ஆவுடையாள் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் சங்கரன் கோயில், அந்தச் சங்கரன் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

சங்கரன் கோயில் திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலூகாவின் தலை நகரம். நிரம்புப் பெரிய ஊரும் அல்ல, சிறிய ஊரும் அல்ல. தென்பிராந்திய ரயில்வேயில் விருதுநகர்- தென்காசி லயனில் இருக்கிறது. ஆதலால் தென்பிராந்திய ரயில்வேயில் விருதுநகர்-தென்காசி லயனில் இருக்கிறது. அதனால் அந்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் இறங்கி ஒரு மைல் நடந்தால் கோயில் வந்து சேரலாம். இல்லை, காரிலேயே போவதானால் திருநெல்வேலியிலிருந்து 35 மைல் வடமேற்காய்ப் போக வேணும். வடக்கே இருந்து வருவதானால், மதுரை ஸ்ரீ வில்லிப்புத்தூர் ராஜபாளையம் ரோடு வழியாய் வரவேணும். இந்த வழி வந்தாலும் நல்ல பஸ் வசதியும் உண்டு.

கோயில் வாயிலை ஒரு நல்ல கோபுரம் அழகு செய்கிறது! ஒன்பது தட்டுகளை உடைய இந்தக் கோபுரம் 125 அடி உயரம் இருக்கிறது. இக் கோபுரத்தின் ஒன்பதாவது தட்டிலே ஒரு பெரிய மணி தொங்குகிறது. அந்த மானி அங்குள்ள இயந்திரத்தின் துணைகொண்டு இரண்டு நாழிகைக்கு ஒரு முறை அடிக்கிறது. அதனால் அதனை நாழிகைக் கடிகாரம் என்று வழங்கியிருக்கின்றனர். சென்ற ஐம்பது ஆண்டுகளாகக் கடிகாரம் ஓடுகிறதில்லை மனியும் அடிக்கிறதில்லை.

கோபுரத்தின் முன்பு ஒரு பெரிய மண்டபம். இக்கோயில் மூன்று பெரும் பகுதி களாக இருக்கிறது. தெள் புறத்தில் சங்கர
சங்கர நாராயணன்

லிங்கர் சந்நிதி. வடபுறத்தில் கோமதி அம்மையின் திருக்கோயில். இருவருக்கும் இடையே சங்கர நாரணர் சந்நிதி. கோபுர வாயிலில் துழைந்து நடந்தால் நாம் முதலில் சென்று சேர்வது சந்நிதியில் தான், சங்கரலிங்கர் புற்றிடம் தோன்றியவர். ஆதலால் அவரை வன்மீகநாதர் என்றும் அழைப்பர். ஆதியில் இந்த இடம் முழுதும் புன்னைவனமாக இருந்திருக்கிறது. வனத்தைக் காத்து வந்த காவல் பறையன் அங்கிருந்த புற்றை வெட்ட, புற்றில் ஒரு பாம்பும் லிங்கமும் இருந்திருக்கின்றன. இந்தத் தகவலைத் திருநெல்வேலியை அடுத்த மணலூரில் இருந்து அரசாண்ட உக்கிர பாண்டியனிடம் சொல்ல, உக்கிர பாண்டியன் காட்டை வெட்டித் திருத்தி நாடாக்கிக் கோவிலையும் கட்டியிருக்கிறான், காவல் பறையன் சொல்வதற்கு முன்பே உக்கிர பாண்டியனின் பட்டத்து யானையும் கொம்பினால் தரையைக் குத்தியிருக்கிறது. அந்த இடத்திலிருந்து மன் எடுத்து வந்தே திருவிழா எல்லாம் நடத்தியிருக்கிறான் பாண்டியன்,

யானை கொம்டால் குத்திக் காட்டிய இடமே பெருங்கோட்டூர் என்று வழங்குகிறது. காவல் பறையனுக்கும் ஊரின் தென் கோடியில் ஒரு சிறு கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் இருக்கும் தெருவே காப்பறையன் தெரு என்றும் இன்று வழங்குகிறது. காவல் பறையன், உக்கிர பாண்டியன் சிலைகள் எல்லாம் கோயிலில் இருக்கின்றன, சங்கரலிங்கர் கோயிலின் வடமேற்கு மூலையில் புற்றும் இருக்கிறது. புற்றைச் சுற்றிக் கட்டிப் பாதுகாத்து வருகின்றனர். இந்தத் தலத்துக்கு வருவோரது உடற்பிணியெல்லாம் இந்தப் புற்று மண்ணால் நீங்குகிறது. ஆதலால் கோயிலில் பிரசாதமாகவே இப்புற்று மண்னை வில்லைகளாக ஆக்கிக் கொடுக்கின்றனர்.

இக்கோயிலில் உள்ள சங்கர லிங்கரைவிடப் பிரபலமானவள் கோமதி அம்மையே. முன்னமேயே தெரிந்து கொண்டிருக்கும் தாயாகிய தத்துவத்தை. கோமதியம்மை வடிலில் இங்குக் கோயில் கொண்டிருக்கிறது அந்தத்தத்துவமே கிட்டத்தட்ட இரு நூறு வருஷங்களுக்கு முன்பு திருவாவடுதுறையில் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் வேலப்ப தேசிகர். அவர் சங்கரன் கோயிலுக்கு வந்து, கோமதியம்மையின் அருளைத் துணைக்கொண்டு, குட்டம், குன்மம் முதலிய் தீராத நோய்களையும் தீர்த்தருளியிருக்கிறார். அவர் கோமதியம்மையின் சந்நிதியில் ஒரு மந்திர சக்கரத்தைப் பதித்திருக்கிறார். அந்தச் சக்கரத்துக்கு கோமதியம்மை தந்தருளிய சக்தியினாலே அங்கு ஆடாத பேயும் ஆடுகிறது தீராத நோயும் தீர்கிறது. ஆதலால் கோமதி அம்மையின் - பிரபாவம் நாளும் வளர்ந்தோங்கி வருகிறது. கோமதியின் சந்நிதிக்கெதிரேதான் நாகசுனைத் தீர்த்தம் இருக்கிறது.

சங்கர லிங்கரும் கோமதியும்தான் ஆதியிலேயே தோன்றிய சந்நிதிகள், இடையில் தோன்றியவர்தான் சங்கர நாராயணர். உலகில் உள்ள மக்களுள் சிவனை வழிபடும் சைவர்கள் உண்டு. விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள் உண்டு. இவர் ஏதோ அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை மட்டும் வழிபட்டார்கள் என்று இல்லை. ஒருவர் மற்றவரைக் குறை கூறுவது, அவர்களோடு வாதிடுவது என்று நெடுகிலும் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரன் அதிகன் என்று சைவர் சொன்னால், இல்லை உலகளந்த அரி அதிகன் என்றே வாது செய்திருக்கிறார் வைஷ்ணவர். 'ஆலம் உண்டான் எங்கள் நீலகண்டன்' என்று சைவர் வீறாப்புக் கூறினால் வைஷ்ணவரும் விட்டுக் கொடுக்காமலேயே 'அண்டம் உண்டபோது அந்த ஆலம் உண்ட கண்டனையும் கூட உண்டிருக்கிறான் எங்கள் மால்' என்று பேசியிருக்கிறார்.

மக்களில் மாத்திரம் அல்ல நாகர்களிலும் இச்சைவ வைஷ்னவச் சண்டை நடந்து வந்திருக்கிறது. சங்கரன், பதுமன் என்று இரண்டு நாகர்கள். சங்கரன் சிவபக்தன், பதுமன் விஷ்ணு பக்தன். இவர்களுக்குள்ளும் இந்த வாதம். இப்படிப் பலர் வாதிட அன்னை கோமதிக்கே, ஆம், பார்வதிக்கே சந்தேகம் வந்துவிடுகிறது. இருவரும் ஒருவரேதாமா, இல்லை வேறு வேறு நபர்கள்தாமா என்று. இதைக் கேட்டிருக்கிறாள் அவள் இறைவனிடம், அவர் என்ன அவ்வளவு எளிதில் விடை சொல்லி விடுவாரா? மண்ணுலகத்தில் புன்னை வனத்தில் சென்று தவமிருக்கச் சொல்லியிருக்கிறார். அப்படியே அன்னையும் அங்கு வந்து தவம் கிடக்கிறாள். ஆடி மாதம் பௌர்ணமி அன்று சங்கரனார் சங்கர நாராயணர் உருவில் வந்து அம்மைக்குக் காட்சி கொடுத்திருக்கிறார். சங்கரன் கோயிலில் சிறப்பாக நடைபெறும் ஆடித் தவசு உற்சவம், இந்தச் சங்கர நாராயணர் காட்சியை விளக்க எழுந்ததே. இந்த சங்கர நாராயணர் கோலத்தைத்தான் பொய்கை ஆழ்வார்,

அரன் நாரணன் நாமம்
ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல் மறை: உறையும்
கோயில் - வரைநீர்

கருமம் அழிப்ப அளிப்பு
கையில் வேல் நேமி
உருவம் கார் மேனி ஒன்று

என்று பாடிப் பரவியிருக்கிறார். இதனால் அரி, அரன் எல்லோரும் ஒன்றே, அயனும் அரியும் அரனார் திருவுருவில் அடங்கினவரே என்ற உண்மை நிலைபெற்றிருக்கிறது. ஆம், அம்பிகை கோமதி மாத்திரம் அல்ல. சங்கரனும் பதுமனுமே இச் சங்கர நாராயணர் காட்சியைக் கண்டு உண்மையை உனர்ந்த கொண்டிருக்கின்றனர்.

ஐய! நின் கூறே மாலும்
அயன் முதல் தேவும் என்னும்
மெய்யுணர்வே எஞ்ஞான்றும்
விளைவுற வேண்டும்

என்று நாமேல்லாரும் சேர்ந்து பாடவும் தெரிந்து கொண்டிருக்கிறாேம், இந்தச் சங்கர நாராயணரே, அத்தன் சங்கர லிங்கருக்கும் அம்மை கோமதிக்கும் இடையில் எழுந்தருளியிருக்கிறார். மூலவர் கம்பீரமான வடிவர். அதிலும் பகுதி பகுதியாகக் காப்பிட்டுக் காட்டும்போது இரண்டுருவும் ஒன்றாய் இனைந்து நிற்கிற கோலம் பேரழகு.

இந்தச் சங்கர நாராயணரைப் பற்றி ஒரு சுவையான வரலாறு. கி.பி. 17Ti-ல் திருமலை நாயக்கரது தானாதிபதியாக இந்த வட்டாரத்தில் இருந்தவர் பொன்னம்பலம் பிள்ளை. அப்போது நாயக்கரது தளவாயாக இருந்தவர் ஆறை அழகப்ப முதலியார். சங்கரன் கோயில் சங்கர நாராயணரைச் செண்பசுக் கண்ணு பட்டர் என்பவர் திருடிக் கொண்டு போய் உத்தரகோச மங்கையில் அடகு வைத்துவிட்டார். ராமநாதபுரம் சேதுபதி விஜயரகுநாதத் தேவர் அத்திருவுருவைக் கோயில் மூர்த்திகளுடன் வைத்துப் பூசை செய்ய உத்தரவிட்டிருந்தார். இத்தகவல் அறிந்து ஆறை அழகப்ப முதலியார் பொன்னம்பலம் பிள்ளையை அனுப்பித் திருவுருவை மீட்டு வரச்சொல்லியிருந்தார். பொன்னம்பலம் பிள்ளை உத்தரகோச மங்கை சென்று திருவுருவைக் கண்டு ஒரு பாட்டுப் பாடினார்;

புற்றெங்கே! புன்னை
வனம் எங்கே? பொற்கோயில்
சுற்றெங்கே? நாக
சுனை எங்கே?-இத்தனையும்
சேரத்தான் அங்கிருக்கத்
தேவரீர் தான் தனித்தித்
தூரத்தே வந்தென்ன சொல்.

உடனே பெருமானும்.

விள்ளுவமோ சீராசை
வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளில் செண்பகக்கண்
நம்பியான்-மெள்ளவே
ஆடெடுக்கும் கள்ளரைப்போல்
அஞ்சாத எமைக் கரிசல்
காடுதொறுமே இழுத்தக்கால்

என்று பாடியிருக்கிறார். இவ்விஷயம் சேதுபதி காதில் விழ, பொன்னம்பலம் பிள்ளை மூலமே திரும்பவும் மூர்த்தியைச் சங்கரன் கோயிலுக்கு அனுப்பியிருக்கிறார்.

உக்கிர பாண்டியர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார். அக்காலத்தே கருவை நகரில் உள்ள பிரகத்துவஜ பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்திருக்கிறார். இத்தலத்துக்கு ஒரு புராணம். சீவலமாற பாண்டியன் பாடியிருக்கிறார். அவர் இவ்வூரில் ஒரு குளம் வெட்டியிருக்கிறார். அது சீவலப்பேரி என்ற பெயரில் உடைகுளமாக இருக்கிறது. அவர் பெயராலேயே சீவலராயன் ஏந்தல் என்ற ஊரும் எழுந்திருக்கிறது.

மூவர் முதலிகள் இக்கோயிலுக்கு வந்து பதிகங்கள் பாடியதாக வரலாறு இல்லை. அன்பர் ஒருவர் சங்கர சதாசிவமாலை என்று ஒரு நூல் இயற்றியிருக்கிறார். எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை. அன்னையின் அருள் சக்தியை உணர்ந்த திருநெல்வேலி அழகிய சொக்கநாதபிள்ளை பாடல்கள் பிரசித்தமானவை. அதில் ஒரு பாட்டு, அன்னைக்கே சவால் விடும் பாட்டு.

கேடாய் வரும் நமனைக்
கிட்ட வராதே தூரப்
போடா எனவோட்டி உன்
பொற் கமலத்தாள் நிழற்கீழ்
வாடா என அழைத்து
வாழ்வித்தால் அம்ம! உனைக்
கூடாதென்று ஆர் தடுப்பார்?
கோமதித்தாய் ஈசுவரியே!

என்பது பாட்டு, எவ்வளவு உறுதியான உள்ளத்தில் இருந்து பிறந்திருக்கிறது. யமனையே தூரப் போடா என்று ஓட்டி, தன்தாள் நிழலுக்கு வாடா என அன்னையால் அழைக்க முடியாதா என்ன? ஆம்! அப்படி அழைப்பாள் என்று நம்புகிறான் கவிஞன், நாமும் அப்படி நம்பிக் கொண்டே வீடு திரும்பலாம்.