அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராமாவதாரத்தின் முன் இரகசியங்கள்

இராவணன் கொடுமை
அப்போதுராமர் அய்யதிருமாலை
இப்போதுபடைக்க ஈசுரனர்சம்மதிக்க
படைக்கும்பொழுது பரமசிவனார்
நடக்குந்திருமால் நாதனைப்பார்த்தேதுரைப்பார்
அவ்வுலகிலென்னை அதிகதசாதர்க்கு
இவ்வுலகுவிட்டங் கென்னைப்பிறவிசெய்ய
வந்தவிபரம் வகைவகையாயீசுரரே
எந்தனக்குத்தாமைத் தென்னையனுப்புமென்றர்
மாயனது கேட்க மறையோனகமகிழ்ந்து
தூயவருமங்கே சொல்லுகிறாரம்மானை
பரலோகமென்ற பைம்பொன்கையிலையதில்
சாலோகந்தன்னில் தானிருந்தமாமுனிவர்
துசுவீசுமாமுனியுஞ் சுகசீலமாமுனியும்
விசுவாசமாயிருந்து விசாரமதிட்டனராம்
வாருந்துசுவீசு மாமுனியே நீ கேளும்
நீரும் நாமும்கூடி நீனிலத்தில்போயிருந்து
நானுமொரு பெண்மதலை நல்லமகவாக
தானுமோராண்மதலை தலைவன றனைவாங்கி
சம்மந்தமாகித் தானிருந்துநாடாண்டு
உம்மந்தமான உதவிபெறவேணுமென்று
இருபேருமிருந்தெனை நினைந்துமாமுனிவர்
உருவேத்திவேள்வி ஓமமதுவளர்க்க
இந்தப்படியே இவரகளிருமாமுனியும்
எந்தன்றனை நோக்கி யிருந்தார்தவாசுகாஅண்டீர்