அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/கவிஞர் கட்டிய அணை


(79) விஞர் ட்டிய ணை


பாரசீக நாடு கவிஞர் பெர்தெளசியின் கவிதையால் பெருமை அடைந்தது.

கவிஞர், பாரசீக வரலாற்றை ஈரடியாக ஆயிரம் செய்யுளாக எழுதும் பணியை மேற்கொண்டார்.

பாரசீக மன்னன், அந்த ஆயிரம் கவிதைகளுக்கும் ஆயிரம் பொன் பரிசு அளிக்குமாறு கட்டளையிட்டான்.

மன்னனின் பரிசைக் கொண்டு, தாம் வாழ்ந்துவந்த நகரத்திலே அணை ஒன்றைக் கட்டி விடுவது என்பது கவிஞரின் திட்டம்.

'பாரசீக வரலாறு' பாக்களாக இயற்றப்பட்டது.

பரிசு அளிக்கும் தருணத்தில் அமைச்சரின் துர்ப்போதனையால் மன்னனின் மனம் மாறியது. ஆயிரம் பொன்னுக்குப் பதிலாகக் கவிஞருக்கு ஆயிரம் வெள்ளி நாணயங்களை அனுப்பச் சொன்னான் மன்னன்.

மன்னன் சொன்ன சொல்லைத் தவற விட்டானே என்று கவிஞரின் மனம் குமுறியது. அரசன் அனுப்பிய பரிசை தாம் ஏற்றுக் கொள்ளாமல், அரண்மனைச் சிப்பந்திகளையே அவற்றைப் எடுத்துக் கொள்ளும்படி கொடுத்து விட்டார் கவிஞர்.

அதை அறிந்த மன்னன், சினம் கொண்டான். 'கவிஞரின் தலையைக் கொண்டு வா” என்று ஆணையிட்டான். - -

ஆனால், கவிஞரின் தலை கொய்யப் படுவதற்குள் என்னவோ, மன்னன் மனம் மாறி தன் தவற்றை உணர்ந்தான்.

முன்னர், அறிவித்தது போல இன்னும் ஒரு மடங்கு சேர்த்து இரண்டாயிரம் பொன்னைக் கொடுத்துக் கவிஞரை அழைத்துவருமாறு பணித்தான்.

ஆனால், மன்னனின் இரண்டு மடங்கு பரிசைப் பெறக் கவிஞர் உயிரோடில்லை. .

என்றாலும், கவிஞரின் சகோதரி, மன்னன் அளித்த பொன்னைப் பெற்றுக் கவிஞர் திட்டமிட்டிருந்த அணையைக் கட்டி முடித்தார். கவிஞரின் விருப்பம் நிறைவேறியது.

'கவிஞர் கட்டிய அணை' என்று பாரசீகம் அதைக் கொண்டாடியது.