அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/கொள்கைப்படி நடந்தார்


(42) கொள்கைப்படி டந்தார்



கிரீஸ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன், பெரிய தத்துவ அறிஞர் ஒருவர் இருந்தார்.

“ஒரு காரியத்தை விட, இன்னொரு காரியம் சிறந்தது என உறுதியாகக் கூறுவதற்கு ஏற்றபடி அறிவை யாரும் அடைந்து விட முடியாது' என்ற 'ஐயக் கொள்கை”, அவருடைய கொள்கையாகும்.

இந்தக் கொள்கையைக் கற்றுக் கொடுத்த இவருடைய ஆசிரியர் ஒரு நாள் வழியில் போய்க் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் ஒரு குழியில் விழுந்து விட்டார். அவரால் வெளியே வர இயலவில்லை. -

அந்தச் சமயத்தில் அவ்வழியாக வந்த சீடர் தத்துவ அறிஞரின் நிலைமையைப் பார்த்தார். “இந்தக் கிழவரை வெளியே தூக்கி விடுவதால் ஏதேனும் நன்மை உண்டாகும் என்று எண்ணுவதற்குப் போதுமான காரணம் இல்லை” என

முடிவு செய்து, அவரை வெளியே தூக்கி விடாமலேயே போய்விட்டார்.

சிறிது நேரத்தில், அவ்வழியே சென்ற பொது மக்களில் சிலர் கிழவரை வெளியே தூக்கி விட்டதோடு, இரக்கம் இல்லாமல் நடந்து கொண்ட சீடரான தத்துவ அறிஞரை கண்டித்தனர்.

ஆனால், குழியில் விழுந்த கிழ ஆசிரியரோ, தாம் கற்றுக் கொடுத்த கொள்கைப்படியே தம்முடைய சீடர் நடந்து கொண்டதற்காக அவன்ரப் பாராட்டி மகிழ்ந்தார்.