அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/வறுமையிலும் கைகொடுத்தது


(81) றுமையிலும் கைகொடுத்தது


உலகின் தலைசிறந்த தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ். அவருடைய பொருளாதார நூலைப் படித்தே தம்முடைய

அறிவை வளர்த்துக் கொண்டதாக, புகழ் பெற்ற மேதை பெர்னார்ட்ஷா கூறுகிறார்.

இன்று மனிதகுலம் தலை நிமிர்ந்து வாழ வழி வகுத்துக் கொடுத்த மாபெரும் மேதை கார்ல் மார்க்ஸ். எத்தனையோ இன்னல்களிடையே சிக்கித் தவித்தார். வறுமை அவரை வாட்டி வதைத்தது. இல்லாமை என்னும் கொடுமை அவரைப் பிழிந்து எடுத்தது.

1862ம் ஆண்டில் ரஷ்ய நாட்டிலே பிரசித்தி பெற்ற வழக்கு ஒன்று நடைபெற்றது. அதில் நடந்த வாதப் பிரதி வாதங்களையும், சட்டப் பிரச்சனைகளையும் எழுதி நூலாக வெளியிட மார்க்ஸ் விரும்பினார். அந்த வழக்கை உள்ளது உள்ளபடியே தொகுத்துத் தருவது தான் மக்களுக்குப் பயன் தரும் என்பது அவர் கருத்து.

ஆனால், மார்க்ஸின் அன்றுள்ள நிலைமையில் காகிதம் வாங்கக்கூட அவரிடம் காசு இல்லை!

உள்ளமோ அவரை எழுதத் தூண்டியது. ஆனால், பொருளாதாரமோ கையைக் கடித்தது. என்ன செய்வது என்ற சிந்தனை. -

உடனே, தம்மிடமிருந்த மழைக் கோட்டை விற்றார். காகிதம் வாங்கினார். இரவும் பகலுமாக உட்கார்ந்து எழுதி முடித்தார்.

வறுமை வாட்டிய போதும் அந்த அரிய நூலை எழுதத் தம்மிடம் இருந்த மழைக்கோட்டு உதவியதே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டார் அறிஞர் கார்ல் மார்க்ஸ்.