அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/வாய்ப்பும் வரவேற்பும்



6. வாய்ப்பும் வரவேற்பும் !


வாய்ப்புகளுக்கு மற்றொரு பெயர் தான் வாழ்க்கை. இதைத் தான் ஆங்கிலத்தில் Life என்கிறார்கள்.

முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் கட்டாயம் இருந்தாக வேண்டும். வாய்ப்புகள் தான் மனிதர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்துவனவாக அமைந்து விளங்குகின்றன.

வருகின்ற வாய்ப்பினை ஒருவன் எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதை வைத்துக் கொண்டே நாம் அவனைப்பற்றி: சரியாகக் கணித்து விடலாம்.

வாய்ப்புகளுக்காகக் கா த் தி ரு ப் ப வன் வடிகட்டிய முட்டாள். தீக்குள் கையை வைத்த பிறகு சுடுகிறது என்று உளறி உணருகின்ற புத்திசாலி வர்க்கத்தைச் சேர்ந்தவன்.

வந்த வாய்ப்புக்களைக் கண்டு அஞ்சி, பேதலித்து, என்ன செய்வதென்று புரியாமல், பயந்து, ஓடி ஒளிந்து' ஒதுங்கி வாழ்பவன் மற்றொரு வகை.

வாய்ப்புக்கள் தனக்கு சாதகமாக இல்லை. இன்னும் பல வந்த பிறகு நான் முயற்சிப்பேன் என்று கையில் இருக்கும் கோழியை விட்டு விட்டு, முட்டையிலிருந்து வெளிவரப்போகும் குஞ்சினைப் பெரிதாக எண்ணிக் காத்திருக்கும் கழிசடைப் பேதை இவன்.

வாய்ப்புக்களை அரைகுறையாகப் புரிந்து கொண்டு. ஆசையிருக்கும் அளவுக்கு அறிவு போதாமல், திறமை இல்லாமல், திண்டாடித் திண்டாடித், தோல்விகளைச் சுமந்து நிற்கும் இரண்டாந்தர புத்திசாலி இனத்தவன் இவன்.

வராத வாய்ப்புக்களை தனக்கேற்ப உருவாக்கி, வந்திறங்கும் சோதனைகளை லாவகமாக ஏற்று, சாதனை புரிந்து வெற்றி அடைகின்றானே. அவனே அனைவருக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறான். மற்றவர்களைவிட மேம்பட்டு நிற்கிறான். அவனே முதல்தர மனிதனாவான்.

சந்தர்ப்பங்களை நானே உருவாக்கிக் கொள்கிறேன்? என்று சொல்லிய நெப்போலியன் தான், சாதாரண குடும்பத்தில் பிறத்தாலும் சக்கரவர்த்தியாக உயர்ந்து புகழ் பெற்றான்.

அந்த நெப்போலியனையும் போரில் வென்ற நெல்சன் எனும் ஆங்கிலேய வீரன், 'போர்க்களத்தில் சாகசங்கள் புரிய எனக்கு உதவிய ஆற்றல்களை எல்லாம். நான் ஆடுகளத்தில் விளையாடும்பொழுது கற்றவைகள் ஆகும் 'என்று கூறி மகிழ்ந்தான்.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு குட்டிக் கதையை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

ஒரு எலி தன் வாரிசுக்கு மணமகன் தேடி அலைந்ததாம். வானத்து சூரியனைப் பார்த்து நீ தான் மணமகன் என்ற போது, என்னையே மறைக்கின்ற பலசாலி மேகம்தான் அங்கே போய் கேள் என்றதாம்.

மேகத்திடம் சென்றபோது, என்னையே அலைக்கழிக்கின்ற ஆற்றல் இந்தக் காற்றுக்குத்தான் இருக்கிறது. அவன்தான் சரியான ஆள் என்று சொல்லி அனுப்பி வைத்ததாம்.

காற்றுக்கோ கவலைமேல் கவலை, 'தான். எப்படித்தான் சுழன்றடித்தாலும், இந்தக் குட்டிச் சுவர் என்னைத் தடுத்து நிறுத்தி விடுகிறதே' என்று குட்டிச்சுவர் பக்கம் கைகாட்டி விட்டு மறைந்து போனதாம்.

குட்டிச் சுவரோ கண்கலங்கி கீழே காண்பித்ததாம். என்னையே பறித்து ஆட்டுவிக்கும் ஆண்மையாளன் கீழே இருக்கிறான் என்று காட்டியதாம்.

அங்கே ஒரு எலி இருந்ததாம். கதை எப்படி?

எலிக்குத் தனக்கு தேவையானவன் தன் இடத்திலேயே தன் இனத்திலேயே இருப்பது தெரியாமல், அலைந்தது போல் தான், இன்று விளையாட்டுக்களைப் பற்றிப் புரியாமல் வீரர் களையும் விவேகிகளையும் பலர் தேடிக் கொண்டிருக் கின்றார்கள்.

வாட்ட லூர் போரில் நெப்போலியனை வெல்லுதற்குரிய ஆற்றல்களைத் தந்தது. விளையாட்டு மைதானத்தில் நான் பெற்ற வாய்ப்புகள்தான் என்று வெற்றித்தலைவன் நெல்சன் கூறிய வாசகத்தை மீண்டும் மீண்டும் படியுங்கள்.

விளையாட்டு மைதானத்திலே அப்படி என்ன கிடக் கிறது? கிடைக்கிறது? வெறும் வெட்டவெளிதானே அது’ பொட்டல் மண்தானே என்று பேசுகிறீர்களா?

வெட்ட வெளியிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சுகங்களும் அறிவு முகங்களும் தாம் எத்தனை எத்தனை?

கொஞ்சம் குனிந்து காது கொடுங்கள்.

மைதானத்திற்கு வந்து சேர்கின்ற மக்களை எப்படி எப்படியெல்லாம் ஆடுகளங்கள் வாரி அணைத்து வாய்ப்புக் களை வழங்கி, வல்லமையை வளர்த்து விடுகின்றன தெரியுமா?

விளையாடுபவர்களை தனிப்பட்டவர்கள், கூட்டாக சேர்ந்து ஆடுபவர்கள் என்று முதலில் பிரித்துக் கொள்வோம்.

தனியாக விளையாடுவோருக்கு என டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வளைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் போன்ற ஆட்டங்கள்.

இந்த ஆட்டங்களில் ஒரு முறை போடும் ஒரே சர்வீஸ் வாய்ப்பு, பூப்பந்தாட்டத்தில் மட்டும்.

டென்னிஸ் ஆட்டத்தில் இரண்டு வாய்ப்பு.

டே பிள் டென்னிஸ் ஆட்டத்தில் வலையில் பட்டு சரியாக பந்து விழுந்தால் மீண்டும் ஒரு வாய்ப்பு.

இப்படிச் செய்வதை சரியாகச்செய்ய, முறையாகச் செய்ய விளையாட்டுக்களில் வாய்ப்பு.

தவறுக்குரிய தண்டனை உடனே தரப்பட்டு, நேரே சென்று நெறியாய் நின்று இலக்கினை அடைந்து கொள் என்று எச்சரித்து எழில்படுத்தும் மாண்பு விளையாட்டுக் களில் மட்டுமே உண்டு.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கூறப்படும் மொழிக்கு உண்மை சான்றாக விளையாட்டுக்கள் தான் விளங்குகின்றன.

கைப்பந்தாட்டத்தில் பாருங்கள். ஒரு தடவை பந்தை மறுபுறத்திற்கு அனுப்ப, மூன்று தடவை விளையாடும். வாய்ப்பு.

பூப்பந்தாட்டத்திலே ஒரே முறைதான் ஆடலாம். தவறே சரியோ ஒன்றுடன் முடிந்து போகிறது. கைப்பந்தாட்டத்தில் மூன்று முறை வாய்ப்பு. திறமாக சேர்ந்து விளையாடித்தாள் ஆகவேண்டும் என்ற கட்டாயம். கடுமையான கட்டளை. வாய்ப்புக்களால்தானே வீரர்கள் விந்தைமிகு சாதனைகளைப் புரிகின்றார்கள்.

ஒடுகளப்போட்டிகளில் வாருங்கள்.தாண்டும் போட்டியில் 6 முறை வாய்ப்புக்கள். எறியும் போட்டிகளில் அப்படித்தான்.6 முறைகள்.

உயரத் தாண்டும் போட்டிகளில் ஒரு உயரத்தைத்தாண்ட வாய்ட்புக்கள்.

அது மட்டுமா!

கூடி விளையாடினால்தான் ஒற்றுமை நெஞ்சங்களைக் கூட்டமுடியும். உயர்ந்த ஆற்றல்களைக் காட்டமுடியும். இதற்கான வாய்ப்புக்களைத்தான் விளையாட்டுகள் வழங்குகின்றன.

கூடைப்பந்தாட்டத்தில் கொடுத்து வாங்கி, பத்தடி உயரத்தில் உள்ள இலக்குக்குள் பந்தைப் போடுதல், இதற்கு எத்தனை ஒற்றுமை வேண்டும்! எப்படிப்பட்ட இனிய வாய்ப்புக்கள்.

கால் பந்தாட்டத்தில், வளைக்கோல் பந்தாட்டத்தில் ஒருவருக்கொருவர் பந்தைக் கொடுத்து வாங்கி ஒற்றுமையாக ஒடி ஆடி, இலக்கிற்குள் பந்தைச் செலுத்தும் பாங்கு.

தனி மனிதன் திறமையைவிட குழு ஒற்றுமைக்கான கோடி வாய்ப்புகள் .

கோகோ ஆட்டத்தில் ஒருமுறை அவுட்டானால், அவ்வளவுதான். கபாடி ஆட்டத்தில் ஒருமுறை அவுட் ஆனாலும், மீண்டும் விளையாட வாய்ப்பு தவறாகாமல் நடந்து கொள் என்ற கட்டளை. கோகோ ஆட்டத்தில் தவறுவது இயற்கை. மீண்டும் தவறாதே என்று வாய்ப்பினைத் தந்து ஆடஉதவும் வாய்ப்பு கபாடியில்.

இப்படி, மனித மனங்களுக்கு ஏற்றவாறு, மனித குணங்களைப் போற்றுமாறு, வாய்ப்புக்களை வழங்கி, வரவேற்பினை அளிப்பது விளையாட்டுக்கள் தாம்.

விளையாட்டில் நல்ல பண்புகளுடன் வெற்றி பெறவேண்டும் என்பதே தலையாய கொள்கை. ஒரு சமுதாயத்திற்கு இதுதானே அடித்தளம். ஆதாரமான நிலைத்தூண்கள்.

இந்தப் பண்புகளை வளர்க்கத்தானே விளையாட்டுக்கன் முயல்கின்றன. மைதானங்கள் உதவுகின்றன. வாய்ப்புக்கள் வழிகாட்டுகின்றன. வெற்றிகளை நிலை நாட்டுகின்றன.

விளையாட்டுக்கள் இவ்வாறு அர்த்தம் உள்ளவைகளாக விளங்குகின்றன.ஏனென்றால் விளையாட்டுக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும். மனிதர்களின் உடன்பிறப்பாகும்.