ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்


ஆசிரியர்
பொ. திருகூ.ட சுந்தரம் எம்.ஏ., பி.ல்.


முகவுரை
கனம் எம். பக்தவத்சலம்
சென்னை மாநில முதலமைச்சர்


அணிந்துரை
உயர்திரு கு. காமராஜ்
இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர்


ஸ்ரீபாபுஜி பதிப்பகம்
35/1, டாக்டர் பெஸன்ட் ரோடு
சென்னை -1
 :

முதற் பதிப்பு : குடும்பக் கட்டுப்பாடு வாரம் 5.12.1966

உரிமை : ஆசிரியரது விலை : ரூ. 1.25

ஆசிரியர் 1891-ஆம் ஆண்டில் பிறந்தவர். 5வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றார். எம்.ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப்பதக்கம் பெற்ற பேரறிஞர். 1924-ல் வக்கீல் தொழிலைப் புறக்கணித்து காங்கிரஸில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். காந்தியடிகளின் தத்துவங்களை முதன்முதலில் மொழிபெயர்த்து தமிழர்க்கு உதவினார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்து வந்தார். கள்ளுக்கடை மறியல் நடத்தி சிறை சென்றார். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்திலும், தமிழிலும் பாண்டித்தியமுடையவர். சென்னை செனட் சபையில் அங்கம் வகித்தார். இலக்கியங்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் உடையவர், இலக்கிய கர்த்தாக்களின் குறிக்கோள் என்ன என்பதை சிறிதும் தயக்கமின்றி எடுத்து உரைக்கும் தன்மையுடையவர். தேச முன்னேற்றத்திற்கும் மக்கள் வாழ்வு நலம் பெறவும் சிறுவர் அறிவு பெறவும் பல அரிய நூல்களை எழுதியுள்ளார். பல நூல்களுக்கு அரசாங்கம் பரிசுகள் வழங்கி ஆசிரியரைப் பெருமைப்படுத்தியுள்ளது. கலைக்களஞ்சியக் கூட்டாசிரியராக இருந்தார். தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.

சென்னை மாநில முதலமைச்சர்

கனம் எம். பக்தவத்சலம்

முகவுரை


ஆப்பரேஷன் முறையினால் எவ்விதத் தீமையும் இல்லை என்பதற்கு ஆதாரச்சான்றுகள் தந்தும், இம்முறையினால் பெரும் நன்மை உண்டு என்பதை விளக்கியும் திரு. பொ. திருகூடசுந்தரம் அவர்கள் இச்சிறு நூலை எழுதியிருக்கிறார். ஆப்பரேஷன் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இது மிகவும் பயன்படத்தக்க பிரசுரம். தமிழ் மக்கள் இதைஏற்ற முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்பிரசுரத்தை வெளியிடும் ஸ்ரீபாபுஜி பதிப்பக உரிமையாளர் தொடர்ந்து மேலும் மேலும் இம்மாதிரியான மக்களுக்குப் பயன்படக்கூடிய நூல்களை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வெளியீட்டு உரிமையாளருக்கு என் நல் வாழ்த்துக்கள்.

எம். பக்தவத்சலம்

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஜனத்தொகையைக் குறைப்பதற்காக மட்டும் கொண்டு வரப்பட்டதல்ல. பெற்றோர்களின் ஆரோக்கியமும், குழந்தைகளின் நல்வாழ்வும் குடும்பத்தின் சுபீட்சமும் அத்திட்டத்தின் முக்கிய லட்சியங்களாகும். அத்திட்டத்தின் அவசியத்தைப்பற்றி மக்கள் படிப்படியாக உணர்ந்து ஆதரித்து வருகிறார்கள். இன்னும் பெரு வாரியாக மக்கள் இத்திட்டத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உயர்திரு. திருகூடசுந்தரம் அவர்கள் 'ஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம்' என்ற இந்நூலை எழுதியுள்ளார். வெகுகாலமாக இவர் இத்திட்டத்தைப் பற்றி கட்டுரைகள், நாடகங்கள் எழுதியும், கூட்டங்களில் பேசியும் விளக்கி வருகிறார். ஆகவே ஆப்பரேஷன் செய்யும் முறையைப்பற்றியும், அதற்குப் பிறகு எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பாமர மக்கள் கூட நன்றாக உணர்ந்து கொள்ளும்படி மிகவும் தெளிவாகவும், எளிய முறையிலும் இந்நூலை எழுதியிருக்கிறார். சில இயற்கையான வழிகளையும் இதில் விளக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெறக்கூடிய இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்.

கு. காமராஜ்



பதிப்புரை


நம் தேச முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உணவு உற்பத்தியைப் பெருக்குவதும் அதற்குத் தக்கபடி மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமாகும், இதனை உணர்ந்தே நமது நேரு அவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டின் நன்மையை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்று விரும்பினார்கள். அரசாங்க ரீதியில் நாடு முழுவதும் கையாள வகை செய்தார்கள்.

ஆசிரியர் திரு.திருகூடசுந்தரம் குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்தை உணர்ந்து 1921-ம் ஆண்டு விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை என்ற நூலை எழுதி வெளியிட்டு அறிஞர்களின் பாராட்டுதலையும் வாசகர்களின் நம்பிக்கையையும் பெற்றார்கள்.

தற்போது குடும்பக் கட்டுப்பாட்டுக்காக கையாளப்படும் எல்லா முறைகளையும் ஆசிரியர் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அவற்றுள் சாலச் சிறந்தது ஆப்பரேஷன் முறையே என்பதைப் படங்கள் மூலமும் சந்தேகக் கேள்விகளுக்கு தக்கவிளக்கங்களுடனும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்கள்.

எமது பதிப்பகக் குறிக்கோளின்படி குடும்பக் கட்டுப்பாட்டுப் பணியில் பங்கு கொள்ள இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எமக்கு அளித்ததற்கு ஆசிரியர் அவர்களுக்கும் இன் நூல் தேசமுன்னேற்றத்திற்கு உகந்தது எனக் கருதி முன்னுரை தந்து எம்மை ஊக்குவிக்கும் முதலமைச்சர் கனம் எம். பக்தவத்சலம் அவர்கட்கும் மக்கள் நலனே தன் லட்சியம் எனக்கொண்டு மக்கள் நல் வாழ்வுக்குரிய இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உயர்திரு கு. காமராஜ் அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகுக.

வாசகர்கள் இந்த நூலால் அடையும் பயன் ஒன்றே அவர்கள் கூறும் நல்லாசி.

பாபுஜி பதிப்பகம்

உ. தங்கப்பா
பதிப்பக உரிமையாளர்,