இருண்ட வீடு/அத்தியாயம்-9


9

வரவேண்டிய பணம் நல்ல வேளையில்தான் வந்தது


வீட்டு முன்கட்டில் வீட்டுக் காரனும்
"காட்டுமுத்" தெனும் கணக்கனும், ஏதோ
ஓசை காட்டிப் பேசி யிருந்தனர்
அந்த நேரம் அந்த இடத்தில்
பாக்கியும் வட்டியும் பட்டுச் செட்டி
தூக்கி வந்து தொகையாய் எண்ணினான்.
வீட்டுக் காரனும் வீட்டுக் கணக்கனும்
சீட்டை எடுத்துச் செல்கு வைத்தார்
பட்டுச் செட்டி பகருகின்றான்.
இராகுகாலம் எட்டிப்போனபின்
தரவேண் டியதைத் தந்தேன் ஆயினும்
தந்த பணத்தைச் சரியாய் எண்ணிச்
சொந்தப் பெட்டியில் சுருக்காய் வைப்பீர்
என்று கூறி எழுந்து போனான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-9&oldid=1534750" இலிருந்து மீள்விக்கப்பட்டது