இளையர் அறிவியல் களஞ்சியம்/இரத்த அணுக்கள்

இரத்த அணுக்கள் : நம் உடலில் சுழன்று ஒடிக்கொண்டிருக்கும் இரத்தம் சிவப்பு நிறமானது என்பதைக் காயப்படும்போது நம் உடலிலிருந்து வெளிப்படும் இரத்தத்தின் நிறத்திலிருந்து அறிவோம். இது சிறிதளவு பசைத் தன்மை கொண்டதுமாகும். இரத்தம் நீரைவிட அடர்த்தியானது. சராசரி மனிதனின் உடம்பில் ஐந்து லிட்டர் இரத்தம் இருக்கும்.

இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கு என்ன காரணம் ? இரத்தம் திரவ வடிவில் உள்ளது. அதில் நுண்மையான திடப்பொருள்கள் சில உள்ளன. இவைகள் இரத்த அணுக்களாகும். இவற்றுள் மிக முக்கியமானது சிற்றணுக்கள், சிவப்பனுக்கள், வெள்ளையணுக்கள், நுண் தட்டுகள் (Platelets) அல்லது தட்டயம்களாகும். இவை நம் இரத்தத்தில் 46 விழுக்காடாகும். பிளாஸ்மா எனப்படும் நிணநீர் நம் இரத்தத்தில் 54 விழுக்காடு உள்ளது. இதில் 90 விழுக்காடு நீர் கலந்துள்ளது. இரத்தக் குழாய்களில் இரத்த அணுக்கள் ஓட இது உதவுகிறது. ஒரு சொட்டு இரத்தத்தில் கோடிக்கணக்கான சிவப்பணுக்கள் உள்ளதால் இரத்தம் பார்ப்பதற்குச் சிவப்பு நிறமாக உள்ளது. சாதாரணமாக நம் உடம்பில் 25 இலட்சம் கோடி சிவப்பணுக்கள் உள்ளதாகக் கணக்கிட் டுள்ளார்கள்,

இரத்தச் சிவப்பணுக்கள்

சிவப்பணுக்கள் ஒவ்வொன்றும் உட்குழிந்த வட்டத்தட்டுகள் போன்று காணப்படும்.இவற்றின் குறுக்களவு 7.5 மில்லி மைக்ரான். இதன் தடிப்பு 2 மி.மைக்ரான். இதன் மையச் சுற்றளவு 1மி.மைக்ரான். இதன் வெளிப்புறம் தடித்தும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும். இச் சிவப்பணுக்களைச் சுற்றிக் கொழுப்புப் பொருள்கள், நொதிப்பொருள், நீர் அயனி ஆகியன இருக்கும். இதற்கு நியூக்ளியஸ் எனும் மூலக்கூறு இல்லை.

சிவப்பணுக்கள் உடலிலுள்ள எலும்புகளில் உட்பகுதியில் உள்ள மஜ்ஜையில் உற்பத்தியாகி இரத்தத்தில் கலந்து மிதக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் இவை கல்லீரலுள்ளும் மண்ணிரலுள்ளும் புகுந்து அழி கின்றன.

ஆண்களின் ஒரு கனசதுரமீட்டர் இரத்தத்தில் சுமார் 5 இலட்சம் சிவப்பணுக்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குச் சற்றுக் குறைவாக நாலரை இலட்சம் சிவப்பணுக்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். வானில் 1,000அடி உயரத்தில் இருக்கும்போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவை நமக்கு அரிய பணிகள் பலவற்றை ஆற்றுகின்றன. நாம் சாதாரணமாக மூச்சை உள்ளே இழுக்கும்போது பிராணவாயுவை

சிவப்பனுக்கள்

சுவாசிக்கிறோம். நுரையீரலுக்குச் செல்லும் இப்பிராணவாயுவை உடலெங்கும் உள்ள திசுக்களுக்கு எடுத்துச் செல்பவை இச்சிவப்பணுக்களே ஆகும். பின் அங்கிருந்து அசுத்தக் காற்றை நுரையீரலுக்குக் கொண்டு வருகின்றன. இப்பணியை நிறைவேற்றும் வகையிலேயே இரத்தவோட்டம் உடலெங்கும் இடையறாது ஓடிக்கொண்டே இருக்கிறது. சிவப்பணுக்கள் 120 நாட்கள்வரை உயிர் வாழும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்தச் சோகை நோய் உண்டாகும்.

சிவப்பணுக்களைவிட வெள்ளையணுக்கள் உருவில் பெரியனவாகும். ஆனால் எண்ணிக்கையில் வெள்ளையணுக்கள் சிவப்பணுக்களைவிட குறைவாகவே உள்ளன. சுமார் ஆயிரம் சிவப்பணுக்களுக்கு ஒரு வெள்ளையணு வீதம் உள்ளன. வெள்ளையணுக்களுக் கென்று தனி வடிவம் ஏதும் இல்லை. இவை அடிக்கடி தன் உருவை மாற்றிக் கொண்டே இருக்கும்.

வெள்ளணுக்கள்

இரத்தத்தில் நோயைத் தோற்றுவிக்கும் கிருமிகள் நுழைந்துவிட்டால் அவற்றை அழித்தொழிக்கும் பணியை வெள்ளையணுக்கள் செய்கின்றன. இவ்வகையில் உடலின் பாதுகாப்புப் படையாகவே இவை அமைந்துள்ளன. எங்கே நோய்க்கிருமிகள் இருக்கிறதோ அங்கே வெள்ளையணுக்கள் திடீர் வளர்ச்சி பெற்றுப் பெருகிவிடும். இதன் மூலம் நோய்க் கிருமிகளை எதிர்த்து வெள்ளையணுக்கள் போரிடுகின்றன. இப்போரில் தோற்றுமடியும் வெள்ளையணுக்களே சீழாக வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் ஒரு வெள்ளையணு 5.25 நோய்க்கிருமிகளை உட்கொள்ளுகின்றன. முதியவர்களைக் காட்டிலும் இளையோரின் இரத்தத்தில் அதிக வெள்ளையணுக்கள் இருக்கின்றன.

இரத்த அணுக்கள்

நோயின்போது வெள்ளையணுக்கள் வெகுவாகப் பெருகிவிடும் எனக் கண்டோம். இரத்தப் புற்று நோய் ஏற்படும்போது வெள்ளையணுக்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு அளவுக்கதிகமாக உற்பத்தியாகிவிடும் வெள்ளையணுக்களும் எலும்பிலுள்ள மஜ்ஜையிலிருந்தே உற்பத்தியாகி இரத்தத்தில் ஊடுருவுகின்றன. நோயின்போது இல்வுற்பத்திப் பாதிக்கப்படுகிறது. இதனால் நோய்க்கிருமிகள் எளிதாக உடலைப் பாதிக் கின்றன.

தட்டயம்கள்

நமக்கு எப்போதாவது ஏதாவது சிறுகாயம் ஏற்பட்டால் இரத்தம் வெளிவருகிறது. ஆனால் சிறிது நேரத்தில் இரத்தம் வெளியாவது நின்று விடுகிறது. இவ்வாறு இரத்தம் தொடர்ந்து வடிந்துவிடாமல் தடுத்துக் காப்பவை நுண் தட்டுகள் என கூறப்படும் தட்டயம்களேயாகும். சிறுகாயம் ஏற்படும்போது பல தட்டயம்கள் ஒன்று சேர்கின்றன. அப்போது பிராணவாயு அவற்றிலிருந்து ஒரு புதுப் பொருளை உருவாக்கி பிளாஸ்மாவுடன் கலக்கிறது. இது காயத்தின் மீது உறைபடலம் போல் படிய இரத்தப்போக்கு நின்று விடுகிறது. சிறுகாயங்களில் இவ்வாறு இரத்தக் கசிவு தடுக்கப்படுமே தவிர பெரிய இரத்தக் குழாய் உடைப்பால் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்த இவற்றால் இயலாது.

இவையும் எலும்பு மஜ்ஜைகளிலிருந்தே உருவாகி இரத்தத்தை வந்தடைகின்றன. ஒரு கன மீட்டர் இரத்தத்தில் 2.5, இலட்சம் தட்டயம்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றின் வாழ்நாள் சுமார் பத்து நாட்களாகும். இவையும் மண்ணீரல் சென்று அழிகின்றன.