கலைக்களஞ்சியம்/அகோபிலம்

அகோபிலம் கர்நூல் மாவட்டத்தில் சிரவேல் தாலுகாவில் உள்ள ஊர். மாவட்டத்தின் பெரிய விஷ்ணு கோயில் இங்குள்ளது. மலை உச்சியிலும் சரிவிலும் அடியிலுமாக மூன்று கோயில்கள் உள்ளன. அடியிலுள்ள கோயிற் சுவரில் தீட்டப்பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் மிகச் சிறந்தவை. மண்டபத்தின் தூண்கள் 8 அடி சுற்றளவு உடையன. கோயிலைச் சேர்ந்த அகோபில மடம், ஆதிவளர் சடகோப சுவாமிகளால் அகோபிலம் என்னும் ஊரில் நிறுவப்பெற்றது. இது அழகியசிங்கர் மடம் எனவும் வழங்கும். இதன் கிளைகன் ஸ்ரீரங்கம் காஞ்சிபுரம் திருவள்ளூர் முதலிய ஊர்களிலும் இருக்கின்றன.