கலைக்களஞ்சியம்/அசுவத்தாமன்

அசுவத்தாமன் : 1. துரோணன் மகன்; பாரதப் போரில் ஈடுபட்டவன்; சிவனருள் பெற்றவன்; துரியோதனன் ஏவலாற் பாண்டவர் மக்களாகிய இளம் பஞ்ச பாண்டவர்களை பாண்டவ ரென்றெண்ணிக் கொன்றவன்; அருச்சுனனைப் போன்ற வில்வீரன்.

2. மாளவ மன்னனுடைய பட்டத்து யானை. பாரதப் போரில் இது வீமனால் இறந்ததைக் கூறிய தருமன் மொழியைத் தன் மகன் இறந்ததாகத் துரோணன் நம்பி உயிர் விட்டான்.