கலைக்களஞ்சியம்/அமிதசாகரர்

அமிதசாகரர் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களின் ஆசிரியர்; கி. பி. 12 ஆம் நூற்றாண்டினர் ; வேளாளர்; தீபங் குடியில் இருந்த சமணர்; சமண சங்கப் பிரிவான அருங் கலான்வயம் என்னும் குழுவினைச் சார்ந்தவர்.