கலைக்களஞ்சியம்/அம்பர் கிழான் அருவந்தை

அம்பர் கிழான் அருவந்தை அம்பர் என்னும் ஊரிலிருந்த ஒரு தலைவன். அம்பர் சோழ நாட்டில் உள்ளது. இவன், 'கற்ற நாவினன், கேட்ட செவியினன், முற்ற உணர்ந்த மூதறிவாளன், நாகரிக நாட்டத்தன்' எனவும், 'நீடிசைத்தலைவன்' எனவும் பாராட்டப் படுகிறான் (திவாகரம்). இவனைப் பாடிய புலவர் கல்லாடனார் (புறம். 385).