கலைக்களஞ்சியம்/அம்பலவாணக் கவிராயர்

அம்பலவாணக் கவிராயர் (1) சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ள சதுரகிரி அறப்பளீசுரர்மீது அறப்பளீசுர சதகமெனும் அற நூல் பாடியவர் ; இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர் மகனார். காலம் 18 ஆம் நூற்றாண்டு.
(2) அம்பலவாணக் கவிராயர் மருதூரிலிருந்த கவிஞர் ; ஆதித்தபுரி புராணம் பாடிய்வர்.