கலைக்களஞ்சியம்/அம்பலவாண தேசிகர்

அம்பலவாண தேசிகர் அதிசய மாலை, உபதேச வெண்பா, உபாய நிட்டை வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப்பஃறொடை, சிவாச்சிரமத் தெளிவு, தசகாரியம், நமச்சிவாயமாலை, நிட்டைவிளக்கம் என்னும் பண்டார சாத்திரங்கள் பத்தையும், பாஷண்டநிராகரணம், அனுபோக வெண்பா, பூப்பிள்ளையட்டவணை என்னும் நூல்களையும் இயற்றியவர். திருவாவடுதுறை மடத்தலைவர். 15 ஆம் நூற்றாண்டினர்.