கலைக்களஞ்சியம்/அயோத்தி

அயோத்தி இராமன் பிறந்த நகரம் என்றும், ஏழு முத்தித்தலங்களுள் ஒன்று என்றும் கூறுவர். இது கோக்ரா நதியின் கரையில் பைஜாபாத்துக்கு அருகில் இருக்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் இராம நவமி விழாவுக்கு ஐந்திலட்சம் மக்கள் வருவர். அயோத்தி மாகாணமாக இருந்தது; இப்போது உத்தரப் பிரதேச இராச்சியத்தில் சேர்ந்துளது. இங்கு ஜைனக் கோவில்களும் பாபர் மசூதியும் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அயோத்தி&oldid=1454247" இலிருந்து மீள்விக்கப்பட்டது