கலைக்களஞ்சியம்/அயோத்தியாசிங் உபாத்தியாயா

அயோத்தியாசிங் உபாத்தியாயா (1865-1948) இந்தி எழுத்தாளர். இவர் உத்தரப் பிரதேசத்திலுள்ள நிஜாமாபாத் என்னும் ஊரிற் பிறந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தபின் இவர் சொந்த ஊரிலேயே பள்ளி ஆசிரியரானார். அப்போது இவருக்குச் சூமர்சிங் என்ற சாதுவிடம் தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவருக்கு இந்தி இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. ஆங்கிலத்திலிருந்தும் உருதுவிலிருந்தும் இவர் பல நூல்களை மொழிபெயர்த்தார். பின்னர்ச் சட்டக்கல்வி பெற்று நீதிபதியாக வேலை பார்த்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் இவர் 1923-ல் காசிப் பல்கலைக் கழகத்தில் இந்திப் பேராசிரியரானார். அகில இந்திய இந்திக் கழகம் இவருக்குப் பரிசளித்துப் பாராட்டிற்று. சமூகச் சீர்திருத்தத்திலும் இவர் ஆர்வங் கொண்டிருந்தார். உருது, பாரசீகம், வடமொழி ஆகிய மூன்றிலும் இவர் புலமை பெற்றிருந்தார். பி .வெ. ச.