கலைக்களஞ்சியம்/அரசிலி

அரசிலி தென்னார்க்காடு ஜில்லாவில் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் 5 மைலில் இருக்கும் இரும்பை மாகாளம் சென்று, அங்கிருந்து ஒட்டன்பாளயம் வழியாகப் போனால் வடகிழக்கே 3 மைலில் இருக்கிறது. வாமதேவ முனிவர் பூசித்த தலம். சுவாமி அரசிலிநாதர். அம்மன் பெரிய நாயகி. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. இவ்வூர் இப்போது ஒழுந்தியாப்பட்டு என வழங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரசிலி&oldid=1489622" இலிருந்து மீள்விக்கப்பட்டது