கலைக்களஞ்சியம்/அள்ளூர் நன்முல்லையார்

அள்ளூர் நன்முல்லையார் அள்ளூரிலிருந்த பெண்பாற் புலவர். அள்ளூர் என்பது பாண்டி நாட்டிற் சிவகங்கை வட்டத்தில் உள்ளது. கடைச்சங்க காலத்தவர். இவர் பாட்டுக்கள் குறுந்தொகையில் ஒன்பதும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), அகநானூற்றில் ஒன்றும் (46), புறநானூற்றில் ஒன்றும் (306) உள்ளன.