கலைக்களஞ்சியம்/ஆதிவாயிலார்

ஆதிவாயிலார் பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழுதப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை.