கலைக்களஞ்சியம்/இந்திராணி

இந்திராணி இந்திரன் மனைவி. பாற்கடலிலே அமுதத்துடன் தோன்றியவள். இந்திரனைப் போலவே வச்சிரம், சூலம், கதை முதலானவற்றைத் தரித்து, யானைமீது ஊர்ந்துவரும் சத்தி. எப்போதும் இளமையாயிருக்கும் ஏழு மாதர்களில் ஒருத்தி. இந்திரனாகப் பட்டம் பெற்று வருபவர்கள் இவளைக் காதலியாகக் கொள்வது மரபு. இவள் மகன் சயந்தன்.