கவியகம், வெள்ளியங்காட்டான்/இளைஞர்

இளைஞர்
 

தெளிவுடைய கல்வியும் கேள்வியும் மேலான
செயல்களில் தெம்புடையையும்
தேசபக்தி யுமினிய சொற்களுடன் நகைமுகமும்
தேவைகளில் மிதமும் நல்ல
வளமுடைய தேகமும் வாதுசூ தில்லாத
வாக்குங் கூர் மதிவன்மையும்
வழிதவரி நடவாத திடமனதும் பெரியோரா
வழிபடும் வழக்குடையையும்
களவுகர் வங்கோபம் காலம்வீ ணாக்குதல்
கள்கயமை யாதியற்ற
கலையார்வ மொடுங்கல கலப்பான தேகக்
கட்டழகும் வாய்த்திருக்கும்
இளைஞர்களை ஈன்றநன் னாட்டினு
இன்னலுண் டாவதில்லை
என்பதனை யின்றுமக் கன்போடு ரைக்கிறேன்
இவ்வுலகு தானறியவே.