இடம் : முத்துராமலிங்கபுரம், காமராசர் மாவட்டம்

கேள்வி கேட்பவர் :

டாக்டர் மா. சூடாமணி

பங்கு கொள்வோர்

குமார், சீதாராமன், ராஜேஸ்வரி, சுப்பிரமணியம், ஆனந்த்

சூடாமணி : நாம் வசிக்கும் இந்த உலகத்திலே நிலப்பரப்பு அதிகமா? நீர்ப்பரப்பு அதிகமா?

குமார் : நிலப்பரப்புத்தான்.

சூடாமணி : தவறு.

ஆனந்த் நீர்ப்பரப்புத்தான்.

சூடாமணி : நிலப்பரப்பு இல்லையென்றால் நீர்ப் பரப்புத்தானே! நிலப்பரப்பு சுமார் 5 கோடியே 73 லட்சம் சதுர மைல். நீர்ப்பரப்பு சுமார் 13 கோடியே 74 லட்சம் சதுர மைல்...காட்மண்டு -இந்தப் பெயரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

சீதாராமன் : எனக்குத் தெரியும். செஞ்சிலுவைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் பெயர்தான் காட்மண்டு.

ராஜேஸ்வரி 1 இல்லை. அவர் பெயர் காட்மண்டு இல்லை. ஹென்றி டுனான்ட்.

சூடாமணி : ஒரு குறிப்புத் தருகிறேன்.

காட்மண்டு ஒரு நாட்டின் தலைநகரம். இப்போதாவது சொல்ல முடியுமா?

சுப்பிரமணியம் : முடியும். நேபாள நாட்டின் தலைநகரம்தான் காட்மண்டு.

சூடாமணி : ரொம்ப சரி.டில்லி எந்த மாநிலத்தில் இருக்கிறது?

ராஜேஸ்வரி : எந்த மாநிலத்திலும் இல்லை, அதுவே ஒரு மாநிலமாகத்தான் இருக்கிறது.

சூடாமணி: சரியான விடை முன்பு அது பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்தது. 1912ல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. இப்போது அது மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் இருக்கிறது. ஐரோப் பாவின் பால் பண்ணை’ என்று எந்த நாட்டை அழைக்கிறார்கள்?

குமார் : டென்மார்க் நாட்டை.

சூடாமணி: ஆம். அங்கே தாது வளம் மிகக் குறைவு. ஆனாலும் நிலமும் நீரும் நிறைய உண்டு. கூட்டுறவு முறையில் பால் பண்ணைகளைத் துவக்கி நிறையப் பால், வெண்ணெய், பாலடைக் கட்டிகளை ஏற்றுமதி செய்கிறார்கள்..இந்தியாவில் முதல் முதலாகக் கிரிக்கெட் போட்டிப் பந்தயம் நடந்தது எந்த ஆண்டு என்று தெரியுமா?

எல்லோரும் : (மெளனம்)

சூடாமணி : 1907ஆம் ஆண்டு. அதில் ஆங்கிலேயர்கள், பார்சிகள், இந்துக்கள் மூவரும் சேர்ந்து ஆடினார்கள்...'குகன்' என்ற பெயர் யாரைக் குறிக்கிறது?

ராஜேஸ்வரி : இராமர் வனவாசம் போனபோது அவருக்குத் தோழனாக வந்தானே, அவனைத் தான் குறிக்கும்.

சுப்பிரமணியம் : முருகக் கடவுளுக்கும் குகன்' என்று ஒரு பெயர் உண்டல்லவா?

சூடாமணி: ஆம். குகன் என்பது இருவரையுமே குறிக்கும் பெயர்தான். இராமர், தன் தம்பியாகக் குகனை ஏற்றுக்கொண்டதை இராமாயணத்தில் படித்திருப்பீர்கள். அடியார்களின் உள்ளம் என்னும் குகையில் முருகன் வசிப்பதால் குகன்' என்ற ஒரு பெயரும் அவருக்கு உண்டு...சுவாமி விவேகானந்தர் 39 ஆண்டுகளே வாழ்ந்தார். அவரைப் போல் 39 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு தமிழ்க் கவிஞரின் பெயர் தெரியுமா?

ஆனந்த் : மகாகவி பாரதியார்.

சூடாமணி : சரியான பதில், நமக்கு மூன்று விதமான பற்கள் இருக்கின்றன. என்ன என்ன வகைப் பற்கள்?

சீதாராமன் : வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள், இன்னொன்று ..கடைவாய்ப் பற்கள்.

சூடாமணி : கரெக்ட். உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு வெட்டும் பற்கள்; கிழிப்பதற்குக் கோரைப் பற்கள்; அரைப்பதற்குக் கடைவாய்ப் பற்கள்...எல்லா மிருகங்களையும் விட, உடம்பிலே கொழுப்பு அதிகமாக உள்ள மிருகம் எது?

ஆனந்த்: யானை.

சூடாமணி: தவறு.

குமார் : காண்டாமிருகம்.

சூடாமணி : அதுவும் இல்லை.

சீதாராமன் : பன்றி.

சூடாமணி : சரியான விடை. பன்றியின் எடையில் பாதி கொழுப்பாக இருக்கும். அதை உருக்கிச் சுத்தம் செய்து நெய்போலப் பயன்படுத்துகிறார்கள்...இயேசு கிறிஸ்துவுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் தெரியுமா?

சுப்பிரமணியம் : யோசுவா.

சூடாமணி : ரொம்ப கரெக்ட். அதையே கிரேக்க மொழியில் ஏசு என்றார்கள்...நீர் யானைகள் இப்போது எந்த எந்தக் கண்டங்களில் வாழ்கின்றன?

சீதாராமன் : அமெரிக்கா, ஆஸ்திரேலியா.

சூடாமணி : தவறு. அது ஒரே ஒரு கண்டத்தில் தான்...வாழ்கிறது. அது ஆப்பிரிக்காதான். நம் தேசத்தில் அதிகமான அளவில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் எது?

ராஜேஸ்வரி : நெய்வேலி.

சூடாமணி : சரியான விடை. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில்தான் அதிகமான பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. எல்லா மிருகங்களுக்கும் குரல் உண்டு, ஒரே ஒரு மிருகத்தைத் தவிர. அது எந்த மிருகம்?

குமார் : ஒட்டகச்சிவிங்கி.

சூடாமணி : அடடே, குமார் சரியாகச் சொல்லி விட்டானே!...முதல் முதலாக உங்களுக்காகத் தமிழில் வெளி வந்த வாரப் பத்திரிகை எது? அதை நடத்தியவர் யார்?

சுப்பிரமணியம் : அணில்'. அதை நடத்தியவர். தமிழ்வாணன்.

சூடாமணி : அதன் ஆசிரியரா யிருந்தவர்தான் தமிழ்வாணன் அவர்கள். நடத்தியவர் : அணில் அண்ணன் என்ற பெயரில் எழுதி வந்தவை. கோவிந்தன் அவர்கள். வை.கோ. என்றால் அநேகமாக எல்லோருக்கும் தெரியும், புத்தகங்கள் வெளியிடுவதில் பல புதுமை களைச் செய்தவர். பல எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் தோன்ற மிகவும் உதவியவர்.ஜோக் நீர் வீழ்ச்சிக்கு இன்னொரு பெயர் உண்டு. என்ன பெயர் தெரியுமா?

ஆனந்த் : ஜெர்சாப்பா நீர்வீழ்ச்சி.

சூடாமணி : கரெக்ட் பாரதியார் பாரதத் தாயைப் பற்றிப் பாடும்போது முப்பது கோடி முகமுடையாள் எங்கள் தாய் என்று பாடினார். அவர் காலத்தில் 30 கோடி மக்கள்தான் நம் தேசத்தில் இருந்தார்கள். இப்போது இந்திய மக்கள் தொகை எவ்வளவு என்று தெரியுமா?

குமார் 50 கோடி.

சீதாராமன் இல்லை : நான் சொல்கிறேன் 60 கோடி. -

சூடாமணி : 74 கோடியையும் தாண்டிவிட்டது. சுமார் 74 கோடியே 63 லட்சம்..இந்தியாவில் ஒரு மாநிலம் இருக்கிறது. அதில் 5ல் 2 பங்கு மணல் வெளியாகவே அதாவது, பாலைவன மாகவே இருக்கிறது. அது எந்த மாநிலம்?

ராஜேஸ்வரி : இராஜஸ்தான்.

சூடாமணி: சரியான விடை நம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் முதலாக பி. ஏ. பட்டம் பெற்றார் ஒரு தமிழறிஞர். அவர் யார்?

ஆனந்த்: உ. வே. சாமிநாதய்யர்.

சூடாமணி: இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

எல்லோரும் : (மெளனம்)

சூடாமணி: சரி, நானே சொல்கிறேன். அவர் பெயர் சி. வை. தாமோதரம் பிள்ளை. இலங்கையில் பிறந்தவர். பனை ஒலையி லிருந்து பல நூல்களைப் பதிப்பித்தார். பல நூல்களையும் எழுதித் தந்தார். சரி, நம் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருக்கும் ஒருவர், சிறந்த கவிஞராகவும் திகழ்கிறாரே, அவர் பெயர் தெரியுமா?

சுப்பிரமணியம் : எனக்குத் தெரியும். சமீபத்தில் என் அப்பாவுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஒர் அழைப்பு வந்திருந்தது. அதிலே இருந்தது அந்தப் பெயர். அவர்தான் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். பெயர் வி. சி. குழந்தைசாமி. ஆனால், குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதை எழுதுகிறார்.

சூடாமணி : அடேயப்பா! இவ்வளவு தூரம் பார்த்து வைத்திருக்கிறாயே! நம் தேசத்தின் தலைநகராகிய டில்லி எந்த ஆற்றங்கரையில் இருக்கிறது?

ஆனந்த்: யமுனை ஆற்றங்கரையில்.

சூடாமணி : தக்க பதில்... தீவு என்றால் என்ன?

குமார் : சுற்றிலும் கடல் இருக்கும்.

சூடாமணி : கடல் இருந்தால் மட்டும்தானா தீவு என்கிறோம் நாலு பக்கமும் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்டிருப்பதுதான் தீவு. இருளர் என்று சொல்கிறார் களே ஒரு வகைப் பழங்குடிகள், அவர்கள் எங்கே அதிகமாக வசிக்கிறார்கள் ?

சீதாராமன் : கோயமுத்துரிலே,

சூடாமணி : கோயமுத்தூர் நகரிலா?

சீதாராமன் : இல்லை. கோயமுத்துனர் மாவட்டத் திலே.

சூடாமணி : விடை சரிதான். இருந்தாலும், கோயமுத்துார் மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி மலையில் என்று சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்...இந்தியா விலே முதல் முதலாகப் பொது மருத்துவமனை நிறுவப்பட்டது எந்த நகரில்?

ஆனந்த்: டில்லியில், சூடாமணி இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா?

மற்றவர்கள் : (மெளனம்)

சூடாமணி : நானேதான் சொல்லவேண்டுமா? சென்னையில்தான் முதல் முதலாகப் பொது மருத்துவமனை நிறுவப்பட்டது. முதல் முதலாக நகராட்சி அமைக்கப்பட்டதும் சென்னை நகரில்தான்.சென்னையின் முதல் மேயர் யார் தெரியுமா?

குமார் : தெரியும். செட்டி நாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியார்.

சூடாமணி: கரெக்ட்...திருவருட்பா என்ற நூலை இயற்றியவர் யார்?

குமார் : சேக்கிழார்.

சூடாமணி : சேக்கிழார் இயற்றியது பெரிய புரணம்'...வேறு யாருக்காவது தெரியுமா?

ஆனந்த் : நான் சொல்கிறேன். இராமலிங்க அடிகளார்.

சூடாமணி: சரியான பதில் ... 1983-ல் உலகத் திலேயே மிகப் பெரிய பரிசாகிய நோபல் பரிசை நம் நாட்டு விஞ்ஞானி பெற்றிருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?

ராஜேஸ்வரி : தெரியும். எஸ். சந்திரசேகர்.

சூடாமணி: சரியாகச் சொன்னாய். இவருக்கு ஏற்கெனவே நோபல் பரிசு பெற்ற ஒருவர் உறவினர். அவர் யார்?

குமார் : சர். சி. வி. ராமன்தானே?

சூடாமணி: ஆம், இவருடைய தந்தையின் சகோதரர்தான் சர். சி. வி. ராமன். அவரும் இவரைப் போல் பெளதிகத் துறையில்தான் பரிசு பெற்றார்...உலகின் பல்வேறு நாடு களில் ஒலிம்பிக் ஆட்டங்கள் நடைபெறு கின்றன என்பதும் அதில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது என்பது தெரியுமா?

ஆனந்த்: ஒவ்வோராண்டும்தானே? சூடாமணி : இல்லை.

சீதாராமன் : 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

சூடாமணி : ஆம், சரியான விடை... மீனும் பாம்பும் தூங்கும்போது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகின்றன. ஏன் அவை நம்மைப் போன்று கண்களை மூடிக் கொண்டு தூங்குவதில்லை?

ஆனந்த் : அவைகளுக்குத்தான் கண் இமைகள் இல்லையே! எப்படி மூடும்?

சூடாமணி : சபாஷ்! சரியான பதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/10&oldid=494080" இலிருந்து மீள்விக்கப்பட்டது