இடம் : சென்னை, தேனாம்பேட்டை

கேள்வி கேட்பவர் : இரத்தின குமாரி

பங்கு கொள்வோர் : சத்திய நாராயணன் (சதீஷ்), விஜி, ஆரோக்கிய ரவி (ரவி)

இரத்தின குமாரி: ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில் ஒரே தேதியில் இரண்டு இந்தியப் பெரியார்கள் பிறந்தார்கள். அவர்கள் யார், யார் தெரியுமா ?

ரவி : காங்தித் தாத்தாவும், ல்ால்பகதூர் சாஸ்திரியும்.

இரத்தின: இல்லை. இருவரும் ஒரே மாதத்தில் ஒரே தேதியில்-அதாவது அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்தார்களே தவிர, ஒரே ஆண்டில் பிறக்கவில்லை.

உ.ம்...தெரியவில்லையா ? அவர்களில் ஒருவர் பெரிய கவிஞர்; இன்னொருவர் நேரு மாமாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விஜி : எனக்குத் தெரியும். ரவீந்திரகாத தாகூர்; இந்திரா காந்தி.

இரத்தின: விஜி சொன்னதில் முதல் பெயர் சரிதான். இரண்டாவது பெயர் தவறு.

சதீஷ் : கேரு மாமாவின் அப்பா பண்டித மோதிலால் நேருதானே ? இரத்தின : அவரே தான் ! தாகூரும் பண்டித மோதிலாலும் 6-5-1861ல் பிறந்தார்கள். ...வேகமாக நடக்கும் போட்டியைப் பார்த்திருப்பீர்கள்.

ரவி : டெலிவிஷனில் அடிக்கடி பார்க்கிறோமே.

இரத்தின : அப்படியா ? அப்போட்டியில் முக்கிய மான நிபந்தனை எது, தெரியுமா ?

சதீஷ் : ஒடக் கூடாது.

இரத்தின: ஓடினால்தான் அது நடைப் போட்டியாக இருக்காதே ! நடக்கிறார்களா , ஒடுகிறார்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?

ரவி : போட்டியில் கலந்துகொள்பவர்களின் பாதங்களை நான் கவனமாகப் பார்த்திருக்கிறேன். ஏதாவது ஒரு பாதம் எப்போதும் தரையைத் தொட்டுக் கொண்டே இருக்கிறது.

இரத்தின : ரவி சொன்ன மாதிரி, இரண்டு பாதங்களில் ஒன்று எப்போதும் தரையைத் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான விதி.

...சரி, நீங்கள் வான வில் இருக்கும்

திசையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சூரியன். எந்தப் பக்கத்தில் இருக்கும் ?

விஜி : எனக்குப் பின் பக்கத்திலே இருக்கும்.

இரத்தின : கரெக்ட்.

...ஒரு நாட்டின் பெயரைத் தமிழில் மொழி பெயர்த்தால் உதய சூரியன்' என்று வரும். அந்த நாட்டை நாம் எப்படி அழைக்கிறோம் ? அந்த நாட்டுக்காரர்கள் எப்படி அழைக் கிறார்கள்?

ரவி : ஜப்பான் என்று நாம் அழைக்கிறோம். நிப்பன் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

இரத்தின : அடடே, ரவி ரொம்பச் சரியாகக் சொல்லிவிட்டானே!....

...அடுத்தது குரங்கைப் பற்றிய கேள்வி. ...குரங்குகளில் பல வகை உண்டு. சில வகைகளின் பெயர்கள் உங்களுக்குத் தெரிந் திருக்கலாம். சொல்லுங்கள், பார்க்கலாம்.

விஜி: கொரில்லாக் குரங்கு, சிம்பான்ஸிக் குரங்கு, நாய்க் குரங்கு, கிப்பன் குரங்கு... அப்புறம் அப்புறம்.

ரவி : நாமக் குரங்கு.

இரத்தின : நீ சொல்ற நாமக் குரங்கும், விஜி சொன்ன நாய்க் குரங்கும் ஒன்றுதான்.

ரவி : அப்படியா, சரி, கருங்குரங்கு, அனுமன் குரங்கு, துதிக்கை மூக்குக் குரங்கு

சதீஷ் : இன்னும் இருக்குதே குல்லாக் குரங்கு, சிலந்திக் குரங்கு, அணில் குரங்கு.

இரத்தின : போதும், நிறையச் சொல்லிவிட்டீர்கள். இன்னொரு கேள்வி. குழந்தைகளுக்கு எழுதுவோர் சேர்ந்து சென்னையில் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்களே, அதன் பெயர் தெரியுமா?

விஜி: ஒ, தெரியுமே. குழந்தை எழுத்தாளர் சங்கம். அதன் 31வது ஆண்டு விழாவைக் கூடச் சமீபத்தில்தான் கொண்டாடினார்களே!

இரத்தின: பேஷ், ஆண்டு விழா நடந்ததைக் கூட நினைவில் வைத்திருக்கிறாயே!

... புகையிலையில் ஒருவித நஞ்சு இருக்கிறது. அதன் பெயர் தெரியுமா?

ரவி : நிக்கோடின்.

இரத்தின : கரெக்ட்! அளவுக்கு அதிகமாகப் புகையிலையை உபயோகிப்பவர்களுக்கும், சுருட்டு சிகரெட்டுப் பிடிப்பவர்களுக்கும் புற்று நோய் உண்டாவதற்குக் காரணம், இந்த நஞ்சுதான் என்கிறார்கள்.

அடுத்த கேள்வி. நம் நாட்டின் தேசியப் பறவை மயில். இது உங்களுக்குத் தெரியும். தேசிய மிருகம் எது ?

விஜி : சிங்கம்.

சதீஷ் : இல்லை, புலிதான்.

இரத்தின : சதீஷ் சொன்னதுதான் சரி. ...நம் முதல் குடியரசுத் தலைவர் யார்? அவர் எத்தனை ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தார், தெரியுமா ?

விஜி ; ராஜேந்திர பிரசாத். அவர் 10 வருடங்கள் குடியரசுத் தலைவராக இருந்தார்.

இரத்தின : இராஜேந்திர பிரசாத் என்று விஜி சொன்னது சரிதான். ஆனால் 10 ஆண்டுகள் என்பது தவறு. அவர் 12 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தார்.

இப்போது நான் ஒரு பொன்மொழி ;சொல்கிறேன் : அகிம்சை கோழையின் ஆயுதமல்ல: அது விரனின் ஆயுதம்' இதைச் சொன்னவர் யார்?

விஜி : காந்தித் தாத்தாதானே?

இரத்தின : அகிம்சை என்றவுடனே காந்தித் தாத்தா நினைவு வராமல் இருக்குமா? அதனால்தான் விஜி சரியாகச் சொல்லி விட்டாள்...... UNESCO என்கிறோமே, அந்த நிறுவனத்தின் முழுப் பெயர் என்ன?

சதீஷ் : United Nations Educational, Scientific and Cultural Organisation.

இரத்தின : ரொம்ப சரி. அதை ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான பண்பாட்டுக் கழகம் என்று தமிழில் கூறலாம்... ஆமாம், அதன் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது?

சதீஷ் : லண்டனில்.

ரவி: இல்லை, பாரிசில்.

இரத்தின : ரவி சொன்னதே சரி. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், ஆகிய மூவரும் சிவபெருமானைப் பற்றிப் பாடிய நூலின் பெயர் என்ன?

சதீஷ் : தேவாரம்.

இரத்தின: சரியான பதில்...நம் பாரத நாடு விடுதலை பெற்றபோது மைசூர், பரோடா, திருவாங்கூர், புதுக்கோட்டை என்று பல சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அப்படி மொத்தம் எத்தனை சமஸ்தானங்கள் இருந்தன என்று கூற முடியுமா?

ரவி : 552.

இரத்தின : அடே, சரியாகச் சொல்லி விட்டாயே!

...கார்ட்டுன் என்று சொல்கிறார்களே கேலிச் சித்திரம், அது முதல் முதலாக வெளியானது எந்த நாட்டில் என்று தெரியுமா ?

ரவி : இங்கிலாந்தில்,

சதீஷ் : அமெரிக்காவில்.

இரத்தின : இரண்டு பேர் சொன்னதும் தவறு விஜி, உனக்குத் தெரியுமா ?

விஜி: நீங்களே சொல்லிவிடுங்கள், அக்கா.

இரத்தின : முதல் முதலாக இத்தாலியில்தான் கேலிச் சித்திரங்களை வெளியிட்டார்கள். அப்புறம் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் பரவியது. இப்போது எல்லா நாடுகளிலுமே கேலிச் சித்திரங்களைக் காணலாம். ...நந்தனாருக்குத் திருநாளைப்போவார் என்று ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயர் எப்படி வந்தது?

விஜி : எனக்குத் தெரியும். என் தாத்தா சொல்லியிருக்கிறார். நந்தனாருக்குச் சிதம்பரத்துத்குப் போய் நடராஜரைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாம். ஆனாலும், கோயிலுக்குள்ளே நுழைய விடுவார்களா என்று அவருக்குச் சந்தேகமாம். தினமும் 'நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேன்' என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருப்பாராம். அதனால், அவரை எல்லாரும் நாளைப் போவார்' என்று அழைத்தார்களாம். அதன் பிறகு திருநாளைப் போவார் ஆகிவிட்டதாம்

இரத்தின : அடடே, விஜி அவங்க தாத்தா சொன்னதை நன்றாக நினைவிலே வைத்து அப்படியே சொல்லிவிட்டாளே!...உங்களுக்காகத் தமிழிலே குழந்தைகள் கலைக் களஞ்சியம் பத்துத் தொகுதிகளாக வெளி வந்திருக்கிறதே, அதன் தலைமைப் பதிப்பாசிரியர் யார், தெரியுமா?

சதீஷ் : ம.ப. பெரியசாமித் துரன்.

இரத்தின: சரியான விடை...... ஆங்கிலேயர் ஆட்சியில் முதன் முதலாக மூன்று பல்கலைக் கழகங்கள் மூன்று நகரங்களில் ஏற்படுத்தப்பட்டன. எந்த எந்த நகரங்களில் என்று தெரியுமா?

ரவி : சென்னை, டில்லி, பம்பாய்.

இரத்தின: . ரவி சொன்ன பதிலில் முதலும் கடைசியும் சரியே. ஆனால் நடுவே சொன்னது தான் தவறு

சதீஷ் : நான் சரியாகச் சொல்கிறேன். கல்கத்தா.

இரத்தின: கரெக்ட்! டெலிபோனைக் கண்டு பிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் எந்த நாட்டில் பிறந்தவர்?

விஜி : எடின்பரோவில்,

இரத்தின : எடின்பரோ என்பது அவர் பிறந்த நகரம். ஆனால், எங்த நாட்டில் அவர் பிறந்தார் என்றல்லவா கேட்டேன்? எடின்பரோ எந்த நாட்டின் தலைநகரம்?

விஜி ; ஸ்காட்லாந்து காட்டின் தலைநகரம்

இரத்தின : விஜி சொன்ன விடை சரியே... கடைசியாக ஒரு கேள்வி. 4 கிலோ மீட்டர் துரத்தைக் கடக்க ரவிக்கு ஒரு மணி நேரமாகிறது. ரவி, சதீஷ் இருவரும் சேர்ந்து அதே துாரத்தைக் கடக்க எவ்வளவு நேரமாகும்:

சதீஷ் : அதே நேரம்தான். அதாவது ஒரு மணி! இரத்தின .நீ சொன்னது சரியே. ஆனாலும், இரு நண்பர்கள் பேசிக்கொண்டே நடக்கும் போது ஒரு மணி நேரம் ஆனதாகத் தெரியாது. அதைவிடக் குறைந்த நேரமே ஆனதுபோல் தோன்றும், இல்லையா?

மூவரும் : ஆமாம்! ஆமாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/5&oldid=494074" இலிருந்து மீள்விக்கப்பட்டது