இடம் : முத்துராமலிங்கபுரம்

காமராசர் மாவட்டம்

கேள்வி கேட்பவர் : திலகவதி

பங்கு கொள்வோர்

ரங்கநாதன், கவிதா, ராமச்சந்திரன், அமுதா, குழந்தை புனிதா

திலகவதி : சில பறவைகளால் பறக்க முடியாது. ஆனாலும், வேகமாக ஒடும். பறக்க முடியாமலும், வேகமாக ஒட முடியாமலும, உளளது ஒரு பறவை. அதன் பெயர் தெரியுமா?

கவிதா : நெருப்புக் கோழி.

திலக: இல்லை. நல்ல குளிர்ப் பிரதேசத்தில் அது வசிக்கிறது.

ரங்ககாதன்: தெரியும், தெரியும். அதன் பெயர் பெங்குவின்

திலக: கரெக்ட். இப்போது நம் தேசத்தின் தலைநகராக டில்லி இருக்கிறது. இதற்கு முன்பு வேறொரு நகரம், நம் தேசத் தலைநகராக இருந்தது. அது எந்த நகரம்?

அமுதா : கல்கத்தா.

திலக ; அடே! அமுதா சரியாகச் சொல்லி விட்டாளே! சரி...கிரேட் பிரிட்டன் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று தெரியுமா?

கவிதா: , இங்கிலாந்தைத்தான் கிரேட் பிரிட்டன் என்கிறோம்.

திலக : கவிதா, நீ சொன்னதில் மூன்றில் ஒரு பங்கு சரி. அதாவது இங்கிலாந்து கிரேட் பிரிட்டனில் ஒரு பகுதி. மற்றும் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அவை என்ன? என்ன? .

ராமச்சந்திரன் : ஸ்காட்லாந்து...இன்னொன்று. ம்...ம்... வேல்ஸ்.

திலக : ரொம்ப கரெக்ட், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என்ற மூன்று பகுதிகளும் சேர்ந்ததுதான் கிரேட் பிரிட்டன்... தினமும் காலையில் எழுந்ததும் நாம் காப்பி சாப்பிடுகிறோம். இந்த காப்பி மிக அதிக மாக விளையக்கூடிய நாடு எது?

கவிதா : பிரேசில் நாடு.

திலக: ஆம், தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில்தான் அதிகமாகக் காப்பி விளைகிறது...நேரு மாமாவை ஆங்கிலேயர்கள் எத்தனை தடவை சிறையில் அடைத்தார்கள், தெரியுமா?

ரங்கநாதன் : ஒன்பது தடவைகள்.

திலக: சரியான விடை நம்தேச விடுதலைக்காக நேரு மாமா சுமார் 13 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஒரு முறை அவர் நீண்டகாலம்

அதாவது 1045 நாட்கள் சேர்ந்தாற்போல் சிறைவாசம் செய்தார்!

கவிதா: அடேயப்பா கிட்டத்தட்ட மூணு வருஷம்.

திலக : ஆமாம். 3 வருஷத்துக்கு 50 நாட்கள் தான் குறைவு...நாலடியார் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?

அமுதா: அது ஒரு புத்தகம். நாலு நாலு அடி களில் பாட்டு இருக்கும்.

திலக : அமுதா ஒரளவு சரியாகச் சொன்னாள். நான் இன்னும் சற்று தெளிவாகச் சொல்லுகிறேன். நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நூல் நாலடியார். அதில் 400 பாடல்கள் இருக்கின்றன. நாலடி" என்று பெயர் வைத்திருக்கலாம். ஆனாலும், அந்த நூலுக்குச் சிறப்புக் கொடுப்பதற்காக 'ஆர்' என்று கடைசியில் சேர்த்து * நாலடியார்' என்கின்றனர்......சாந்தி நிகேதனம்’ என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. அதை ஏற்படுத்தியவர் யார்?

ராமச்சந்திரன் : ரவீந்திரகாத தாகூர்.

திலக இல்லை. அமுதா, கவிதா, ரங்ககாதா, உங்களுக்குத் தெரியுமா?

மூவரும் : (மெளனம்)

திலக: சரி, நான் சொல்கிறேன். ரவீந்திரநாத தாகூரின் அப்பா தேவேந்திரநாத தாகூர் தான் அதை ஏற்படுத்தினார். அவர் அதை ஒர் ஆசிரமமாகத்தான் அமைத்தார். 1901-ல், அதாவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு, ரவீந்திரநாத தாகூர் அங்கு ஒரு கல்வி நிலையம் அமைத்தார். அது இன்று உலகப் புகழ்பெற்று விளங்குகிறது...... மோகினி ஆட்டம் பார்த்திருக்கிறீர்களா? அது எந்த நாட்டு நடனம்?

கவிதா: பார்த்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறோம். அது கேரள நாட்டு நடனம்.

திலக: சரியாகச் சொன்னாய். மோகினி ஆட்டம், கதகளி இரண்டும் கேரளநாட்டு நடனங்கள்... தேக்கு மரத்தால் வீடு கட்ட வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்களே, காரணம் தெரியுமா?

ரங்கநாதன்: தேக்கு மரம் ரொம்ப நாள் உறுதியாக இருக்கும். செல் அரிக்காது; உளுத்துப் போகாது.

திலக: உண்மைதான். சில கோயில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த வாகனங்கள், போட்ட கதவுகள், உத்தரங்களெல்லாம் இன்னமும் நல்ல நிலையில் இருக்கின்றன. சரி, வெட்டுக் கிளிக்கு எத்தனை கால்கள்? சட்டென்று சொல்ல முடியுமா?

ராமச்சந்திரன்: ஆறு கால்கள்.

திலக : ரொம்ப கரெக்ட். ஆனால் அந்த ஆறு கால்களும் மூன்று விதமாக இருக்கும். அதன் உடலின் முன் பாகத்தில் உள்ள இரண்டு கால்களும் சிறியவை. நடுப் பாகத்தில் உள்ள இரண்டும் சற்று நீளமானவை. உடலின் பின் பக்கத்தில் உள்ள இரண்டும் நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமே எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கல்வி முறையை முதலில் வகுத்தவர் ஒரு பெண்மணி. அவர் பெயர் என்ன? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அமுதா: மான்டிசோரி அம்மையார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.

திலக: முதல் விடை சரிதான். இரண்டாவது விடை தவறு.

கவிதா : இங்கிலாந்து இல்லை; இத்தாலி.

திலக: கரெக்ட் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மான்டிசோரி அம்மையார்தான் அந்தக் கல்வி முறையை வகுத்தவர். அதனால்தான் அப்படிக் கற்றுக் கொடுக்கப்படும் பள்ளி களை மான்டிசோரி பள்ளி' என்கிறார்கள். பழனிக்குப் போயிருப்பீர்களே, அங்கு மலை ஏற எத்தனை படிகளைக் கடக்க வேண்டும்?

அமுதா : பழனிக்குப் போயிருக்கிறேன். ஆனால், படிகளை எண்ணிப் பார்க்கவில்லை.

கவிதா : 500 படிகள்.

ரங்கநாதன் : இல்லை. 600 படிகள்.

திலக: என்ன ராமச்சந்திரா, உன் விடை என்ன? எழுநூறா?

ராமச்சந்திரன் : தெரியவில்லை. நீங்களே கூறி விடுங்கள்.

திலக : 648 படிகள். படி வழியாக ஏற முடியாத வர்களுக்காக ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்களே, அது என்ன?

ரங்கநாதன் : மின்சாரத் தொட்டில்.

திலக: ஆம், விஞ்ச் (Winch) என்று அதை ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். இதோ இருக்கிறதே, இது ஒரு தேசத்தின் கொடி. எந்த நாட்டுக் கொடி என்று கூற முடியுமா?

கவிதா : பாக்கிஸ்தான் கொடி.

திலக: இல்லை. பாக்கிஸ்தான் கொடியிலே பிறைச் சந்திரனும் ஒரு நட்சத்திரமும் இருக்கும். ஆனால், இதிலே நடுவிலே ஒரு பெரிய நட்சத்திரமும் அதைச் சுற்றி ஐந்து சிறிய நட்சத்திரங்களும் இருக்கின்றனவே!

அமுதா : சிறீலங்கா தேசிக் கொடியாக இருக்கும்.

திலக : அதுவும் இல்லை. சிறீலங்கா கொடியில் சிங்கம் இருக்கும்.

ரங்கநாதன் : பர்மா தேசக் கொடி.

திலக : ரங்ககாதன் சரியாகச் சொல்லிவிட்டான். நான் இப்போது ஒரு பாட்டிலே நாலு வரிகளைச் சொல்லப் போகிறேன் :

சின்னச் சின்ன எறும்பே,

சிங்காரச் சிற்றெறும்பே,

உன்னைப் போல நானுமே

உழைத்திடவே வேணுமே.

இதைப் பாடியவர் யார்?

கவிதா : கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.

அமுதா: எனக்குத் தெரியும் சரியான விடை. முத்துக் குவியல்’னு ஒரு புத்தகம். அதிலே பல கவிஞர்களுடைய குழந்தைப் பாடல்களையெல்லாம் போன மாதம்தான் படித்தேன். அதிலே இந்தப் பாட்டும் இருக்கிறது. இதை எழுதியவர் நமச்சிவாய முதலியார்.

திலக: சரியாகச் சொன்னாய். கா. நமச்சிவாய முதலியார் பெரிய தமிழறிஞர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். தமிழ்ப் புலவர்களுக்கு மிகவும் ஆதரவு தந்தவர். முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடப் புத்தகங்களை எழுதினார். அந்தப் பாடப் புத்தகங்களில் உள்ள ஒரு பாட்டுத்தான் சின்னச் சின்ன எறும்பே' என்ற பாட்டு. சரி, கடைசியாக ஒரு கேள்வி. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். அந்த வீட்டுத் தாத்தா அங்கிருந்த ஒரு புலித்தோலைக் காட்டி, என் முன்னோர்களில் ஒருவர் வேட்டையாடுவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். அவர் 600 வருஷங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புலியின் தோல்தான் இது!’ என்றார். என்னால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா?

கவிதா: எனக்குத் தெரியும். அந்தப் புலித் தோலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த ஒட்டை இருந்திருக்காது.

அமுதா : 600 வருஷத்துக்கு முன்னாலே நம் நாட்டுக்காரர்களுக்குத் துப்பாக்கியால் சுடவா தெரிந்திருக்கும்?

திலக : அதெல்லாம் காரணம் இல்லை. நானே சொல்லிவிடுகிறேன். வேட்டைத் துப்பாக்கி யைக் கண்டுபிடித்ததே 1520ஆம் ஆண்டிலே தான்.

ராமச்சந்திரன் : அப்படியானால் இன்னும் 500 ஆண்டுகள் கூட ஆகவில்லையே! அவர் எப்படி 600 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டிருக்க முடியும்?

மற்றவர்கள் : ஆமாம், எப்படி முடியும்? (சிரிக்கிறார்கள்).

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/6&oldid=494076" இலிருந்து மீள்விக்கப்பட்டது