சிந்தனை துளிகள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





உள்ளடக்கம்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

சிந்தனைத் துளிகள்
 
தவத்திரு குன்றக்குடி அடிகளார்




தொடக்கம் : 1965

கலைவாணி புத்தகாலயம்
நல்ல நூல் வெளியீட்டாளர்கள்

2, சிவஞானம் ரோடு, பாண்டிபஜார் அஞ்சலகம் நேரில்
தியாகராய நகர், சென்னை-600 017.

போன் : 434 03 56

கலைவாணி வெளியீடு, K. 483
முதல் பதிப்பு : ஜூலை 1997
பக்கம் : 192+8=200
விலை: ரூ. 40-00


பதிப்பாசிரியர்: சீனி திருநாவுக்கரசு


புதிய வெளியீடு :

தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின்
“இன்று ஒரு தகவல்” 17-ம் பாகம் ரூ. 25

திருவருட் சிந்தனை-தவத்திரு அடிகளார் ரூ. 40


செந்தமிழ்க் குறளோசை திசையெலாம்
மேவ உலக மொழி ஆகும்.

-கவிஞர். சீனி திருநாவுக்கரசு



அச்சிட்டோர் :
கவிக்குயில் அச்சகம், 14, நல்லதம்பி தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை-600005 போன், 8536107


சிவ சிவ
முன்னுரை

திருவருள் திரு
தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக
பரமாசாரிய சுவாமிகள், ஆதீனகர்த்தர்
திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 630 206


அருள் நெறித் தந்தை குருமகா சன்னிதானத்தின் பொன்மொழிகள் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தாரக மந்திரங்கள்.

சுழன்றடிக்கும் காற்று இல்லாத பொழுது சிறிய அளவு சூடம்கூட எரியும், காற்று வேகமாக அடிக்கும் பொழுது எரியக் கூடிய அளவு சூடம் இருந்தாலும் அணைந்துவிடும்.

அதுபோல நெருக்கடியும் துன்பங்களும் இல்லாத பொழுது வேலையின் அளவும் தாமும் குறைந்தாலும் ஆபத்து வந்துவிடாது.

நெருக்கடி நிறைந்துள்ள போழ் தில் கடுமையாக உழைத்தால் மீளமுடியும்.

உழைப்பு ஒன்றே ஆன்மாவை ஈடேற்றும் வழி என்பதை, இதைவிட அற்புதமாக வேறு எப்படி சொல்ல இயலும்? .

இந்துக்கள் ஒருமைப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால், அந்த ஆர்வம் உண்மையான இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு பதிலாக மீண்டும் சாதி மேலாதிக்கம் கொள்ள முயல்கின்றது.

இந்த வைர வரிகள் இந்து சமயத்தில் சாதியத்தின் ஆதிக்கத்தை பறை சாற்றுகின்றது. இதற்குரிய தீர்வும் சொல்லப்படுகிறது.

திருவள்ளுவரையும், வள்ளலாரையும் பின்பற்றாததால்தான், நம் நிலை தாழ்ந்தது, என்று அருள்நெறித் தந்தை அருமையாகக் கூறுகின்றார்கள்.

அருள் நெறித் தந்தையின் பாதை, மானுடத்தை தேவநிலைக்கு உயர்த்த வழிகாட்டும் பாதை.

எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை என்ற நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்ற ஆன்மீகப் பாதை.

சிறந்த ஆன்மீகப் பாதையில் பயணம் தொடர தமிழ் கூறும் நல்லுலகில் தாரகமந்திரமாய் அருள் நெறித் தந்தையின் அமுத மொழிகள் பயன்படும்.

இந்த அமுதமொழிகளைத் தொகுத்துத் தந்த நம் ஆதீனப்புலவர் திருமிகு மரு. பரமகுரு அவர்களுக்குப் பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.

அருள்நெறித்தந்தை, தமிழ்மாமுனிவர் குருமகா சந்நிதானத்தின் பொன்மொழிகளை அச்சில் கொண்டுவரும் அருமை கலைவாணி பதிப்பகக் கவிஞர் சீனி திருநாவுக்கரசு அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

குன்றக்குடி
என்றும் வேண்டும் இன்ப அன்பு,
11-7-97
பொன்னம்பல அடிகளார்.

அணிந்துரை

“வானொலி புகழ்”
தென்கச்சி. கோ. சுவாமிநாதன்

“அந்த ஆள் ரொம்பவும் திறமைசாலி! இந்த ஆள் ரொம்பவும் சாமர்த்தியசாலி!” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இரண்டு பேர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இப்படி ஒரு கேள்வியை உங்களைப் பார்த்து யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? “அவசரமா கொஞ்சம் வேலையிருக்கு... அப்புறமா வ்ந்து சொல்றேன்!” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நழுவத்தான் தோன்றும் நம்மில் பலருக்கு! சிந்தனைத் துளிகள் புத்தகம் நம் கையில் இருந்தால் நழுவவேண்டிய அவசியம் ஏற்படாது.

“சாமர்த்தியமும், திறமையும் ஒன்றல்ல” என்கிறார் தவத்திரு அடிகளார்.

“சாமர்த்தியம், எப்படியும் காரியத்தை சாதிப்பது” திறமை முறைப்படி சாதிப்பது” என்பது அவர் விளக்கம். .

“நம்ம எதிரியோட பழகுகிறவன் நமக்கும் எதிரி!” என்பதுதான் நம்முடைய கண்ணோட்டம் என்கிறார். “எனக்கு நண்பராக இருந்தால் போதாது... எனது பகைவருக்கு விரோதியாகவும் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பது விரும்பத் தக்கதல்ல.”

இப்படி எத்தனையோ அருமையான கருத்துரைகள் அவ்ற்றையெல்லாம் அழகான நூலாக்கித் தருகிறார்... தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அன்பிற்குரியவரான கவிஞர் கலைவாணி சீனி திருநாவுக்கரசு அவர்கள்.

நல்வாழ்த்துக்கள்

சென்னை-4
அன்புடன்
6-7-97
தென்கச்சி கோ. சுவாமிநாதன்

பதிப்புரை

உலக உயிர்களில் உயர்ந்து செயலாற்றி மகிழும் பேறு, மனித குலத்திற்கு மட்டுமே இறைவன் அருளிய அருட்கொடை..

மனிதன், மனிதம் என்ற புனிதத் தன்மையுடன் வாழவும், வாழ்விக்கவும் மகான்களின் சிந்தனைகளே உறுதுணை.

உலகம் உய்யத் தோன்றிய மகான்கள், சித்தர்கள் அருளிய அருட் சிந்தனைகள், வாழ்த்கைக்கு வளம் தருவன. உயிர்க்கும், உள்ளத்திற்கும் உறுதி சேர்ப்பன. இம்மை, மறுமை நலன்களை அளிப்பன.

உண்பித்து உண், வாழ்வித்து வாழ், மகிழ்வித்து மகிழ் எனும் திருக்குறள் நெறி உலகெலாம் நிலவி மகிழ, நாளும் தன் தவானுபவத்தால் அப்பரடிகளாக வாழ்ந்து காட்டிய தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருளிய அருட்சிந்தனைகளின் தொகுப்பே இந் நன்னூல்.

இச்சிறந்த சிந்தனைச் செல்வத்தை வாழ்வில் கொண்டு ஒழுகுவதே தமிழ் மாமுனிவர் அடிகளாருக்குச் செய்யும் சிறந்த கைம்மாறாகும். தொண்டே வாழ்வாய், வாழ்வே தொண்டாய் வாழ்ந்தும், வாழ்வித்தும், என்றும் தோன்றாத் துணையாக அருளும் அடிகளாரின் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.

தமிழ் மாமுனிவர் அடிகளாரின் திருவுருவிலும் திருவுளப் பாங்கிலும் முழுமதியென உலா வந்தருளி முத்தான முன்னுரை வழங்கி அருளும் தவத்திரு. பொன்னம்பல குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கும், ஆதீனப் புலவர் மாமனிதர் மரு. பரமகுரு அவர்கட்கும், மகிழ்வுரை அளித்துள்ள “மனிதநேயச் செல்வர்” புலவர் வீ. செ. கந்தசாமி அவர்களுக்கும், அணிந்துரை வழங்கியுள்ள மனிதநேய மாமணி தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுக்கும் என் நெஞ்சுகந்த நன்றி.

தியாகராயநகர்
என்றும் அன்புடன்
சென்னை-17
சீனி. திருகாவுக்கரசு

மகிழ்வுரை

வீ. செ. கந்தசாமி, எம்.ஏ., பி.லிட்., எல்.எல்.பி,
தலைவர், திருக்குறள் பேரவை, சென்னை மாவட்டம், தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணைய முதல் உறுப்பினர், துணைத் தலைவர், அ. இ. தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.


ஆன்மிகவாதியாகவும், அரசியல் ஞானியாகவும், அறிவியல் சிந்தனையாளராகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் விளங்கி, இறையருளில் கலந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், மகேசனிடம் பக்தி பூண்டதோடு நில்லாமல், மக்களையும் உள்ளன்புடன் நேசித்தவர்.

அவர், காவியணிந்த பொதுவுடைமைவாதி. சமய வழியில் மக்களிடையே ஒப்புரவு காணமுடியும் என்று உறுதியாக நம்பியவர்.

மடமையையும், அறியாமையையும், மட்டுமல்ல வளர்ச்சிக்கு வகை செய்யாத பழமையையும் சாடிய சமுதாய சிற்பி.

இனிவரும் உலகில், அறிவியல் துறையில் ஒரு மொழி வளர்ச்சியடைவதே அம்மொழி பேசும் மக்கள் மேம்பாடடைவதற்கு வழி என்றுரைத்த நுண்ணிய அறிவியல் சிந்தனையாளர்.

ஒரு சைவ மடத்தின் மகா சந்நிதானமாக விளங்கிய அவர்கள், திருக்குறள் பேரவை, அருள் நெறித் திருக் கூட்டம் போன்ற பல இலக்கிய, சமுதாய, சமய அமைப்புகளைத் தோற்றுவித்து நடத்தியதுடன், பல கல்வி நிலையங்களையும், ஏதிலியர் இல்லங்களையும் நடத்தினர்கள்.

தவத்திரு அடிகளாரே ஒரு இயக்கம்; அவர் ஒரு தனி மனிதரல்லர்.

அவர்கள் அருளிய கருத்து மணிகளில் பலவற்றைத் தேர்ந்து எடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ள நண்பர் சீனி. திருநாவுக்கரசு ஒரு கவிஞர்.

“ஆய்வு இல்லாத பணியில் வளர்ச்சி இராது (1404); பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள் (862); தவறுகளை நியாயப்படுத்துவதே குற்றம். சமயங்கள் மாறுபடா; சமயவாதிகள் மாறுபடுவர் (533)”. இவை கவிஞர் சீனி திருநாவுக்கரசு அவர்கள் தேர்ந்து எடுத்து நமக்களித்துள்ள மணிகளில் சில.

தவத்திரு அடிகளாரின் கருத்து மணிகள் செறிந்து மிளிரும் இந்த அரிய நூலைத் தமிழினம் ஏற்றுப் பயனடையும் என்பதில் நம்பிக்கை எனக்குண்டு.

பழங்களைச் சுவைத்துப் பார்த்து, நல்ல பழங் களை மட்டுமே காவிய நாயகன் இராமனுக்கு நல்கி மகிழ்ந்த மாது சபரியைப் போல, நல்ல நூல்கள் எவை எனத்தேர்ந்தெடுத்து பதிப்பித்து நாட்டுக்களித்து வரும் அன்பு நண்பர் கவிஞர் சீனி. திருநாவுக்கரசு அனைவரின் பாராட்டுக்கும் உரியவர். -

கலைவாணிப் பதிப்பகத்தின் மற்றுமோர் நல்ல முத்தான இதற்கு மக்களிடையே மாபெரும் வரவேற் பிருக்கும் என்பது திண்ணம்.

சென்னை.14

அன்பன்,
வீ. செ. கந்தசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்&oldid=1519938" இலிருந்து மீள்விக்கப்பட்டது