திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க;
:தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே= அறங்கள் பலவற்றையு்ம் ஆராய்ந்து இவற்றுள் இருமைக்கும் துணையாவது யாதென்று மனத்தை யொருக்கித் தேர்ந்தாலும் துணையாய் முடிவது அவ்வொழுக்கமே யாகலான்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.
 
==திருக்குறள் 133 (ஒழுக்கமுடைமை)==
 
;ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
;மிழிந்த பிறப்பாய் விடும்
 
::ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
::இழிந்த பிறப்பாய் விடும்
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் உடைமை குடிமை= எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடைமை குலனுடைமையாம்;
:இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்= அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கமுடையாராக உயர்குலத்தவராகலின், குடிமையாம் என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும், ஒழு்க்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தவராகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றும் கூறினார். உள்வழிப்படும் குற்றத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடின்றி எய்துதலின், அவ்விரைவுபற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.
 
== திருக்குறள் 134 (மறப்பினும்)==
 
;மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
;பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
 
::மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
::பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடு்ம்
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஓத்து மறப்பினும் கொளல் ஆகும்= கற்ற வேதத்தினை மறந்தான் ஆயினும் அவ்வருணம் கெடாமையிற் பின்னும் அஃது ஓதிக் கொளலாம்;
:பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்= அந்தணனது உயர்ந்த வருணம் தன்னொழுக்கம் குன்றக் கெடும்.
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான் 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.
 
==திருக்குறள் 135 (அழுக்காறுடையான்)==
 
;