திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/19.புறங்கூறாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
"===அதிகாரம் 19 புறங்கூறாமை=== ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 119:
::என்னைகொல் ஏதிலார் மாட்டு (08)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்= தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினையுடையார்;
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்):
:ஏதிலார் மாட்டு என்னை கொல்- அயலார்மாட்டுச் செவது யாதுகொல்லோ!
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: தூறறுதல் பலரும் அறியப் பரப்புதல். அதனிற் கொடியது பிறிது ஒன்று காணாமையின், என்னைகொல் என்றார். செய்வது என்பது சொல்லெச்சம். என்னர்கொல் என்று பாடம் ஓதி, எவ்வியல்பினராவர் என்றுரைப்பாரும் உளர்.
 
 
==திருக்குறள் 189 (அறனோக்கி)==
 
;அறனோக்கி யாற்றுங்கோல் வையம் புறனோக்கிப்
;புன்சொல் லுரைப்பான் பொறை
 
::அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கிப்
::புன் சொல் உரைப்பான் பொறை (09)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): புறன் நோக்கிப் புன் சொல் உரைப்பான் பொறை= பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடல்பாரத்தை;
:வையம் அறன் நோக்கி ஆற்றும் கொல்- நிலம் இக்கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்.
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன்நோக்கி ஆற்றும்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறங்கூறுவார்க்கு எய்தும் குறறம் கூறப்பட்டது.
 
==திருக்குறள் 190 (ஏதிலார்)==
 
;ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
;றீதுண்டோ மன்னு முயிர்க்கு
 
::ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
::தீது உண்டோ மன்னும் உயிர்க்கு (10)
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்= ஏதிலாரைப் புறங் கூறுவார் அதற்கு அவர்குற்றம் காணுமாறுபோலப் புறங்கூறலாகிய தம்குற்றத்தையும் காணவல்லர் ஆயின்;
மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ= அவர் நிலைபேறு உடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: நடுவுநின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலிற் பாவம் இன்றாம் ஆகவே, வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, உயிர்க்குத் 'தீதுண்டோ' என்றும் கூறினார்.இதனால் புறங்கூற்றொழிதற்கு உபாயம் கூறப்பட்டது.