மனோன்மணீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:அகரமுதலான வரிசையில் படைப்புகள் using HotCat |
No edit summary |
||
வரிசை 183:
:இதுவே இந்நாடகத்துள்வரும் கதையின் சுருக்கம். இக்கதையை வேண்டுழிவேண்டுழி விரித்து, ஆங்கிலேய நாடகரீதியாக ஜீவகனாதியராகிய கதாபுருஷர்களுடைய குணாதிசயங்கள் அவர்அவர் வாய்மொழிகளால் வெளிப்படுத்தும்படி செய்திருப்பதுமன்றி, வாழ்த்து, வணக்கத்துடன் தொடங்கி, நாற்பொருள் பயக்கும் நடையினைக் கூடியஅளவும் தழுவி, தன்னிகரில்லாத் தலைவனையும் தலைவியையும் உடைத்தாய், மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த்தோற்றம் என்றின்னவும், பிறவும் ஏற்புழிப்புனைந்து, நன்மணம் புணர்தலே முடிவாகக் கொண்டு, மந்திரம் தூது செலவிகல் வென்றி எனத் சந்தியிற் றொடர்ந்து, அங்கம் களம் என்னும் பாகுபாடுடைத்தாய் நிற்கும் இந் நாடகத்தில் தமிழ்க் காவியவுறுப்புகள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்போடு பார்ப்பார் கண்ணுக்குப் புலப்படலாம்.
<table width="60%" height="40%" align="right" border="1">
<td bgcolor="yellow ">
<h3 align="center">சுந்தரனார் வாழ்க்கைக் குறிப்பு </h3>
<center><small></small></center>
பிறப்பு: 1855 ஏப்ரல் 05-ஆம் நாள்.
பெற்றோர்: பெருமாள் பிள்ளை- மாடத்தி அம்மை.
திருமணம்: 1877, தை மாதம்- தன் 22-ஆவது வயதில்.
மகன்: நடராசன்
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், வடமொழி முதலானவை.
குருநாதர்: கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்
1885-இல் விவேகானந்தர் சந்திப்பு
கவிஞர், நாடக ஆசிரியர், த்ததுவ அறிஞர், வரலாற்றாசிரியர், வேதாந்தி, கல்வெட்டியலாளர்.
தமிழ்த்தாய்வாழ்த்து இவர் பாடியது.
1891-இல் மனோன்மணீயம் நாடகநூல் வெளியிடல்.
புகழுடம்பு நீத்தல்: 1897 ஏப்ரல் 26- ஆம்நாள்.
</td>
</table>
:இல்லறம், துறவறம், பக்தி, ஞானி முதலிய மோக்ஷசாதனங்கள் பொருத்தமுடைய சந்திகளில் வெளிப்படையாக அமைந்திருப்பதுமல்லாமல், இக்கதையினையே ரூபகமாலாலங்காரமாகக் கருதின், தத்துவ சோதனை செய்யும் முமுக்ஷுகளுக்கு அனுகூலமாகப் பாவிக்கவும் கூடும். அப்படி உருவகமாலையாகக் கொள்ளுங்கால், ஜீவகனைச் சார்போதமான ஜீவாத்மா ஆகவும், அவனைத் தன்வசப்படுத்தி யாட்டுவித்த குடிலனை மாயாசக்தியாகவும், மனோன்மணியை ஜீவாத்மாவின் பரிபக்குவ காலத்துதிக்கமு முத்திக்குரிய உத்தமபாகமான சுத்தத்தத்துவமாகவும், அவள் தோழிவாணியைப் புத்தி தத்துவமாகவும், அவள் காதலனாகிய நடராஜனை ஞானதாதாவான உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்துமனை அனுக்கிரக சத்தியாகவும், சுந்தரமுனிவரைக் கருணாநிதியாகிய ஞானாசாரியராகவும், ஜீவகனுக்குத் தலைநகராகக் கூறிய முத்திபுரம் என்னும் மதுரையை ஜீவாத்மா உதித்தொடுங்கும் மூலத்தானமாகவும், அவனும் குடிலனும் சேர்ந்து கட்டிய நெல்வேலிக்கோட்டையை மாயாகாரியமான அன்னமயாதி பஞ்சகோசத்தால் அமைந்த சரீரமாகவும், அதிலிருந்து மனோன்மணி கண்ட கனாவைச் சுத்தாந்தக் கரண ஜநிதமான பரோக்ஷ ஞானமாகவும், சேரதேசத்தில் புருடோத்தமன் கண்டகனாவைப் பரம பசுபதியான ஈசுவரனது அருளின் ஸ்புரணமாகவும், மனோன்மணியும் புருடோத்தமனும் சந்திக்கக் காரணமாக முடிந்த முனிவர்கட்டிய சுருங்கையைப் பிரத்தியக்ஷாநுபூதிக்கு ஏதுவான பாச விமோசன பந்தாவாகவும், பிறவும் இம்முறையே பாவித்து உய்த்துணர்ந்து கொள்ளவேண்டியது.
|