சொன்னார்கள்/பக்கம் 71-80

கடை வள்ளலின் தன்மை, தன்னிடத்து வந்து இரந்தவர்கட்கு இல்லையென்னாமல் கொடுப்பது. கர்ணராஜனைப் போல. இடை வள்ளலின் தன்மை, ஒருவன் தன்னிடத்து வந்து இரவாமல் அவன் குறிப்பறிந்து ஈதலே இடைவள்ளலின் தன்மை. அது கற்பகத் தரு, கலைவள்ளலின் தன்மை, இரவலன் தனக்கு வேண்டுவது இன்னதென்று கருகாமலும், தான் இருக்குமிடத்திற் செல்லாமலும் அவ்விரவலன் ஓரிடத்திலிருக்க, அவனுக்கு வேண்டுவன யாவும் ஒருங்கே கொடுத்தலும், மற்றாெருவரை அவன் இனி இரவாமலும் அப்படிக் கொடுக்கும் பொருள் அந்த இரவலனது ஜீவதசைபரியத்தம் உதவும்படி கொடுத்தலுமேயாம். இத்தகைமை யுடையவனே தலைவள்ளல். ஒருவன் கொடுக்கும் தகைமை யுடையவனாயினும், தன் வலிக்குட்பட்டவைகளைக் கொடுக் கலாமன்றித் தன் வலிக்குட்படாப் பொருளை எவ்விதம் கொடுக்கக் கூடும்? ஆகையால் அப்பிரபுவினது ஐஸ்வரியம் இத்தன்மையுடைத்தென்று அறிய வேண்டும்.

— சோ. வீரப்ப செட்டியார் (1902)

(நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபையில்)


திருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன. அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய், திருவள்ளுவர் பிறந்தது, பாண்டிய நாடு. பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர். அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

—கி. ஆ. பெ. விசுவாாதம்


இரண்டாவது உலகப் போரின்போது ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை தீயிட்டுக் கொன்றது சரியான காரியம் என்று முன்பு சொன்னேன். நான் சொன்னது சரிதான் என்பதை உலகம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறது.

—இடி அமீன்

(உகாண்டா அதிபர்

குடிப்பதற்குக் குழாய்த் தண்ணீர், குளிப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர், துணி துவைப்பதற்குக் குளத்துத் தண்ணீர்-இப்படிச் சிலர் உபயோகிப்பார்கள். ஆனால், காவிரி நீர், குளிக்க, குடிக்க, துணி துவைக்க, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்குமே பயன்படும். காவிரி நீர் மாதிரி நமது எழுத்தும் இருக்க வேண்டும். அதாவது எளிமையாக, தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருக்கவேண்டும். நம் தமிழைப் புரிந்து கொள்ள யாரும் சிரமப் படக்கூடாது. கருத்தைப் புரிந்து கொள்வது அவரவர் ஈடுபாட்டைப் பொறுத்தது.

—ராஜாஜி

மெய்யன்பர்களே! சரித்திரத்தோடு தத்துவங்களையும் உற்றுணர்தல் வேண்டும். தோன்றிய பொறிகள் ஆகாயம் எங்கணும் பரந்தன. ’சுடும்’ எனத் தேவர் அஞ்சிச் சிவனை அடைந்து அரற்றினர். ’நன்று’ என்று சிவபிரான் கூறி, அச்சித் (அறிவு மயமான) பரஞ்சோதியை ’வா’ என்றார். வந்து அடக்கமாக நின்றது. அடக்கமுள்ள பிள்ளைகளைத் தந்தைமார் அழைத்தால் உடனே அவரைச் சார்ந்து, ’ஏன் அழைத்தீர்கள்’ என்று கேட்பது உயர்ந்தது என்று சிலர் கருதுகின்றனர். என் கருத்து சென்று நிற்றல் வேண்டும் என்பதே.

—ஞானியாரடிகள்

அப்போதெல்லாம் சத்தியமூர்த்தி, மேடைகளில் முழங்குவார். நானும்கூட தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. 'பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.

நடிகை கே. பி. சுந்தராம்பாள் (13-8 - 1972)

என்னைப் பொறுத்த வரையில், என்னிடமிருந்த அளவு, என்னால் முடிந்த வரையில், சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்தேன். என் தியாகம் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். என்னிடம் இருந்ததும், என்னல் முடிந்ததும் அவ்வளவுதான். அதைச் செய்துவிட்டேன்.

—இராஜாஜி (23-2-1963)


மனிதன், வாழ்க்கையில் முன்னேற்றங்காண வேண்டு மானால், சந்தர்ப்பமும், திறமையும் ஒன்றாக அமைய வேண்டும்.

—டாக்டர் ராதா கிருஷ்ணன் (5-8-1962)


குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவதால் குழந்தை தூங்குவது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் நல்ல தூக்கம் ஏற்பட்டதால் அல்ல. மனம் மயக்கமும் சோம்பலும் அடைவதால் குழந்தை தூங்க ஆரம்பிக்கிறது. தொட்டிவில் இட்டு ஆட்டுவதால் குழந்தையின் மூளையும் ரத்த ஒட்டமும் பாதிக்கப்படுகிறது. இதை வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து வந்ததின் முடிவில் நான் உணர்ந்து கொண்டேன்.

—மேதி நவாஸ் ஜங் (18 - 3 - 1963)

(குஜராத் கவர்னர்)


அண்ணா ஏன் கவிதை எழுதவில்லை? என்று கேட்டுவிட்டு அண்ணா கவிதை எழுதினால் தமிழ் நாட்டில் வேறு யாரும் கவிதை எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு அண்ணாவின் கவிதை இருக்கும் என்று சிலர் என்னைப் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. உண்மையில் கவிஞர்களுக்குள்ள உளப்பாங்கு எனக்கில்லை. புகைப்படம் எடுக்கும் கருவியில் உள்ள லென்ஸ் போல காணுபவற்றை அப்படியே பதிய வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு கவிஞர்களுக்கு உண்டு. ஆனால் அது எனக்கில்லை.

—அறிஞர் அண்ணா (5 - 4 - 1953)

ஒரு சிறு கதை சொல்லுகிறேன். இராமன் என்றொருவனிருந்தான். அவனுக்கு ஆற்றருகில் அரை காணி நிலம் இருந்தது. பயிரிட்டான். நான்கு அங்குல அளவிற்குப் பயிர் வளர்ந்திருந்தது. மழை இல்லை. இந்திரன் மகிழ்ந்தான். அளவில்லா மழை பெய்தது. பெருவெள்ளம் வந்தது. ஆற்றில் வெள்ளம் நிறைந்தது. இராமன் நிலத்திலும் நீர் பாய்ந்தது. வெள்ளம் மேலும் மிகுந்தது. பயிர் முழுவதும் மூடப்பட்டது. வெள்ளம் வடிந்தது. நிலமிருந்த இடமே தெரியவில்லை. ஏன்? மணல் மூடிவிட்டது. ஆற்றிலிருந்த நீர் நேரே பாய்ந்ததால் உண்டாகிய கெடுதி இது. அங்ஙணமின்றி, வெள்ளத்தை அனைகோலித் தடுத்துப் பெருவாய்க்காலிற் செலுத்திப் பின்னர்ச் சிறு வாய்க் கால், கன்னி வாய்க்கால், மடை இவற்றின் வழிச் செலுத்தியிருந்தால் பயிரும் கெட்டிராது, நிலமுடையானுக்கு இழப்பும் நேர்ந்திராது, அன்பர்கள் இதனைக் கவனிக்க.

—ஞானியாரடிகள்

(கந்தர் சட்டிச் சொற்பொழிவில்)


நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை.

—பாரதிதாசன்


என்னைப் புகழாதே. இந்த உலகில் புகழுக்கும் இகழுக்கும் மதிப்புக் கிடையாது. ஊஞ்சலை ஆட்டுவது போல ஒரு மனிதனை, புகழின் புறமாகவும், இகழின் புறமாகவும், இங்கும் அங்கும் ஆட்டுகின்றார்கள்.

—விவேகானந்தர்


நபியை நினைப்பவன் எப்படி முகம்மதியனாகிறானோ, ஏசுவை நினைப்பவன் எப்படி கிறிஸ்துவனகிறானோ, அதுபோல வள்ளுவனை நினைப்பவன்தான் தமிழன்.

—அன்பழகன்(4-7-1960)

பாரதத்தைப் போன்ற பசியால் பீடிக்கப்பட்ட நாட்டில் யோசனையின்றி, வசதியாகப் பராமரிக்கும் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை முடிவில்லாத கஷ்டத்திற்குள்ளாக்கி, குடும்பத்தையும் கீழ் நிலைக்குக் கொண்டு வருதல் கொடுமையானதொரு குற்றமாகும்

—ரவீந்திரநாத் தாகூர்


குற்றம் செய்தவன், அதற்குள்ள தண்டனையடைதல் வேண்டும், கருணை காட்டுவது எளியோரிடமன்றிக் குற்றவாளியிடமன்று. குற்றஞ் செய்தவர்களை மன்னித்துக் கொண்டேயிருந்தால் உலகம் ஒழுங்காக நடைபெறாது. எமன் எப்போதும் தண்டித்துக் கொண்டேயிருப்பினும் தருமன் என்று அழைக்கப்படுகிறான். காரணமென்னை? நடு நிலைமையோடு சிக்‌ஷித்தலால் அன்றோ ஆகவே, இறந்தவர்கள் பெயரால், மூட நம்பிக்கையால் பார்ப்பனருக்கோ, சைவருக்கோ பணங்களைக் கொடுக்க வேண்டாம். இவ்வாறு கூறுவதால் என்னை நாத்திகன் என்று சிலர் கூறலாம். பிறரால் ஏமாற்றப் படுவதைத் தடுக்கும் பொருட்டே நான் சொல்லுகிறேன்.

—வ. உ. சி. (3-3-1928)


கள் குடித்தவனுக்குத் தாய் என்றும் மனைவி என்றுமுள்ள வேற்றுமை தோன்றாது. ஆதலால் அறிவைக் கெடுக்கும் கள்ளை அறவே விட்டு விடுங்கள். நாம் உட்கொள்ளும் ஆகாரங்கள் மூவகைப்படும். அவற்றுள் தாமச போஜனத்துடன் சேர்க்கப்பட்டுச் சோம்பல், அறியாமை முதலிய தீய ஒழுக்கத்தை உண்டு பண்ணும் மதுபானத்தை விலக்குங்கள்.

- சுவாமி சகஜானந்தா (8-4-1928)

(கழனிவாசல் ஆதி திராவிட பாடசாலையின் முதலாண்டு விழாக் கூட்டத்தில்)

இந்தியாவின் தரித்திரத்திற்குக் காரணம் மக்கள் தொகை அதிகமாய் விட்டதல்ல. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்தியாவைவிட மக்கள் தொகை அதிகமாய்க் கொண்டு வருகிறது. மிக சிக்கனமாகவும் முன் யோசனையுடனும் வேலை செய்து வரும் குடியானவனிடத்திலும் குற்றம் கூறுவதற்கில்லை. அவன் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியிருப்பதற்குக் காரணம் அவனுக்கு உண்பதற்கு ஒன்றும் கிடைக்காமலிருப்பதே. ஆளை அழுத்தக்கூடிய நிலத்தீர்வையும், இந்தியாவின் கைக்தொழில்கள் பாதுகாக்கப்படாமல் இங்கிலீஷ் யந்திரங்களுடன் போட்டி போட்டு அழிந்து போனதுமே இந்தியாவின் தரித்திரத்திற்குக் காரணம்.

—ரமேஷ் சந்த்ரதத்

(1899-ல் லக்ஷ்மணபுரியில் நடைபெற்ற 15-வது காங்கிரஸ் மாநாட்டில்)

நாட்டின் அரசியல், ஜாதி, மதம், மாகாணப் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் வரையில், எந்தவிதமான சட்டத்தைச் செய்தும் பயனில்லை.

—கிருபளானி (2-12-1960)


நாம் பேச்சு அளவில் வளர்ந்திருக்கிரறோம். இடித்தால் இரும்பு; வெட்டினால் வெள்ளி, தட்டினல் தங்கம், என்று அழகாகப் பேசலாம். ஆணால் தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவைகளை பூமியிலிருந்து எடுக்க ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

—அமைச்சர் வெங்கடராமன் (9.8-1960)

நமக்குத் தலைவலி என்றால் டாக்டர் வந்து மருத்து கொடுப்பார். தலைவலியை வாங்கிக் கொள்ளமாட்டார். அதைப்போல, போர்க்கருவி வரும். ஆனல் போராடுவது நாம்தான்,

—காமராசர் (9.12. 1962)

அரசியலே மோசமானது என்று சில தத்துவ மேதைகள் கூறுகிறார்கள். அரசியல் மோசமானது அல்ல. அரசியலை மக்கள்தான் மோசமாக ஆக்குகிறார்கள். தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தனிப்பட்டவர்களின் முன்னேற்றம் ஆகியவையே அரசியல் என்று நாம் ஆக்கிவிட்டோம். ஆனல் உண்மையில் அரசியல் என்பது மக்களின் பொருளாதார சமுதாய நிலையை உயர்த்துவதற்கான பெரியதொரு இயக்கமாகும்.

—இந்திரா காந்தி (16-9-1970)


திறமையில்லாத ஒரு பெண் நடிகை ஆக முடியும் என்பதை எல்லாம் என்னல் நம்ப முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு படியிலுமே என்னுடைய உழைப்பு இருக்கிறது. நடிகைகளின் பகட்டில் மயங்கும் பலர் அதற்குப் பின்னல் இருக்கும் அவளுடைய உழைப்பை மறந்து விடுகிறார்கள்.

—நடிகை உஷா நந்தினி


புதிதாய் ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு இயக்கமும், அதன் அடிப்படையான முக்கிய கொள்கைகள் உலகத்திலுள்ள சமூகத்தினர் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்படுவற்கு முன்னல், இரண்டு பெரிய முட்டுக்கட்டைகளைத் தாண்டித்தான் முன் செல்ல வேண்டுமென்ற ஒரு கண்டிப்பான நியதி ஏற்பட்டிருப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது. மக்களால் அக்கொள்கைகள் ஒழுங்கற்றவையென நிராகரிக்கப்படுவதும், பின் அவை மிகவும் சிறப்பானவை அல்லவெனக் கருதி கவனம் செலுத்தாது அலட்சியம் செய்யப்படுவதுமான இவ்விரண்டும் மேலே கூறப்பட்ட முட்டுக்கட்டைகளாகும்.

—சாரதா நந்த சுவாமிகள்(1-4-1926)

(கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பேளூரில் நடைபெற்ற இராம கிருஷ்ண சங்கத்தின் முதல் மாநாட்டில்)

நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அந்தப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ. 100-ல் இருந்து ரூ. 150 ஆக ஏற்படுத்திவிட்டேன். நூறு ரூபாய் எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்திய செலவு முதலியவைகளுக்கு அனேகமாக சரியாய்ப் போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2, 3, பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரசாரத்திற்குப் பயன்படும்.

—தந்தை பெரியார் (16-6-1968)


நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன்.

—ராஜாஜி (5-3.1962)


நான் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. எந்த கடவுள் படத்தையும் பூஜிப்பதில்லை. கடவுள் கல்லிலும் இல்லை. மண்ணிலும் இல்லை. மனிதனே கடவுள். நானே கடவுள்

—பசவலிங்கப்பா (3-8-1973)

(மைசூர் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர்)


என்னுடைய தாயாரின் முன்னோர்கள் 12-வது நூற்றாண்டில் நார்வேயிலிருந்து ஸ்காட்லண்டின் வடபாகத்தில் குடியேறினார்கள். என்னுடைய முன்னேர்களில் ஒருவர் கடற் கொள்ளைக்காரராய் இருந்தார். அவர் பிடிக்கப்பட்டு, 1174—ஆம் ஆண்டில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

—டாக்டர் வில்லியம் மில்லர்


எவன் அதிக ஆச்சரியப்படுவதை நிறுத்திக் கொள்கிறானோ, அவன் சீக்கிரத்தில் புத்திசாலியாகிவிடுகிறான்.

—கவிஞர் சுரதா

அந்நிய கவர்ன்மெண்ட் எவ்வளவு உத்தமமானதாயினும், எவ்வளவு நல்லெண்ணமுடையதாயினும், மக்களின் வேண்டுகோளைத் தெரிந்து கொள்ள எவ்வளவு சிரத்தை காட்டின போதிலும், ஜாதி, மதம், நிறம், நாகரீகம் இவைகளில் முற்றிலும் அது வேற்றுமைப் பட்டதாயிருப்பதால் மக்களின் மனப்போக்கை யறிந்து அதன்படி நடப்பது இயற்கையாகவே அசாத்தியம். ஆகையால் சட்ட சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் அவசியம்.

—டாக்டர் ராஜேந்திரலாலா மித்ரா

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்)


பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பாதீர்கள். பள்ளிக்கூடத்தில் படிப்பதால் எந்த நன்மையும் இல்லை. என்மகனைக் கூட நான், ‘ஏண்டா பள்ளிக்கூடம் போகிறாய்?‘ என்று தான் கேட்கிறேன். நான் கூடப் பள்ளிக்கூடம் போகவில்லை. நான் என்ன கெட்டா போய்விட்டேன்?”

—ஜெயகாந்தன்

(சிறுகதை எழுத்தாளர்)


எந்தக் காலத்திலும் சீனா தோற்கடிக்கப் பெற்றது கிடையாது. யாராலும் அதைத் தோற்கடிக்க முடியாது. போர் வந்து விட்டால், முப்பது கோடிப் பேரை பலி கொடுத்து மீண்டும் உலகில் பெரிய நாடாய் இருக்கக் கூடிய அளவுக்கு எண்ணிக்கை பலம் சீனாவுக்கு உண்டு.

—மா. சே துங்


ஒரு தாஜ்மகாலைக் கட்ட அரசனின் முழு கவனமும், கஜானாவின் பணம் முழுவதும் செலவிட்டுக் கட்டி முடிக்க 14—ஆண்டுகள் முடிந்ததாகக் கூறும் போது, ஒரு பெரிய உபகண்டத்தின் முன்னேற்றம் அடைய நீண்ட காலம் ஆவது இயற்கையே.

—எம். ஏ. மாணிக்கவேலு

(சென்னை ரெவின் யூ மந்திரி)

ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் அனைவரும் அரசர்களைப் புகழ்ந்து எழுதினர்கள். அப்படி புகழ்ந்து எழுதினால்தான் அவர்களுக்கு வாழ்வு என்ற நிலை இருந்தது. அப்பேர்ப்பட்ட காலத்தில் கூட திருவள்ளுவர் போன்றவர்கள் மக்களுக்காக எழுதினர்கள். ஆனல் இப்போதைய எழுத்தாளர்கள், அரசர் காலத்து எழுத்தாளர்களின் நிலையிலே தான் இருக்கிறார்கள். நான் மனதில் பட்டதை அப்படியே சொல்பவன். அதனால்தான் இதைச் சொல்கிறேன். அரசியலில் செல்வாக்கு பெற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்து எழுதினால் தான் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும் என்று இன்றைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.

—மதுரை முத்து (28-10-1974)

(மதுரை மாநகராட்சி மேயர்)


திருமணம் ஆனபோது 7 பெண் குழந்தைகள் வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்போது என் ஆசை நிறைவேறவில்லை. நாட்டுப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்தது தான் இதற்குக் காரணம்.

—மானேக்‌ஷா (15-7-1974)

(இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி)


நானே என்னைக் கெடுத்துக் கொண்டதாகத்தான் சொல்லவேண்டும். எந்த நிலையிலுள்ளவனும், பெரிய பதவியிலிருந்தாலும் சரி, சிறுபதவியிலிருந்தாலும் சரி, தன் செய்கையினலேதான் கெட்ட நிலையை அடைய முடியும். இந்த உண்மையைச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, நான் சொல்லுவதும் உண்மையே. இந்த நிமிடத்தில் மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். நான் இரக்கமற்று இந்தக் குற்றத்தை என் தலையிலே சுமத்திக் கொள்ளுகிறேன். உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்கு செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடிது.

—ஆஸ்கார் ஒயில்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_71-80&oldid=1009822" இலிருந்து மீள்விக்கப்பட்டது