திருக்குறள் மணக்குடவருரை/மக்கட்பேறு

எ-வது.-மக்கட்பேறு.

அஃதாவது, மக்களைப் பெறுவதனா லாம் பயன் கூறுதல். இல்வாழ்வான் கடன்களுள் தென்புலத்தார்க்குச் செய்யவேண்டுவது மக்களாலன்றி இறுக்கமுடியாமையின் இஃது ஈண்டுக்கூறப்பட்டது.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவுடைய
மக்கட்பே றல்ல பிற.

இ-ள்:- பெறும் அவற்றுள் - (ஒருவன்) பெரும் பொருள்களுள், அறிவுடைய மக்கள் பேறு - அறிவுடைய மக்களைப் பெறுதல் (போலப் பயன்படுவது), அல்ல: பிற - ஒழிந்தபொருள்களுள், யாம் அறிவது இல்லை - யாம் கண்டறிவது இல்லை. [கண்டறிவது - பொறிகளால் அறியும் பொருள். ஒழிந்த - மக்கட்பேறல்லாத.]

இஃது, அறிவுடைய மக்களால் பெற்றோர் சிறந்த பயனை அடைவ ரென்றது. ௬௧.

ழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

இ-ள்:- எழு பிறப்பும் தீயவை தீண்டா - எழு பிறப்பினும் துன்பங்கள் சாரா, பழி பிறங்காத பண்புடை மகன் பெறின் - (ஒரு பிறப்பிலே) பழியின் கண் மிகாத குணத்தினையுடைய மக்களைப் பெறுவாராயின்.[பிறங்காது என்பது ஈறு கெட்டு நின்றது.]

இது நன் மக்களைப் பெற்றார் எழுபிறப்பிலும் துன்புறா ரென்றது. ௬௨.

ம்பொருள் என்பதம் மக்கள், அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

இ-ள்:- தம்மக்கள் தம்பொருள் என்ப - தம்மக்களைத் தம்முடைய பொருள் என்று சொல்லுவர் (உலகத்தார்), அவர் பொருள் தம்தம் வினையால் வரும் - அம்மக்களாகிய பொருள் தம்தம்முடைய வினையால் வருதலான். [அவர் பொருள் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை.]

இது, தம்மக்கள் தம்பொரு ளென்பது. ௬௩.

மிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

இ-ள்:- தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம்முடைய மக்கள் சிறு கையாலே அளைந்த கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - (இனிமை யுடைத்தாகிய) அமிழ்தினும் மிக இனிது. [ஏகாரம் - அசை.]

இது, தம்மக்கள் கையால் அளையப்பட்ட உணவு தமக்கு மிக்க சுவை நல்கு மென்றது. ௬௪.

க்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் : மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

இ-ள்:- மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - தம்மக்கள் தமது உடம்பினைச் சார்தல் தம் உடம்பிற்கு இன்பமாம். அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அவர் சொற்களைக் கேட்டல் தம் செவிக்கு இன்பமாம். [மற்று - அசை.]

இது, தம்மக்கள் தம்உடம்பில் சார்தலும் தம்மக்கள் சொல் தம்செவியில் படுதலும் தமக்கு இன்பம் பயக்கு மென்றது. ௬௫.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்.

இ-ள்:- தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் - தம்மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர், குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலோசை இனிது யாழோசை இனிது என்று சொல்லுவர், (கேட்டவர் அவை இனிதென்று சொல்லார் என்றவாறு.)

இது, தம்மக்கள் சொல் அவ்விரண்டினும் இன்பம் பயக்கு மென்றது. ௬௬.

ம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தம்மக்கள் அறிவுடைமை - தம்மக்கள் அறிவுடையாராதல், தம்மின் மாநிலத்து மன் உயிர்க்கெல்லாம் இனிது - தம்மைப் போல உலகத்து உயிர்கட்கெல்லாம் இனிதாம்.

இது, தம்மக்கள் அறிவுடைமையால் உலகமும் இன்பமுறு மென்றது. ௬௭.

ன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்,

இ-ள்:- ஈன்ற பொழுதின் பெரிது. உவக்கும் - தான்பெற்ற காலத்திலும் மிக மகிழும், தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைச் சான்றோ னென்று பிறர் சொல்லக் கேட்ட (காலத்துத்) தாய்.

இது, மக்கள் புகழையெய்துதல் தாய்க்கும் இன்பம் பயக்கு மென்றது. ௬௮.

ந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்து
முந்தி இருப்பச் செயல்,

இ-ள்:- தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம், அவையத்து முத்தி இருப்ப செயல் - அவையகத்தின் கண்ணே (அவன்) முந்தி இருக்குமாறு (அவனுக்குக்) கல்வி உண்டாக்குதல்.

இது, மகனைக் கல்வியுடைய னாக்குதல் தந்தையின் கடனென்றது. ௬௯.

கன்தந்தைக் காற்றும் உதவி, இவன் தந்தை
என்னோற்றான் கொல்என்னும் சொல்,

இ-ள்:- மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என் நோற்றான் என்னும் சொல் - (இவனைப் பெறுதற்கு) இவன் தந்தை என்ன தவம் செய்தான் என்று உலகத்தார் சொல்லும் சொல்லைப் படைத்தல். [கொல்-அசை.]

நெறியின் ஒழுகுவாரை உலகத்தார் புகழ்வராதலான், மகனும் ஒழுக்கமுடையவ னாக வேண்டு மென்று. இது கூறிற்று. ௭0.