நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆண்டவன் கட்டளை

6. ஆண்டவன் கட்டளை

பெருமானார் அவர்கள் ஹலரத் ஹலிமா அவர்களிடம் வளர்ந்து வரும் பொழுது வயது மூன்று.

ஒருநாள், அன்னை ஹலிமாவின் மக்களைக் காணாமையால், பெருமானார் அவர்கள், “ அருமை அன்னையே என் சகோதர்களைக் காணவில்லையே, அவர்கள் எங்கே!” என்று கேட்டார்கள்.

{{gap}“மகனே! அவர்கள் பகல் நேரங்களில் ஆடுகளை ஒட்டிக் கொண்டு போய் மேய்த்து, இரவில் வீடு திரும்புவார்கள்” என்று கூறினார் ஹலிமா.

{{gap}“தாயே! அந்த வேலையைச் செய்வதற்கு எனக்குத் தகுதி இல்லையா?” எனக் கேட்டார்கள் பெருமானார்.

{{gap}மறுநாள் முதல், பெருமானாரும் மற்ற பிள்ளைகளோடு ஆடு மேய்த்து வந்தார்கள்.

{{gap}ஹலரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் முதல் நபிமார்கள் ஆடு மேய்த்து வந்திருக்கின்றனர்.

{{gap}முன்னர் தோன்றியிருந்த நபிமார்களிடம் உள்ள இந்த அம்சம் பெருமானார் அவர்களிடமும் அமையப் பெற வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை போலும்!