நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உடன்படிக்கையின் நிபந்தனைகள்

126. உடன்படிக்கையின் நிபந்தனைகள்

சமாதான உடன்படிக்கையில் கண்டுள்ள நிபந்தனைகள்:

  1. இவ்வருடம் முஸ்லிம்கள் மக்காவுக்குள் செல்லாமல் திரும்பி விட வேண்டும்.
  1. மறு வருடம் முஸ்லிம்கள், மக்காவுக்குள் வந்து மூன்று நாட்கள் மட்டும் தங்கிப் போகலாம்.
  2. முஸ்லிம்கள் மக்காவுக்குள் வரும் போது, ஆயுதங்கள் எதையும் கொண்டு வரக் கூடாது. வாளை மட்டும் கொண்டு வரலாம். ஆனால், அதை உறையிலே போட்டிருக்க வேண்டும்.
  3. மக்காவில் ஏற்கனவே தங்கியிருந்த முஸ்லிம்களை, மதீனாவுக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது.
  4. மக்காவிலிருந்து யாரேனும் மதீனாவுக்குச் சென்றால், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அவர்களை மக்காவுக்குத் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால், முஸ்லிம்களில் யாரேனும் மக்காவுக்கு வந்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.
  5. அரபிக் கூட்டத்தார் தங்கள் விருப்பம் போல், இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சியினரிடமாவது உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.