நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உயிர் துறந்த உத்தமர்

30. உயிர் துறந்த உத்தமர்

தாங்கள் அனுப்பிய தூதர் மூலமாக, பெருமானார் அவர்கள் கூறிய விஷயங்களை குறைஷிகள் அறிந்தார்கள்.

ஆசைகளைக் காட்டி, பெருமானார் அவர்களை வசப்படுத்த இயலாது என்பதை குறைஷிகள் நன்கு தெரிந்து கொண்டார்கள். இனி, பெருமானார் அவர்களுக்கு இடையூறுகள் உண்டாக்கி, இன்னல்களை விளைவிப்பது எனத் தீர்மானித்தனர் குறைஷிகள். அவ்வாறே செய்தனர்.

ஒரு சமயம், பெருமானார் அவர்கள் கஃபாவில் நின்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

அதைக் கண்டதும் அடங்காத கோபம் கொண்ட குறைஷிகள், பெருமானார் அவர்களைத் தாக்கினார்கள்.

அதை அறிந்த ஹாரிது என்பவர் ஓடோடி வந்து, பெருமானார் அவர்களுக்கு ஆபத்து நேரிடாதபடி பெருமானார் அவர்களுக்கும், குறைஷிகளுக்கும் மத்தியில் நின்று கொண்டார்.

பல பகுதிகளிலிருந்தும் வீசப்பட்ட கத்திகளினால் தாக்குண்ட ஹாரிது உயிர் துறந்தார்.