நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பிராட்டியாருக்கும் பெருமானாருக்கும் திருமணம்

16. பிராட்டியாருக்கும் பெருமானாருக்கும் திருமணம்

பெருமானார் அவர்களின் உயர்வான பண்புகளையும், சிறப்பான குணங்களையும் நேரிலும், பிறர் வாயிலாகவும் அறிந்த கதீஜா நாயகியார், பெருமானார் அவர்களைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.

கதீஜாப் பிராட்டியாரின் செல்வத்தையும், தாராளத் தன்மையையும் அறிந்த அரபுப் பிரபுக்கள் பலர், பெருமாட்டியாரை மணந்து கொள்ளத் தூது அனுப்பினார்கள். அவர்களை எல்லாம் பெருமாட்டியார் நிராகரித்து விட்டனர்.

பெருமாட்டியார், தம்மைத் திருமணம் செய்து கொள்ளுமாறு, பெருமானார் அவர்களிடம் நபீலா என்னும் தோழியைத் தூது அனுப்பிவைத்தனர்.

பெருமானார் தங்கள் பெரிய தந்தை அபூதாலிபிடம் ஆலோசித்து, அவர் சம்மதத்தைப் பெற்றுத் திருமணத்துக்கு இசைந்தனர்.

கதீஜா நாயகியாருக்கும், பெருமானார் அவர்களுக்கும் திருமணம் சிறப்புற நிறைவேறியது.

பெருமானார் அவர்களுக்கு அப்பொழுது வயது இருபத்து ஐந்து! கதீஜா நாயகியாருக்கு வயது நாற்பது.