மூவர் சிறப்பு
தொகு
மூவர் என்போர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞான சம்பந்தரும், ஆளுடைய அரசாகிய திருநாவுக்கரசரும், ஆளுடைய நம்பியாகிய திருநாவலூர்ச் சுந்தரரும் ஆவர். அவர்களின் சிறப்பினைப்பேசுவது இப்பகுதி. (வெண்பா) பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போ லல்லாமை காண். (1) என்பைப்பெண் ணாக்கி யிரும்பாலை நெய்தலாய்
உம்பர் மகிழ்ந்திடவன் றோதியதும் - தம்பிரான்?
கதவ மடைக்கக் கழறியது மெல்லாம்
பதிகரண மென்றுணரப் பா. (2)
அரவங் கடித்திறந்தா னாருயிரை மீட்டுந்
திருமறைக் காட்டிற்பின் றிறந்தும் - கரமலையை
நீற்றறையை வேகமற நீராகப் பாடியதுங்
கூற்றுதைத்தான் போதமெனக் கொள். (3)
கல்லைப்பொன் னாக்கிக் கடுமுதலை வாய்ப்பிள்ளை
மெல்ல வழைத்து வெறுக்கையினைச் - செல்லுகின்ற
ஆற்றிலிட்டு மீட்டு மருங்குளத்திற் கண்டதுவும்
சாற்றிற் சிவகரணந் தான். (4)
பார்க்க
அகத்தியர் தேவாரத்திரட்டு மூவர் வரலாறு மூவர்புராண சாரம் மூவர் தோத்திரம் நால்வர் சிறப்பு தேவார மகிமை