வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




வாழ்க்கை

அடி சரஸி,

எழுதட்டுமா? நீ, பல்லாண்டு பலருடன் பழகியவர்களில் நானும் ஒருத்தி. உன் அன்பு மழை செழித்து வளர்ந்தவர்களில் நானும் ஒருத்தி. "என்னை னக் மறக்காமல் இருங்க வேண்டுமே?" என்று ஏங்கும் பலருள் நானும் ஒருத்தி.

இன்று "ஒருவக்கு ஒருத்தியாக” ஆகப் போக நீ என்னை என்றும் உன் நினைவில் நிறுத்திவைப்பாயோ! அல்ல "அவர் நினைவில் ஆழ்ந்து நீ என்னை மறந்து வைப்பாயோ?

திருவரங்கம்

அன்புயிரே

17. 8.1950


ஆசிரியர் :
லியோ டால்ஸ்டாய்
தமிழாக்கம்
,
ப. ராமஸ்வாமி
பழனியப்பா பிரதர்ஸ்

சேப்பாக்கம்

தெப்பக்குளம்

சென்னை - 5

திருச்சி - 2

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

முதற் பதிப்பு : மார்ச்சு, 1956
இரண்டாம் பதிப்பு: ஜனவரி, 1961

 

விலை ரூபா - 12.00

 

ஏஷியன் பிரிண்டர்ஸ்,
சேப்பாக்கம். சென்னை - 5.

முன்னுரை

லியோ டால்ஸ்டாய் மாபெருங் கலைஞர் என்றும், இலக்கிய மேதை என்றும் உலகமே கொண்டாடுகின்றது. நம் நாட்டு அறிவாளரிடையே அவருடைய நூல்கள் அதிகப் புகழ் பெற்றிருக்கின்றன. டால்ஸ்டாய்க்கும் மகாத்மா காந்திக்கும் ஏற்பட்டிருந்த நெருங்கிய தொடர்பாலும், தீமையைப் பலாத்காரத்தால் எதிர்க்கக் கூடாது என்று அவர் போதித்த கொள்கையைக் காந்தியடிகள் பின்பற்றித் தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் பெரிய இயக்கங்களை நடத்தி வந்ததாலும், அவருடைய நூல்களில் இந்திய மக்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். முக்கியமாகத் தென்னாட்டில் ஆங்கிலத்திலுள்ள டால்ஸ்டாயின் நூல்களைப் படிப்பவர்கள் பலர் இருக்கின்றனர். இப்போது அந் நூல்களில் சில தமிழிலும் வெளிவந்திருக்கின்றன.

அறிஞர் டால்ஸ்டாய் கலைச்சுவை நிரம்பிய பல கதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இவை உலகத்தின் இலக்கியச் செல்வத்தோடு சேர்ந்துவிட்டன. அவருடைய நாடகங்களையும் பெர்னார்ட் ஷா போன்ற பல பெரிய ஆசிரியர்களே பாராட்டியிருக்கின்றனர். அவர் எழுதிய கட்டுரைகளும், கடிதங்களும், ஆராய்ச்சிகளும் அனந்தம். பண்பட்ட அவருடைய உள்ளத்திலிருந்து ஒரே வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்த கருத்துக்களும் கற்பனைகளும் பற்பல எழுத்தோவியங்களாக அமைந்திருக்கின்றன.

டால்ஸ்டாயின் கதைகளையும் நவீனங்களையும் மக்கள் படிக்கும் அளவுக்கு அவருடைய கட்டுரைகளைப் படிப்பதில்லை. அறிஞர்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்காக அவைகளைப் படிக்கலாம். காந்தீயவாதிகள் சிலர் கொள்கைக்காக அவைகளைப் போற்றலாம். பொதுவாக மற்றவர்கள் எல்லோரும் அவைகளை ஆர்வத்தோடு படிப்பதில்லை. இக் கட்டுரைகள் மதம், அரசாங்கம், பொருளாதாரம், சமூக அமைப்பு. ஒழுக்கம் முதலிய பல விஷயங்களையும் பற்றியவை. இவைகளில் ரஷ்ய மேதையான டால்ஸ்டாயின் ஆணித்தாரமான அபிப்பிராயங்களைக் காணலாம். ஆனால், கதைகளைப் படிப்பதுபோல் இவைகளை இலேசாகப் படித்துத் தள்ளிவிட முடியாது. இவைகளைப் பொறுமையோடு ஊன்றிப் படிக்க வேண்டியிருக்கும்.


இத்தகைய கட்டுரைகளில் முக்கியமான ஒன்று ‘வாழ்க்கை’, இது மிகவும் விரிவானது. உலகம், உயிர், உடல், வாழ்வு, மரணம், இன்பம், துன்பம் முதலிய விஷயங்களைப் பற்றி இந்நூலில் விரிவாக ஆராய்ச்சிசெய்யப் பெற்றிருக்கிறது. இது டால்ஸ்டாயின் தனி ஆராய்ச்சி-சமய நூல்கள், புராணங்களிலுள்ள வாக்கியங்களைத் தொகுத்துக் கூறப்பட்டதன்று. ஆசிரியர் தாமாகவே ஆராயாது, உண்மையான மனித வாழ்க்கை எது என்பதை இதில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

டால்ஸ்டாயின் 81-வருட வாழ்க்கை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. சிறு வயது முதலே அவருக்குத் தத்துவ ஞானத்தில் பற்றுண்டு. பிறவியிலிருந்தே அவர் கிறிஸ்தவர். ஆனால், பதினாறாவது வயதில் கிறிஸ்தவ மத ஸ்தாபனமான ரஷ்ய சர்ச்சிடம் -அவருக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது. பின்னர் என்ன என்னவோ ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார். இறைவனைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் அவருக்கு அவரும் நம்பிக்கை ஏற்பட்டது. இறுதியாகப் பத்தொன்பதாவது வயதில், அவருக்கு எதிலும் நம்பிக்கையில்லாது போயிற்று. ஆயினும், இருபத்து மூன்றாவது வயதிலிருந்து மறுபடியும் தத்துவ - ஆராய்ச்சியில் அவர் மனம் ஈடுபட்டு வந்தது.

இடையில் சில ஆண்டுகள் அவர் பட்டாளத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இரண்டு பெரிய போர்களில் அவர் நேரில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னால் போர்த் தொழிலையே வெறுத்து இராணுவத்திலிருந்து வெளியேறினார். மனிதரை மனிதர் அரிந்து தள்ளுவதும், சுட்டு வதைப்பதும் மகா பாவம் என்றும் உலகிலேபோரை ஒழித்துவிட வேண்டும் என்றும் அவர் ஒரு பெரிய பிரசாரப் போரை ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவர் மறுபடி கிறிஸ்தவ சர்ச்சில் சேரலாம் என்று கருதினார். ஆனால், அக்காலத்தில் ரஷ்யாவில் அந்த ஸ்தாபனம் லேவாதேவிக் கடைபோல் இருந்ததே தவிர, கிறிஸ்துநாதரின் உண்மையான போதனைகளுக்கு அதில் இடமில்லை. ரஷ்யப் புரட்சித் தலைவா லெனின் கூறியிருப்பது போல், பாதிரிமார்கள் நீண்ட அங்கிகள் அணிந்த அரசாங்க உத்தியோகஸ்தர்களாகவும், கிறிஸ்து நாதரின் போலீஸ் படையினராகவும் இருந்தனர். டால்ஸ்டாய் போன்ற அறிஞருக்கும் இவர்களுக்கும் ஒத்துவருமா?


கிறிஸ்தவ சபையில் சேர்ந்து பெயரளவில் கிறிஸ்தவராகயிருப்பதைவிட, கிறிஸ்துவின் உண்மையான அடியாராயிருக்கவே டால்ஸ்டாய் விரும்பினார். சர்ச்சுக்கு வெளியில் இருந்துகொண்டே அவர் சமய ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அவருடைய ஆராய்ச்சிகளையும், கொள்கையும் கண்டு ரஷ்ய சர்ச் அவரைப் ‘பிரஷ்டம்’ செய்து ஒதுக்கிவிட்டது.

அக்காலத்தில் டால்ஸ்டாயின் இலக்கியத்தை உலகில் பல நாடுகளும் போற்றி வந்தன. அவர் தமது ஐம்பதாவது வயதில் (1877-இல்) சமய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிப் பத்து ஆண்டுகளாக அதிலேயே ஈடுபட்டிருந்தார். அந்த ஆராய்ச்சியன் விளைவாக அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்று இந்த ‘வாழ்க்கை’.

இந் நூலை ரஷ்ய நாட்டில் வெளியிடக் கூடாது என்று அக்காலத்தில் ஜார் சக்கரவர்த்தியின் அரசாங்கம் தடை செய்து விட்டது. பல ஆண்டுகட்குப் பின் இது முதன் முதலாக சுவிட்ஜர்லாந்து தேசத்தில் வெளியிடப் பெற்றது. பின்னர் பிரெஞ்சு மொழியிலும், ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் வெளி வந்தது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு ‘ப்ரீ ஏஜ் பிரஸ்’ (Free Age Press) வெளியிட்ட நூலிலிருந்து சுருக்கி எழுதப் பெற்றது.

இந் நூலின் ஆரம்பத்தில் ஆசிரியர் ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்ற கேள்விக்குப் பதில் கூறுகிறார். நூலின் மூடிவில், மரணத்தைப் பற்றி ஆராய்ந்து, ‘மரணம் என்பது என்ன?’ என்பதை விளக்கியுள்ளார். இந் நூல் ஆசிரியரின் அரிய ஆராய்ச்சிகளில் ஒன்று. அவருடைய மற்ற நூல்களுக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் இதை ஒரு திறவுகோல் என்று சொல்லலாம். இந் நூல் சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்க்கப் பெறவில்லை. ஆசிரியரின் கருத்துக்களையே சுருக்கி எழுதியுள்ளேன். எவ்வளவு தெளிவாக எழுதினாலும், விஷயம் பெரிதாகையால், ஒவ்வொரு வரியையும் படித்த பிறகு சிந்தனை செய்து பார்த்தால்தான் பொருள் விளங்கும்.

திருநெல்வேலி
25-3-'56
ப ராமஸ்வாமி