பெருங்கதை/1 53 பிடி வீழ்ந்தது

(1 53 பிடி வீழ்ந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

1 53 பிடி வீழ்ந்தது

உதயணன் செயல் தொகு

அசைந்த விரும்பிடி யற்ற நோக்கி
வயந்தக குமரற்கு வத்தவ னுரைக்கும்
நொப்புணை வலியா நுரைநீர்ப் புக்கோற்
கப்புணை யவள்வயி னவன்கை தீர்ந்தாஅங்
கவந்தியர் கோமா னருண்முந் துறீஇப் 5
பை….. க கொலைப்பாற் படவகுத் தீந்த
அரும்பிடி நம்மை யாற்றுத் தன்றாற்
கரும்படு தீஞ்சொற் காஞ்சனை யெழீஇ
அவர பக்கம் விரைவனை யிழிகெனக்
கவர்கணை நோன்சிலை கைவயி னடக்கி 10
வருத்தமுற் றலமரும் வாளரித் தடங்கட்
டிருத்தகு தாமரைத் திருப்புக்குத் திளைக்கும்
அருவரை யகலத் தணிபெறத் தழீஇக்
கருவரை மிசைநின் றிருநிலத் திழிதரும்
உமையொடு புணர்ந்தவிமையா நாட்டத்துக் 15
கண்ணணங் கவிரொளிக் கடவுள் போல
மத்தக மருங்கிற் றத்துவன னிழிதர

பிடி வீழ்தல் தொகு

மருங்குற மண்மிசை வீழின் மற்றென்
இரும்புறத் திருந்தோர்க் கேதமென் றெண்ணி
மல்குநீ ருடுக்கை மண்ணக மடந்தையைப் 20
புல்லிக் கோடல் பிரிந்தது போலப்
பாவடி நிலனுறப் பரப்பி யுதயணன்
சேவடி தலையுறச் செயதது பொறுவென
வணக்கஞ் செய்வது போல மற்றுத்தன்
அணிக்கேழ்ப் பொறிச்செவி யாட லாற்றாது 25
செங்கேழ்த் துருத்தியி னங்காந் துயிர்த்தொறும்
பைசொரி பவழம் போலப் படிதாழ்
கைசொரி யுதிரங் கான்றுவந் திழிதர

உதயணன் செயல் தொகு

வீழ்ந்த வாறுகது நோக்கிய திசையும்
தேர்ந்த நூல்வழித் திண்ணி தாகலின் 30
அந்நிலை யெய்து மிடுக்கணும் பின்னிலைத்
தன்னிலந் தழூஉதலுந் தான்வலிப் பெய்தி
மணியும் புரோசையு மணிபூண் டவிசும்
கடித்தக முட்பட வெடுத்தனன் களைஇ
இன்னுயி ரினிவிடு மிதனுக் கின்றென 35
மன்னுயிர் காவலன் மனத்தி னெண்ணித்
துன்னிய தோழற்குத் தோன்றக் கூறி
வத்தவ ரிறைவன் மத்தகம் பொருந்திக்
குளிர்ப்பத் தைவந் தளித்த லானான்
இறுதிக் காலத் துறுதி யாகிய 40
ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றிச்
செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பி
எம்மை யிடுக்க ணிம்மை தீர்த்தோய்
வரும்பிறப் பெம்மோ டொருங்கா கியரெனச்
செந்தா மரைக்கண் டெண்பனி யுறைப்ப 45
நிறுத்த லாற்றா நெஞ்சினிகழ் கவற்சியன்
மறுத்து முதயணன் வயந்தகற் குரைக்கும்
பெறற்கரும் பேர்யாழ் கைவயிற் பிரிந்ததும்
இயற்றமை யிரும்பிடி யின்னுயி ரிறுதியும்
எள்ளு மாந்தர்க் கின்ப மாக்கி 50
உள்ளு தோறு முள்ளஞ் சுடுதலிற்
கவற்சியிற் கையற னீக்கி முயற்சியிற்
குண்டுதுறை யிடுமணற் கோடுற வழுந்திய
பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல
இருவே மிவ்விடர் நீக்குதற் கியைந்தனம் 55
திருவேர் சாயலைத் தேமொழித் துவர்வாய்க்
காஞ்சன மாலையொடு கண்படை கொளீஇக்
காவ லோம்பெனக் காவல னருளிக்
கவர்கணை நோன்சிலை கைவயி னீட்டி
அரணக் கூர்வா ளசைத்த தானையன் 60
கரணச் சேடகங் கைவயி னடக்கி
விச்சையின் மெலிந்துதன் விழுத்தகு நகரிழந்
தச்சமொ டொளித்த வணித்தகு பேரொளிக்
கோலக் குமரன் போலத் தோன்றி
மடப்பிடி தனக்கு மாக்கடன் கழியா 65
தியங்குத லிலக்கண மிறைமகற் கின்மையிற்
செய்வது துணியுஞ் சிந்தைச் சூழ்ச்சியன்
வெவ்வழி நிலமிசை வில்லேப் பாட்டிடை
எவ்வெம் மருங்கினுந் தெரிவோ னவ்வழி
நல்காக் கரவ னடுவன் மேல்வர 70
ஒல்காத் தவமிலா தொளித்ததுபோலக்
குண்டுசுனை யடுக்கத்துக் கொழுங்கனி வீழ்ச்சிப்
பண்ணமை படைச்சுவர்க் கண்ணகன் றமைந்து
நாற்பெரு வாயி லேற்ப வியற்றிக்
கற்படை யமைத்துக் கடுமழை மறப்பினும் 75
உட்படு நீரோ டூற்றுடைத் தாகி
வாசற வறியா வளப்பருங் குட்டத்துப்
பாசடைத் தாமரை யாம்பலொடு பயின்று
புட்புகன் றுறையுமோர் பூம்பொக் கரணியை
முற்படக் கண்டே முகனம ருவகையன் 80
விளக்குறு வெள்ளி முளைத்துமுன் றோன்ற
வடக மீக்கோள் வாளொடு களைந்ததன்
படுகரை மருங்கிற் பாங்குற வைத்து
வருதிரை புகூஇம் வருணன் போல
இருகரை மருங்கினும் புள்ளெழுந் தியம்பத் 85
தெளித்தலைத் தண்ணீர் குளித்தன னாடி
வாய்மைக் கொத்த வாய்ப்பூச் சியற்றித்
தூய்மைக் கொத்த தொழில னாகி
அரும்படைத் தானை யரசூர்ந் தியற்றிய
இரும்பிடி யினிதுழி யேறுக சென்றெனப் 90
போர்க்கடம் பூண்ட பொருவலித் தடக்கையின்
நீர்க்கட னாற்றிய நியமக் கிரிகையன்
பூம்போ தணிந்த வாங்குகரை மருங்கின்
வழிபடு தெய்வம் வணங்குவன னேத்திக்
கழிபிடி வலங்கொண் டொழிவிடத் தொழிந்து 95
துணைபிரிந் தனைய னிணைபிரி மகன்றிலிற்
போத லாற்றான் காதலிற் கழுமிப்
பிடிக்க ணின்ற பேரன் பானான்
வடிக்கண் மாதர் வருத்த மோம்பிப்
பகலிடத் தற்றம் படாமை யிருக்கும் 100
அகலிட மறித லருமை யுடைத்தெனத்
தாழிற் றாழ்ந்து சூழிற் சுழியல்
அந்த ணாளனொடு மந்திரம் விரும்ப
வஞ்சமி னண்பின் வயந்தக னுரைக்கும்

வயந்தகன் கூற்று தொகு

நஞ்சம் பொதிந்து நமக்கும் பிறர்க்கும் 105
அஞ்சல் செல்லா வரணகம் வலித்துக்
கான்னகத் துறையுங் கடுவினை வாழ்க்கை
வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம்
நாட்டுச் சந்திது நாமிவ ணீந்தி
ஒன்றிரு காவதஞ் சென்ற பின்றைக் 110
குன்றகச் சாரற் குறும்புபல வடக்கிநம்
வன்றா ளிளையர் வாழ்பதிக் கியங்கும்
வழியது வகையுந் தெரிவழிக் குறையும்
திகைத்திலே னாதன் மதிக்குமென் மனனே
மடத்தகை மாதர் வருந்தினு நாமிவட் 115
கடப்பது கருமங் காவல வருளென

உதயணன் செயல் தொகு

வாளொடு கேடகம் வயந்தகற் கீத்துக்
கோலொடுங் கொடுஞ்சிலை கோமகள் கொண்டு
பள்ளி கொண்ட வள்ளியஞ் சாயற்
கற்பொடு புணர்வியைக் காஞ்சன மாலாய் 120
நற்பொரு ளிதுவென நன்கன மெடுப்பி
நடக்கல் வேண்டு நாமிவ ணீங்கி
இடுக்க ணில்லா விடம்புகு மளவென
உற்றவ னுரைத்த வுறுதி மாற்றம்

காஞ்சனை செயல் தொகு

பொற்றார் வேந்தன் பூங்கொடிப் பாவையைச் 125
செவ்விதிற் றேர்ந்து கைவிரல் கூப்பித்
தோழி காஞ்சனை தோன்றக் கூறிக்

வாசவதத்தையின் நிலை தொகு

காழில் பஞ்சி யூழறிந் தாற்றி
விரற்கொண் டமைத்து வித்தக ரூட்டிய
அரத்த வடர்மையு மரந்தோய்ந் தென்ன 130
நோய்கொண்டு கறுக்கு மாய்மலர்ச் சேவடி
ஏழடி யிடுத லாற்றா தாயினும்
ஊர்திரைப் பௌவ முலாவு மூக்கமொடு
பூமலர்க் கோதையும் பொறையென வசைவோள்
மாமலை தாங்கு மதுகையள் போல 135
இனபக் காதலற் கேத மஞ்சிப்
பொன்புனை பாவையும் போகுதல் வலிப்பக்
கொடிப்படை கோமக னாகக் கூழை
வடுத்தீர் லயந்தகன் வாள்வலம் பிடித்துக்
கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக் 140
காவல் கொண்ட கருத்தின னாகப்
புரிசைச் சுற்றங் காஞ்சனை யாக
உரிமைக் கொத்த திருமா மேனியைப்
புன்புலர் விடியற் புறம்பனி யொழுகிய
அம்புத லதர்வை யணிநடைக் கியவிய 145
வனப்பொடு புணரிய வடகப் போர்வையை
மணிப்பூண் வனமுலை யிடைக்கரை புதைஇப்
பைந்தொடிப் பணைத்தோள் பைய வீசி
அஞ்செந் தாமரை யகவித ழன்ன
சில்லரித் தடங்கண் மெல்லென மிளிர 150
மானின் மடப்பெடை மம்ம ரெய்த
வேனிற் காலத்துத் தான நோக்கி
மணிக்கட் பீலிமாமயிற் பேடை
அணிக்கவின் மென்னடை நனுக்க வசைந்தசைந்
தியலா நின்ற காலை வியலிடத் 155
தெல்லை யாரிரு ணல்வினை முன்னர்ப்
பாவம் போலப் பறைந்துகை யகலக்
கோவத் தன்ன குழவிக் கோலமொடு
குணமலைப் பிறந்து குடவரை நிமிர்ந்து
கனல்கதிர் கான்று கடுமை கூராத் 160
தனிக்காற் றேரோன் றனிமை யெய்த
அனித்த மிதிப்பினும் பனித்த லானா
ஒளிச்செஞ் சீறடி யுருக்கரக் கேய்ப்ப
உளித்தலை வெம்பர லூன்றுபு நலியப்
பவளக் கொப்புளம் பக்கம் பயிலத் 165
தவளைக் கிண்கிணி தாங்குத லாற்றா
திவள திடுக்க ணிசைத்தும் யாமெனத்
ததும்புகுரற் பூச லிரங்குவன வொலிப்ப

உதயணன் கூற்று தொகு

மணங்கமழ் நறுந்தார் மன்ன குமரன்
வயந்தகற் குரைக்கும் வாலிழை வருந்தினள் 170
இயங்குதல் செல்லா திருக்குமிடங் காணெனக்

வயந்தகன் செயல் தொகு

கார்ப்பூ நீலங் கவினிய கலித்துறை
நீர்ப்பூம் பொய்கை நெறியிற் கண்டதன்
படுகரை மருங்கிற் படர்புறம் வளைஇக்
கன்முரம் படுத்துக் கவடுகா றாழ்ந்து 175
புள்ளினம் புகலினும் புகற்கரி தாகி
ஒள்ளெரி யெழுந்த வூழ்படு கொழுமலர்
முள்ளரை யிலவத்துண் முழையரண் முன்னி
முள்ளங் கோடு மூழிலைப் பிறங்கலும்
வள்ளிலை வாடலும் வயந்தகன் களைந்து 180
பாய லமைத்த பாசடைப் பள்ளியுள்
ஆய்வளைத் தோளியை யமர்துயில் கொளீஇத்
தடம்பெரும் பொய்கை தண்ணிழல் வலியா
ஒடுங்கினர் மாதோ கடும்பகல் கரந்தென்.

1 53 பிடி வீழ்ந்தது முற்றிற்று.