உலகத்தமிழ்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகத் தமிழ்

 

நெ.து. சுந்தரவடிவேலு எம். ஏ., எல். டி.

முன்னாள் துணைவேந்தர்,

சென்னைப் பல்கலைக் கழகம்.


 

தமிழ் உறவு

தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்

சென்னை -5

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

பதிப்புரை

தமிழ் எழுத்தாளர்களின் நன்மைக்காக, எழுத்தாளர்களின் சொந்த முயற்சியால், எழுத்தாளர்களே நடத்தி வருவது தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவுச் சங்கம். தமிழ் நாடு முழுவதும் பரவியிருக்கும் பல எழுத்தாளர் இதில் உறுப்பினராய் இருக்கின்றனர். இச் சங்கம் இதுவரை தமிழ் உறவு என்னும் வெளியீட்டு முத்திரையின் கீழ் 90 தமிழ் நால்களைப் பல துறைகளிலும் வெளியிட்டிருக்கிறது!.

இது 66வது நூலின் மூன்றாவது பதிப்பு.

பாரிசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குத் தமிழக அரசின் பிரதிநிதியாகச் சென்று வந்த சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள், தமது பயண அனுபவங்களையும் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் தமது எண்ணவோட்டங்களுடன் கலந்து சுவையாக அளித்துள்ளார்கள், நம் கருத்துகளிலும் எதிரொலிக்க வல்லவை. இவை; பதிக்கத்தக்கவை கூட.

இதனைச் சங்கத்தின் வாயிலாக வெளிக் கொணர இசைந்தமைக்குத் திரு. நெ. து. சுந்திரவடிவேலு அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் எழுத்தாளா தன்னம்பிக்கையுடன் தமது இலக்கிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு, தமிழ் உறவு நூல்களை வாங்கித் தமிழ் மக்களும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் பேராதரவு தரவேண்டுகிருேம்.


2/96. பெரிய தெரு,
சென்னை-5
20–7 – 1977
தமிழுறவாளர்

 நெடுநாளைய பழக்கத்தின் கொடுமையால் நாணி நாணி ஒதுங்கிப்பெரியவர்கள் கண்களில் படாமல் நிற்கும் என்னையும் பாரிசு மாநாட்டிற்கு அரசின் பிரதிநிதிகளில் ஒருவராக அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி. தமிழ் நாட்டின் தன்னேரிலாத முதல்வர், தமிழ்த் தாயின் தவப்புதல்வர், கலைஞர் கருணாநிதி அவர்களின் நல்லாதரவு. மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் நான் கலந்துகொள்ளும் நற்பேற்றினை நல்கிற்று. அப்பெரு மகனார்க்கு எப்படி நன்றி சொல்ல? கைம்மாறு கருதா மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு?

முன்றாம் உலகத் தமிழ் மாநாட்டில், மாணவனாயிருந்து கற்றதோடு, ‘கல்விபற்றிக் கவி பாரதி’ என்னும் தலைப்பில் கட்டுரையொன்றும் கொடுக்கும் நல் வாய்ப்பையும் பெற்றேன்.

மாநாட்டிற்குச் சென்ற போதும், மாநாட்டில் கலந்து கொண்ட போதும், பின்னரும் நான் கண்டவை பல; கேட்டவை பலப்பல. அவை என் உள்ளத்தில் எழுப்பிய எண்ணங்கள், தொடர் கட்டுரைகளாய் உருப்பெற்றன.

நான் கற்றுக்குட்டி எழுத்தாளன். எனவே, என் எழுத்துக்களில் உண்மை உறுத்துமளவிற்கு இலக்கிய நயம் இல்லாமல் இருந்தால் வியப்பிற்குரியதன்று: எனினும் உலகத் தமிழ் மாநாடு பற்றி நான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை வெளியிட மனமுவந்து முன் வந்தார் ‘கல்கண்டு’ ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்கள். இருபது ஆண்டுகளாக கல்கண்டில் எழுத யாருக்கும் இடம் கொடாத தமிழ்வாணன் என்னத் தொடர்ந்து எழுத விட்டது என்னுடைய சிறப்பா? இல்லை. விளக்கஞ் சொல்ல முடியாத நற்பேறு. திரு. தமிழ்வாணன் கொடுத்த உரிமை இன்று ‘உலகத்தமிழ்’ என்னும் நூலாகக் காட்சியளிக்கிறது.

என் இளமைப் பருவத்தில், திரு. சேஷாசலம் அய்யர் அவர்கள் நடத்திய ‘கலா நிலையம்’ மூலம் என் தந்தை எனக்கு ஊட்டிய தமிழ்ப்பற்று. எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த நல்லாசிரியர்கள் திருவாளர் நரசிம்மாச்சாரி யாராலும், திருவாளர் நமச்சிவாய முதலியாராலும் காத்து வளர்க்கப்பட்டது. பண்டிதர் எஸ். எஸ். அருணகிரிநாதர், திரு. வி. க., மறைமலை அடிகளார். சோமசுந்தர பாரதியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய தமிழ்ப் பெரி யார்களின் எழுத்துக்கள் என் தமிழ்ப் பற்றிற்கு நெய் வார்த்து வளர்த்தன, வளர்க்கின்றன.

ஆழ்ந்த புலமை மிகுந்தால் சலனம் குறையலாம். பற்றுமட்டுமே மிகுந்துள்ள எனக்கு, தமிழைத் தமிழாகக் காக்கவேண்டுமே என்னும் துடிப்பு. தகுதியில்லாவிட்டாலும் தாயிடம் பற்றுக் கொண்டு, தாய்க்குக் தீங்கு நேராதபடி காக்கத் துடிக்கும் நிலையில் உள்ளவன் நான். எனவே, தமிழணங்கு. உலகப் புகழுக்கு மயங்கி கண்டவர்களிடம் போய்ச் சிக்கிவிடக்கூடாதே என்று கவலைப்படுகிறேன். அவள் உலக அரங்கில் காட்சியளிக்கும் போது அவளுக்குச் சிறு தீங்கும் நேராவண்ணம் விழிப்பாயிருந்து காக்கும் ஆற்றல் மறவர்கள் தமிழ் மொழிக்குத் தொடர்புடைய, தமிழ் மொழியின் தொன்மையை எடுத்து விளக்கத் துணைபுரியக் கூடிய பல்வேறு துறைகளிலும் அறிஞர்களான தமிழ் மறவர்கள்-பலர் தேவையென்பதை பெரிதும் உணர்கிறேன். அவ்வுணர்வை இயல்பாய் கொட்டியுள்ளேன். மெருகிட்டுக் காட்ட ஆற்றல் அற்றேன். இளைஞர்களைத் தூண்டும் என்னும் ஆசையால், என் ஏக்கத்தை உருவாக்கியுள்ளேன். ஆக்கத்தில் திளைப்போர் பொறுத்தருள்க.

பாரிசு மாநாட்டிற்கு என்னை அனுப்பி வைத்த தலைவர் நல்லவர், வல்லவர், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு மிகப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். காலமெல்லாம் நன்றியுடையவனாவேன்.

‘கல்கண்டில்’ வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘உலகத் தமிழ்’ என்னும் தலைப்பில் இந்நூலை வெளியிடும் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு என் உளமார்ந்த நன்றி. அதன் செயலர் திரு. க. சோமசுந்தரம் அவர்களுக்குத் தனி நன்றி உரியதாகும்.

கட்டுரைகளுக்கு இடம் தந்து என்னை ஊக்கிய திரு. தமிழ்வாணன் அவர்களுக்கும், அவரோடு தொடர்புபடுத்திய ‘சத்திய கங்கை’ ஆசிரியர் திரு. பகீரதன் அவர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி.


சென்னை-30
21-12-1971
நெ. து. சுந்தரவடிவேலு

"https://ta.wikisource.org/w/index.php?title=உலகத்தமிழ்&oldid=1547959" இலிருந்து மீள்விக்கப்பட்டது