கதை சொன்னவர் கதை/புகழ் தேடிப் புறப்பட்டவர்!

வெகு காலத்திற்கு முன்பு ஒரு சக்கரவர்த்தி இருந்தார். அவர் அடிக்கடி உடை மாற்றுவார். ஒவ்வொரு தடவையும், வெவ்வேறு விதமான உடை அணிவார். துணி வாங்குவதிலும், துணி தைப்பதிலுமே பணத்தையெல்லாம் செலவிட்டு வங்தார்.

அந்தச் சக்கரவர்த்தியிடம் ஒரு நாள், இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். ஆனால், பார்ப்பதற்கு நல்லவர்கள் போல நடித்தார்கள். அவர்கள் சக்கரவர்த்தியைப் பார்த்து, “நாங்கள் நெசவாளர்கள். நாங்கள் தயார் செய்யும் துணி மிக,மிக மெல்லியதாயிருக்கும். வண்ணங்கள் கண்ணைக் கவரும். இன்னொரு அதிசய சக்தியும் அதற்கு உண்டு. புத்திசாலிகளின் கண்களுக்குத்தான் அந்தத் துணி தெரியும்; முட்டாள்களின் கண்களுக்குத் தெரியவே தெரியாது !" என்றார்கள்.

சக்கரவர்த்தி அவர்கள் சொன்னதை உண்மை என்று நம்பிவிட்டார். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனேயே, "சரி, உங்களுக்குத் தனியாக ஒரு வீடும், வேண்டிய பணமும் தரச் சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்" என்றார்.

அவர்களுக்குத் தனியாக ஒரு வீடும், ஏராளமான பணமும் தரப்பட்டன. அவர்கள் அந்த வீட்டிலே இரண்டு தறிகளைக் கொண்டுவந்து வைத்தனர். ஆனால் துணி நெய்யவில்லை; நெய்வது போல் பாசாங்கு செய்தனர்.

சில நாட்கள் சென்றன. சக்கரவர்த்தி தம்முடைய முதல் மந்திரியை அழைத்து, துணிகள் எப்படித் தயாராகின்றன என்று பார்த்து வரச் சொன்னார். முதல் மந்திரி அந்த இரண்டு பேர்வழிகளும் இருந்த வீட்டுக்குச் சென்றார், அவரைக் கண்டதும், இருவரும் துணி நெய்வது போல் நடித்தனர்.

மந்திரியின் கண்களுக்குத் துணி எதுவும் தெரியவில்லை. ஆனாலும், அவர் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. 'துணி தெரியவில்லையே’ என்று சொன்னால் முட்டாள் பட்டம் கிடைத்து விடுமே! ஆகையால், அவர், "ஆஹா ! எவ்வளவு

6 மெல்லிய துணி! அற்புதமான வர்ணங்கள் என்று புகழ்ந்து கூறிவிட்டு, சக்கரவர்த்தியிடம் திரும்பி வந்தார். அவரிடமும் அதிசயத் துணியைப் பற்றி ஒரேயடியாக வர்ணிக்கத் தொடங்கி விட்டார்.

இரண்டு நாள் கழித்து, சக்கரவர்த்தி இன்னொரு பெரிய உத்தியோகஸ்தரை அனுப்பிவைத்தார். அவரும் அங்கே சென்று பார்த்தார். அவ ருடைய கண்ணுக்கும் துணி எதுவும் தெரியவில்லை.

ஆனாலும், அவர் விட்டுக் கொடுக்க வில்லை. சக்கரவர்த்தியிடம் திரும்பி வந்து, பார்க்காத துணியைப் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசினார்.

சக்கரவர்த்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி. உடனே துணியைப் பார்ப்பதற்கு அவரே நேராகப் புறப்பட்டுச் சென்றார். அவரைக் கண்டதும், மிகவும் மும்முரமாகத் துணி நெய்வதுபோல் இரு வரும் நடித்தார்கள். சக்கரவர்த்தி எவ்வளவுதான் கூர்ந்து பார்த்தும், துணி தெரியவில்லை. அங்கே இருந்தாலல்லவா தெரிவதற்கு? ஆனாலும், உண்மையைக் கூற அவருக்குத் துணிச்சல் இல்லை, “ஆஹா! அற்புதம்! அபாரம்! பிரமாதம்! துணி என்றால் இதுவல்லவா துணி!” என்று வாய்விட்டுக் கூறினார்.

“இந்தத் துணியிலே தங்களுக்கு அழகான ஆடை தைக்கப் போகிறோம். ஆடை தயாரானதும் அதைத் தாங்கள் அணிந்து இந்த நகரில் ஊர்வலம் வர வேண்டும்” என்றார்கள் அந்தப் பொல்லாதவர்கள்.

சக்கரவர்த்தியும் ‘சரி’ என்றார். ஒரு நல்ல நாள் பார்த்து அன்று ஊர்வலம் நடத்துவது என்று முடிவு செய்தார்கள்.

குறித்த நாளில் சக்கரவர்த்தி துணி தயாராகும் விட்டுக்கு வந்தார். நெசவாளராய் நடித்த இருவரும் சக்கரவர்த்தி அணிந்திருந்த உடைகளைக் கழற்றினார்கள். பிறகு அவர்களில் ஒருவன் கால்சட்டையைப் போட்டுவிடுவது போல் பாசாங்கு செய்தான்; மற்றொருவன் மேல்சட்டையைப் போட்டுவிடுவது போல் நடித்தான். சிறிது நேரத்தில், “ஆஹா ! எவ்வளவு அழகா யிருக்கிறது! சக்கரவர்த்திக்கு மிகவும் பொருத்த பொருத்தமான உடை!” என்று அவர்கள் கூறினார்கள். பிறகு ஊர்வலம் புறப்பட்டது.

சக்கரவர்த்தி ஊர்வலமாக வருவதை தெருவில் எல்லோரும் பார்த்தார்கள். “ஐயோ! ஆடையின்றி வருகிறாரே” என்று ஒருவராவது சொல்ல வேண்டுமே! அதுதான் இல்லை. ஏன்? அந்த ஆடை யார், யார் கண்களுக்குத் தெரியவில்லையோ, அவர்களெல்லாம் முட்டாள்கள் என்ற செய்திதான் ஏற்கெனவே நகர் முழுவதும் பரவி விட்டதே! அதனால் சில ‘புத்திசாலிகள்’, “அடடா! அடடா! துணியென்றால் இதுவல்லவா துணி! எவ்வளவு அற்புதமாயிருக்கிறது!” என்று புகழவும் ஆரம்பித்து விட்டனர்.

இப்படி எல்லோரும் ‘புத்திசாலி’களாக நடித்துக் கொண்டிருந்த அச்சமயத்தில் திடீரென்று ஒரு கீச்சுக் குரல் கேட்டது.

“ஐயையோ சக்கரவர்த்தி உடுப்பு இல்லாமல் போகிறாரே!”

குரல் வந்த திசையில் எல்லோரும் பார்த்தார்கள். ஒரு சின்னஞ்சிறு பெண்தான் அப்படிக் கத்தினாள். அவள் கூறியதைக் கேட்டதும், “எனக்குக் கூட அப்படித்தான் தோன்றுகிறது” என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர். இன்னொருவரும் அதே மாதிரி சொன்னார். சில வினாடிகளில், எல்லோரும் சேர்ந்து, “சக்கரவர்த்திக்கு உடுப்பே இல்லையே!” என்று ஒரே குரலில் கூவினர்!

சக்கரவர்த்தி அப்போதுதான் உண்மையை உணர்ந்தார். வெட்கத்தால் தலை குனிந்தார். அத்துடன் ஊர்வலமும் முடிந்தது.

—இது குழந்தைகளுக்காகக் கூறப்பட்ட கதை. குழந்தைகளுக்கு இது வேடிக்கையாக இருக்கும். ஆனால், பெரியவர்களுக்கோ உயர்ந்த கருத்தைப் போதிக்கும்.

இதைப் போல் ஒன்றல்ல; இரண்டல்ல; நூற்றுக் கணக்கான கதைகளைக் கூறினார் ஒருவர். அவர் பெயர்தான் ஆண்டர்சன். ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்’ என்பது அவருடைய முழுப்பெயர். ஆண்டர்சன் எங்கே போனாலும், குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு கதை சொல்லத் தொடங்கி விடுவார். இப்படி ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவருடைய கதைகளைப் படித்துப் படித்து மகிழ்ச்சிக் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் அவருடைய சொந்தக் குழந்தைகள் அவரிடம் கதை கேட்டதும் இல்லை; அவருடைய கதைகளைப் படித்ததும் இல்லை. காரணம், அவருக்குக் குழந்தையே கிடையாது! ஆமாம், அவ க்கு மனைவியும் இல்லை; மக்களும் இல்லை. அவர்தான் திருமணமே செய்து கொள்ள வில் யே !

ஆண்டர்சன், டென்மார்க் தேசத்திலுள்ள ஓடென்ஸ் என்ற ஊரில் 1805-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய அப்பா செருப்புத் தைப்பவர்; அம்மா துணி வெளுப்பவள். தங்களுடைய பிள்ளை பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகப் போய்ப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் ஆசைப் பட்டார்கள். ஆனால், ஆண்டர்சனுக்குப் படிப்பில் கவனம் செல்லவே இல்லை. அவர் எப்போதும் ஏதாவது கனவு கண்டு கொண்டே யிருப்பார். இதனால், அவர் பள்ளிப் படிப்புக்கு விரைவில் முழுக்குப் போடவேண்டிய தாயிற்று!

ஆண்டர்சனுக்கு, அவருடைய அப்பா ஒரு பொம்மை நாடக மேடையைச் செய்து கொடுத் திருந்தார். ஆண்டர்சன் பல பொம்மைகளை நடிகர்கள் போல் அந்த மேடையில் நிற்க வைப்பார். சும்மா நிற்கவைக்க மாட்டார்; தையற் கடையிலிருந்து பொறுக்கி வந்த துண்டுத் துணிகளைக் கொண்டு அவற்றிற்கு உடை தைத்துப் போட்டு, நிற்க வைப்பார். அந்த நடிகர்களுக்கு நாடகம் வேண்டாமா? நாடகத்தையும் ஆண்டர்சனே தயார் செய்வார். பல வகையான நாடகங்களை அவர் கற்பனை செய்வார். நாடகத்திற்கு வேண்டிய கதை, வசனம், பாட்டு எல்லாவற்றையும் அவரே எழுதுவார். அந்த நடிகர்களுக்குப் பதிலாக அவரே பேசியும் பாடியும் உணர்ச்சி ததும்ப நடிப்பார். இதனால், அவரது கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது.

ஆண்டர்சனின் அப்பா செருப்புத் தைப்பவராயிருந்தாலும், ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படித்துக்கொண்டேயிருப்பார். சில சமயங்களில் ஆண்டர்சனை அருகில் வைத்துக் கொண்டு, சில நல்ல நல்ல கதைகளையும், நாடகங்களையும் படித்துக் காட்டுவார். ஆண்டர்சன் நாடகத்திலுள்ள வசனத்தையெல்லாம் மனப்பாடம் செய்து விடுவார். அப்படி அவர் மனப்பாடம் செய்ததைத் தெருவில் கடக்கும்போதெல்லாம் சொல்லிப் பார்ப்பார். இதனால், தெருவில் போவோர் வருவோரெல்லாம் இவன் என்ன, தனக்குத் தானே பேசிக் கொள்ளுகிறானே! பைத்தியமோ!' என்று நினைப் பார்கள்.

ஆண்டர்சனுக்கு வயது 14 ஆயிற்று. இதற்குள் அவருடைய அப்பா காலமாகிவிட்டார். “இனிமேல் இந்த ஊரில் இருந்தால் சரிப்படாது. தலை நகருக்குப் போக வேண்டும்” என்று ஆண்டர்சன் ஆசைப்பட்டார். உடனே தாயிடம் சென்றார், டென்மார்க்கின் தலைநகராகிய கோபன் ஹேகனுக்குப் போகவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். “ அங்கே போய் என்ன செய்வாய்?” என்று கேட்டாள் ஆண்டர்சனின் அம்மா.

“புகழ் சம்பாதிக்கப் போகிறேன்” என்றார் ஆண்டர்சன்.

உடனே அம்மா சிரித்தாள். “எல்லோரும் பொருள் சம்பாதிக்கப் போவார்கள். நீ புகழ் சம்பாதிக்கப் போகிறாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம் அம்மா. நிச்சயம் புகழ் சம்பாதிப்பேன். இன்று என்னைப் பார்த்துக் கேலி செய்கிறார்களே, அவர்களெல்லாம் அன்று என்னைப் பார்த்து வியப்படையப் போகிறார்கள். இது நிச்சயம் அம்மா. இப்போது எனக்கு அனுமதி கொடு அம்மா” என்று கெஞ்சினார்.

அம்மா முதலில் சம்மதிக்கவில்லை. ஆண்டர்சன் தொடர்ந்து வற்புறுத்தவே, அம்மா ஒருநாள், “சரி, போய் வா” என்று அனுமதி கொடுத்துவிட்டாள்.

ஆண்டர்சன் தலைநகருக்குப் போவதற்குப் பணம் வேண்டுமே, என்ன செய்வது? அவர் கையிலே கிடைக்கும் சில்லறைக் காசுகளை யெல்லாம் ஒரு களிமண் உண்டிப் பெட்டிக்குள் போட்டுவைப்பார். அந்தப் பெட்டியை உடைத்து உள்ளே யிருந்த காசுகளை யெல்லாம் எண்ணிப் பார்த்தார். பத்து ரிக்ஸ் டாலர் (சுமார் 20 ரூபாய்) இருந்தது. அந்தப் பணத்துடன் புறப்பட்டு விட்டார்.

ஆண்டர்சனுடன் ஓர் அம்மையாரும் பிரயாணம் செய்தார். அவர், ‘தன்னந்‌ தனியாக ஒரு சிறுவன் இருக்கிறானே’ என்று நினைத்து, “தம்பி,நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார். “ தலை நகருக்குப் புகழ் சம்பாதிக்கப் போகிறேன்” என்றார் ஆண்டர்சன்.

"எப்படிப் புகழ் சம்பாதிப்பாய்!" என்று கேட்டார் அந்த அம்மையார்.

“நடிகனாவேன். மிக மிகப் பெரிய நடிகனவேன். கூடிய சீக்கிரத்தில் புகழ் பெற்றுவிடுவேன்” என்று துடுக்காகப் பதிலளித்தார் ஆண்டர்சன். ஆண்டர்சனின் மன உறுதியைப் பாராட்டினார் அந்த அம்மையார்.

ஊரைவிட்டுப் புறப்படும் போது, அங்கிருந்த ஓர் அச்சகத்தாரிடமிருந்து ஆண்டர்சன் ஒரு கடிதம் வாங்கி வந்தார். கோபன் ஹேகனிலுள்ள புகழ் பெற்ற ஒரு நடிகையிடம் கொடுக்க வேண்டிய சிபார்சுக் கடிதமே அது. ஆண்டர்சன் நேராக அந்த நடிகையிடம் சென்றார். கடிதத்தைக் கொடுத்தார். கிழிந்த உடையுடன் வந்த ஆண்டர்சனப் பார்த்ததும் அவள், “உனக்கு நன்றாக நடிக்கத் தெரியுமா?” என்று கேட்டாள்.

"ஓ, தெரியுமே! இதோ பாருங்கள்" என்று கூறி, உடனே தம் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி ஒரு பக்கமாக வைத்தார்; தலையில் மாட்டியிருந்த தொப்பியைக் கையில் எடுத்துப்

பிடித்துக் கொண்டார். ஆடிப் பாடி நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிப்பைக் கண்டு அந்த நடிகை தம்மைப் பாராட்டுவாள் என்று ஆண்டர்சன் எதிர்பார்த்தார். ஆனால், அவள் ஏளனமாகச் சிரித்தாள். "பையனுக்கு மூளைக் கோளாறோ!"என்று நினைத்தாள். “நீங்கள் எப்படியாவது எனக்கு உதவிசெய்ய வேண்டும்” என்று ஆண்டர்சன் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

“இப்போது ஒன்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று அவள் கூறிவிட்டாள். பாவம், ஆண்டர்சன் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டார்.

கையிலுள்ள பணமெல்லாம் கரைந்து விட்டது. ஆண்டர்சனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஊருக்குத் திரும்பி விடலாமா என்றுகூடத் தோன்றியது. “சேச்சே, புகழ் சம் பாதிக்காமல் திரும்புவதா ? கூடாது. கூடவே கூடாது” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார்.

ஆண்டர்சனுடைய குரல் மிகவும் இனிமை யாக இருக்கும். “தம்பி, உன் குரல் நன்றாயிருக் கிறது முயற்சி செய்தால் நல்ல பாடகனாகலாம்”எ ன்று சிலர் யோசனை கூறினார்கள்.

ஒருநாள் அந்த நகரில் இருந்த புகழ்பெற்ற ஒரு பாடகர் வீட்டுக்கு ஆண்டர்சன் சென்றார். அவரை நேரில் பார்த்து, அவரிடம் தம்முடைய விருப்பத் தைக் கூறினார். உடனே, அவர் ஆண்டர்சனைப் பாடச் சொன்னார். ஆண்டர்சன் இனிமையாகப் பாடினார். அதைக் கேட்ட அவர், “தம்பி, நீ என் வீட்டிலே இருக்கலாம். சாப்பாடு துணிமணியெல்லாம் நான் தருவேன்” என்றார். ஆண்டர்சனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. விரைவில் புகழ் சம்பாதித்து விடலாம் என்று நினைத்துப் பூரிப்படைந் தார்.

பாடகர் ஆண்டர்சனுக்குத் தினமும் சங்கீதம் கற்றுக் கொடுத்து வந்தார். ஆண்டர்சனும் கருத்தாய்க் கற்றுக் கொண்டார். ஆயினும், ஆண்டர்சனின் துர்அதிர்ஷ்டம் அங்கே அதிக நாள் இருக்க முடியவில்லை. காரணம், அவருடைய குரல் பதினைந்தாவது வயதில் மாறி விட்டது. அதில் இனிமை இல்லை. கேட்கவே சகிக்கவில்லை. “இனி நீ இங்கே இருப்பதில் பயனில்லை. பேசாமல் ஊருக் குத் திரும்பிப் போய்விடு” என்று அந்தப் பாடகர் புத்திமதி கூறினர்.

ஆண்டர்சனுக்கு ஊருக்குத் திரும்ப மனமில்லை. ஆனாலும், பாடகருடைய வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

“இனி, நம்மால் நடிகனாகவே முடியாதோ..? சரி..போகட்டும்... ஆனாலும், நான் சும்மா இருக்கப் போவதில்லை. பெரிய நாடகாசிரியனாக, சிறந்த கவிஞனாக வேண்டும்” என்று முடிவு செய்தார் ஆண்டர்சன்.

சிறு வயதிலே பொம்மை நாடக மேடையில் பொம்மை நடிகர்களே நிற்க வைத்து, அவர்களுக்காக வசனமும், பாட்டும் எழுதியதை நினைத்துக் கொண்டார். அந்த அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவியது. நாடகங்களும், பாடல்களும் எழுதத் தொடங்கினர். அவற்றை விலைகூறிப் பார்த்தார்; வாங்குவதற்கு ஆள் இல்லை. அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாட்டமாயிருந்தது.

அப்போது, காலின் என்னும் ஒரு பெரியவரை ஆண்டர்சன் சந்தித்தார். ஆண்டர்சன் தாம் எழுதிய நாடகங்களையும், கவிதைகளையும் அவரிடம் காட்டினர். அவர் எல்லாவற்றையும் படித்துப் பார்த்தார். எல்லாம் நன்றாகவே இருந்தன. ஆனாலும், அவற்றில் எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும் ஏராளமாயிருந்தன. ஆண்டர்சனை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று காலின் நினைத்தார். அன்றே ஆண்டர்சனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தார். 18 வயது ஆண்டர்சன் 8 வயதுப் பிள்ளை களுடன் உட்கார்க்து படிப்பதென்றால் எப்படி இருக்கும்? சிறிய வயதில் சரியாகக் கல்வி கற்காமல் போனோமே என்று நினைத்து, ஆண்டர்சன் வருந்தினார். ஆனாலும், பொறுமையுடன் படித்தார். விடா முயற்சி அவருக்கு வெற்றி தேடித் தந்தது.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்த ஐந்தாண்டுகளில், ஆண்டர்சன் எழுதிய புத்தகம் ஒன்று வெளி வந்தது. அவர் எழுதிய நாடகங்களில் ஒன்றும் மேடையில் நடிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, ஆண்டர்சன் சில நாவல்களே எழுதினர். நாவல், நாடகம், கவிதை முதலிய பல துறைகளிலும் அவர் ஈடுபட்டார். அவையெல்லாம் அவருக்கு ஓரளவுதான் புகழ் தேடித் தந்தன. ஆயினும், அவருக்கு உலகப் புகழ் தேடித் தந்தவை அவரது குழந்தைக் கதைகளே! ஆம், ஓய்வு நேரத்தில் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர் சொன்ன கதைகள்தாம் அவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தன !

குழந்தைகளுக்கு மத்தியிலே உட்கார்க்து கொண்டு கதை சொல்லுவதிலே ஆண்டர்சனுக்கு ஒரு தனி இன்பம். அவர் கதை சொல்லும்போது, நேருக்கு நேராகக் கதாபாத்திரங்கள் வருவது போல் இருக்குமாம். அபிநயத்துடன் ஆடிப்பாடிக் கொண்டே கதை சொல்லுவாராம். குழந்தைகள் அந்தக் கதைகளைக் கேட்டுத் துள்ளிக் குதிப்பார்களாம்.

வெகு விரைவில் அவருடைய குழந்தைக் கதைகள் புத்தகங்களாக வெளிவந்தன. புத்தகங்களாக வெளி வந்ததோடு அக்கதைகள் பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கின. கதைகளுடன் ஆண்டர்சனின் புகழும் பரவியது.

டென்மார்க் தேச அரசாங்கத்தார் ஆண்டர்சனுக்குப் பணம் கொடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகளைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடுகளுக்கு அவர் போவதற்கு முன்பே அவருடைய கதைகள் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டதால், அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. புகழ் ஏற ஏற, நிறைய நிறையக் கதைகளே அவர் எழுதினார்.

அவர் காலத்திற்குள் மொத்தம் 156 கதைகள் புத்தகங்களாக வெளி வந்தன. ஆனால், அந்தக் கதைகளை ஆரம்பத்தில் படங்கள் இல்லாமலே வெளியிட்டார்கள். அந்தப் புத்தகங்களைப் பார்த்த டென்மார்க் தேசத்துப் பதிப்பாளர் ஒருவர், ‘இந்தக் கதைகளைப் படங்களுடன் வெளியிட்டால், குழந்தைகள் மேலும் குதூகலம் அடைவார்களே!’ என்று நினைத்தார். ஆனால் படங்கள் போடுவதற்கு ஓவியர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஆண் டர்சனிடமே அப்பதிப்பாளர் ஒப்படைத்தார். ஆண்டர்சன் விருப்பப்படி ‘வில்ஹ் பாடர்சன்’ என்ற ஓவியர் படங்கள் வரைந்தார். அவர் வரைந்த படங்கள் சுமார் 200 இருக்கலாம். அவை யாவுமே மிகவும் நன்றாக இருந்தன. பலரும் அவற்றைப் பாராட்டினார்கள்.

ஆண்டர்சன் அன்னையிடம் கூறியது வீண் போகவில்லை. அழியாப் புகழ் சம்பாதித்துக் கொண்டுதான் அவர் ஊர் திரும்பினார். அவர் திரும்பி வந்தபோது அந்த ஊர் மக்கள் அவருக்கு எத்தகைய வரவேற்பு அளித்தார்கள் ! தெருவெல்லாம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஊர்வலமாகச் சென்றனர். “ஆண்டர்சன்-வாழ்க! ஆண்டர்சன்-வாழ்க!” என்ற ஒலி வானைப் பிளந்தது.

மறுநாள், அங்கிருந்த எல்லாப் பள்ளிக் கூடங்களுக்கும் விடுமுறை! நகர மண்டபத்திலே கோலாகலமான வரவேற்பு நடந்தது. மேயரும், நகரசபை அங்கத்தினர்களும் கைகுலுக்கி அவரை வரவேறார்கள். மேயர் ஆண்டர்சனை வரவேற்றுப் பேசினார்ர். மக்களெல்லாம் மண்டபமே அதிரும்படி கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்கு வாழ்த்துத் தந்திகள் வந்து குவிந்தன. பல நாட்டுக் குழந்தைகளும் அவருக்குப் பரிசுகள் அனுப்பியிருந்தார்கள்.

அன்று இரவு அவரை கெளரவிப்பதற்காக ஒரு பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்ததும், அவரை விருந்து மண்டபத்தின் ஒரு ஜன்னல் அருகே அழைத்துச் சென்றார்கள். ஆண்டர்சன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். எங்கே பார்த்தாலும் பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆண்டர்சனுக்கு மரியாதை செய்யவே அப்படி விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். விளக்குகளின் ஒளியைக் கண்டு அவர் மனம் குளிர்ந்தார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாரைப் பார்த்துக் கேலி செய்தார்களோ, அவருக்குத்தான் இப்படி ராஜ மரியாதை நடந்தது!

ஆண்டர்சனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்தது. அவரது கதைகள் உலகெங்கும் பரவின. இதுவரை சுமார் 120 மொழிகளில் அவரது கதைகள் வெளிவந்திருக்கின்றன. வண்ண ஓவியங்களுடன் அழகழகான பதிப்புக்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன; இன்னும் வெளி வந்து கொண்டேயிருக்கின்றன!

ஓடென்ஸ் நகரிலே ஆண்டர்சன் பிறந்த வீடு இப்போது ஒரு கலைக்கூடமாக விளங்குகிறது. ஆண்டர்சனின் கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், இன்னும் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், சித்திரங்கள் முதலியவற்றையெல்லாம் திரட்டி அங்கு ஒரு காட்சியாக வைத்திருக்கிறார்கள். அவற்றுடன், இது வரை வெளிவந்துள்ள ஆண்டர்சனின் கதைப் புத்தகங்களையும், ஆண்டர்சனைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்த நகருக்குச் செல்வோர், அங்கே சென்று அவற்றைப் பார்க்காமல் திரும்ப மாட்டார்கள் !