சாவின் முத்தம்/சுடாத இரவு

சுடாத இரவு


மணிவரிக் கடல் உயிரின் விரிப்பில்
தாயின் உவகை வடிந்தது
***

நிலவு வடித்தது இன்பம் தென்றல்
உலவிக் கொண்டே உலுக்கிற்று மணத்தை!
***

சிலதி; மீனா; சித்திர லேகா;
நீலம்; குமுதம்; நிலாப்பூ; வஞ்சி;
வலக்கரம் போன்ற வண்ணக் குறிஞ்சி;
ஆடி தெளிந்து, அமுதம் திறந்து,
கிண்ணத் தாமரைக் குளத்தில் படியப்
பாடிக் கொண்டே பறந்தனர்!
குளிரி மீனின் கூர்வாய் போன்ற
முள்ளிச் செடியில், விரிந்த பூக்கள்,
கண்ணாடி நீரில் தன்முகம் பார்த்தன!
அல்லிகள் ஆடின் அழகிய பெண்களின்
ஒல்லி இடையின் ஒடிசல்; கூத்து
வழங்கிற்று! குளத்தின் ஒப்பந்த இளமையில்
இழைந்தன கரங்கள்! இங்கும் அங்கும்
தவ்வினர்! முகத்தைச் சந்தனப் பூவின்
ஒவ்வொரு இதழால் ஒதுக்கிக் கொண்டனர்;


மலரினில் முகத்தைச் சாத்தி
மகிழுவர்! அலைகள் கெய்து,
புலர்ந்திடும் பார்வைக் கூட்டம்
போக்குவர்! சேந்திக் கொள்வர்!
அலர்ந்தவாய் அனுப்பிக் கேள்வி
ஆடுவர்! விடைத ராதாள்
உலருவாள்! “ஊமைப் பெண்ணே!"
ஓடடி என்பாள் மீனா!

கூம்பிய களினப் பூவைக்
கிண்டுவர்! அன்னக் குஞ்சு
தாம்புக்கால் அரவிங் தத்தின்
சதிர்விளை யாட்டு என்று
சாம்பிட இமைகள் தைக்கும்!
சேற்றினில் தவளை கத்தும்!
பாம்புவாய்க் கருநீ லத்தின்
பரப்புதான் குளத்தின் போர்வை!

முகந்துநீர் கொப்ப வரிக்க
முந்துவாள் ஒருத்தி!"பூவிே
சுகந்தானா?" என்று கன்னம்
தட்டுவாள் அடுத்தாள்; எங்தன்
அகத்தினைத் திருடும் கள்ளன்
யார்எனக் கேட்டால், "மொட்டே
எகத்தாளம் செய்கின்றாயா!
என்னடி அம்மா!" என்பாள்.

'வரிப்புறம் இரண்டு' என்று
வளர்த்துவாள் கதையை வஞ்சி,

சிரித்துப் பின் சொல்வாள் "சீச்சி
சொல்லடி 'அணில்கள்' என்று!"
பெருத்ததோர் மலையை, மீனா
'பருப்பதம்' என்பாள்! நீல
'அரி என்பாள் சிலதி! சித்ரா'
'அலைகடல்' என அமைப்பாள்!

தேர்வு,கடத்தும் கண்களை அழைத்து
நீர்ப்பூ மேலே நிறுத்தினாள் குமுதம்
ஓடும் மீனை 'விடாதே' என்று
தேடுவாள் சிலதி சிரிப்பாள் மீனா!
உடும்பின் காக்கை ஒத்த கேசரம்
தொட்டுத் தேனேச் சுவைக்கும் வண்டை
அடிப்பாள் நீலம்! அலரிப் பூவில்
தடுக்கும் அலையைச் சீய்த்து, அழகை
அழுத்துவாள் தடத்தில் எழுவாள்
தாமரைத் தேனில் பார்வை கழுவி
நீரின் நிலையில் நின்று, தமது
ஊரின் சம்பவம் உருவி, பேச்சைப்
பலப்பல மாதிரி பறித்தனர்! நாவில்
கலைச்சொல் ஆக்கம் விழித்தது! கத்தி
விழிதயா ரித்த விளைச்சலில், விளக்குப்
புழுதி எழுந்து போனது எங்கும்!
சிரிப்பு கடந்தது திங்தமிழ் உதட்டின்
புரிகளேச் சிக்குப் படுத்தாத 'குறிஞ்சி'
பச்சையில் வைத்தாள் பார்வையை! 'வஞ்சியும்'
அச்சுப்போல் அங்கே அழுந்தினாள்!
வண்ணக் குறிஞ்சியின் வாடாக் குறிப்புகள்

அண்ணல் ஒருவன் அருகில் நீண்டது!
சாகசம் பிடிக்கும் இதழால், "சோலை
போகிறேன் பூக்கள் பறிக்க" என்றாள்!
அமைத்தனர் விடையை! எல்லாப் பெண்களும்
சுமைக்குளிர் தூக்கிச் சென்றனர் காடு!

பூக்கள் குவித்தனர் பெண்கள்! குறிஞ்சியும்
தேங்கிய மடைநடை வாங்குதல் போல
விரைந்து, விரைந்து, எழுச்சியில் துள்ளி,
விசாலத் தாலே, விழுங்க-அமுதின்
ஊற்றுக் கண்ணில் மழைக்கடல் தோண்டி
சர்க்கரைத் தாக்கலில் தடுக்கி விழுந்து!
தக்க விதத்தில் - சுவைத்து - அவனுடன்
கழிக்காத கரும்பு அறுவடை குவித்தாள்!

***



'என்னடி சிலதி இன்னும் குறிஞ்சியைக்
காணுேமே ஏனடி? காடுதான் தின்றதா?
முல்லைப் பூவில் மூழ்கிவிட் டாளா?
என்ற மொழிகளே இருவரும் கேட்டனர்.
"வருகிறேன்” என்றாள்: வாடாத மலரில்
ஒருதரம் அழுந்தி, "ஓடிப்போ மயிலே"
என்றுதொடுக்கும், இவனிதழ்ச் சிரிப்பு,
அன்று பூத்த அழகிய தாரகை!
குளத்துக் கரைக்குக் கூவிப் பறந்தனள்
கோதை வண்ணக் குறிஞ்சி!
ஒவ்வோர் பூவின் கதையைப் பேசி
செவ்வாய் வகுத்த சிரிப்புடன், பெண்கள்
அழகைப்பிடித்து எழுந்தனர் குறிஞ்சியும்
பழகிய விருந்தை நினைவில் தொட்டு
“சுடாத இரவு” எனகடந் தாளே!

== தொகு