சொன்னார்கள்/பக்கம் 91-100

எனது பொதுத் தொண்டு வாழ்வில், நான் நெருங்கி உண்மையாகப் பழகிய தோழர்கள், அண்ணாதுரை, ராஜாஜி, கண்ணப்பர், ராமநாதன், கே. ஏ. பி. விசுவநாதன், பொன்னம்பலம், சவுந்தர பாண்டியன், பி. பாலசுப்பிரமணியம், குருசாமி ஆகியவர்கள்தான்.

— பெரியார் (19-9-1962)


மிக ஆழ்ந்து படிந்துவிட்ட சமூகத் தீமைகளை வெறும் சட்டத்தால் நீக்கிவிட முடியாது. என்றாலும், அப்போதுதான் எடுத்துக் கொண்ட நோக்கத்திற்கு ஒருவேகம் கிடைக்கும்.

—நேரு (6-5-1961)


மனிதர்களுக்காகக் குதிரையா? குதிரைகளுக்காக மனிதர்களா? மனிதர்களின் வாழ்வும் பணமும் குதிரைப் பந்தயத்திஞல் வீணாகக் கூடாது!

—அண்ணா (8-3-1967)


நான் இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பாடிவிட்டேன். இன்றுள்ள பிரபல நடிகர்கள் எல்லோருக்கும் பாடிவிட்டேன். அதில் அமுதும் தேனும் எதற்கு? என்ற பாட்டே சிறந்தது. இந்தப் பாடல் கவிஞர் சுரதா எழுதியது.

— சீர்காழி கோவிந்தராஜன்


மொகலாயர்கள் தங்களுடைய ஞாபகார்த்தமாக தாஜ்மகாலைத் தவிர வேறெதையும் வைத்துவிட்டுப் போகாமல் போனலும், நான் அவர்களுக்காக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல் பிரிட்டிஷார் தங்களுடைய அரசாட்சி முடிந்தபின் என்ன வைத்துவிட்டுப் போவார்கள் என்றால், சிறைச்சாலையைத் தவிர வேறொன்றுமில்லை

— சுபாஷ் சந்திரபோஸ் (20-5-1928)

(பம்பாயில்)

நான் முதன் முதலில் சென்னைக்குச் சென்ற பொழுது அங்குள்ளவர்கள் இசை உணர்ச்சி இல்லாதவர்கள் என்று தெளிவாகி விட்டது. தமிழ் நாட்டில்தான் மேளம், இசை அல்லது பரதநாட்டியம் இருக்கின்றன. பிற பாஷைகளில் கிடையாதெனச் சிலர் நினைக்கலாம். தமிழ் நாகரிகம் உலகம் முழுமையும் பரவி இருந்ததற்கும் போதிய சான்றுகள் பலவுள. பண்பாடு என்பது தமிழில்தான் உண்டு. அதன் கவிதை உயர் நோக்கங்கள் இவைகள் தெலுங்கு பாஷையில் கிடையாது.

— ரசிகமணி டி கே. சிதம்பரநாத முதலியார் (25-10-1911)

(தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)

மனைவி, ஒரு நல்ல நிதிமந்திரி, எங்கிருந்தோ பணம் வந்து குவியப் போகிறது என்று மனக்கோட்டை கட்டாமல், கணவனின் வரவுக்குத் தக்கபடி செலவு செய்கிறாள். தன்னுடைய மக்களுக்குக் கல்யாணப் பேச்சு நடத்துகிறாள். இந்த விஷயத்தில் மனைவி நிதிமந்திரி மட்டுமல்ல, சரியான உள்நாட்டு மந்திரி கூட.

— வி. வி. கிரி (29.6.1960)


சித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக் கடையின் முன்னல் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். நான் பாடிக் கொண்டிருந்த போதே கள்ளுக் கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் விடவில்லை நான். அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன். அன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்.

— சித்தூர் வி. நாகையா (13-1-1972)

எல்லாம் தெரியும், இனி உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களை விட, அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடைய அறிஞர்களால் நாடு அதிக பலன் அடைகிறது.

— சம்பத் (8-3-1962)


நல்ல ஆட்கள் பதவிக்கு வரமுடியவில்லை என்றால். பதவிக்குத் தேர்ந்தெடுத்தனுப்பும் ஓட்டர்களுக்குப் புத்தியில்லை. அல்லது புத்தியுள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லே என்றுதான் அர்த்தம்.

—ஈ. வெ. ரா. பெரியார்


புரட்சி வரும் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை தான், ஆட்சியிலிருப்பவர்கள், வாயளவில் சோஷலிசம் என்றும் முற்போக்கு என்றும் பேசிக்கொண்டேயிருந்தால்—காரியமாற்றாமல் காலங் கடத்தினால் புரட்சி வரத்தான் செய்யும்.

— காமராசர் (17-10-1970)


குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருவகை தாய்மார்கள் உண்டு. நினைத்து பால் ஊட்டும் தாய் ஒருவகை. அழுத பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தாய் இன்னொருவகை. தாய்மொழி விஷயத்தில் அழுதப் பிள்ளைக்குப் பால் கிடைக்கும் நிலை இருக்கிறது. அழுதால்தான் பால் கிடைக்கும்.

— ம.பொ. சி. (17-3-1963)


மற்றவங்களைச் சின்னவங்களா நான் நினைக்கமாட்டேன். ஆனல் நான் என்கிற செருக்கு எனக்கு என்னைக்குமே உண்டு. எங்காவது ஃபங்ஷக்குப் போனல்கூட எனக்கு ஃப்ரன்ட்சீட் கொடுக்கவில்லை என்றால் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு எழுந்து வந்துவிடுவேன். இரண்டாந்தரமா இருக்கிற காம்ப்ளெக்ஸ் எனக்குக் கிடையாது.

— திரைப்படத் தயாரிப்பாளர் ஜி. உமாபதி

எழுத்தாளர்கள் தங்கள் பேனவை எப்பேர்பட்ட மையில் தொட்டு எழுதுகிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது, பொறா'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தற்பெரு'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ பொய்'மை', பழ‘மை’, கய'மை', அறியா'மை' போன்ற ‘மை'களில் தொட்டு எழுதுகிறாகள். நல்லதகுதியுள்ள எழுத்தாளன், தன் பேனாவை புது‘மை’, 'உண்மை’, பொறு'மை', வறு'மை', உரி'மை'; கட'மை' இத்தகைய மை'களில்தான் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறான்.

— கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்


தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றுடன் பல விதமான கிழங்குகளையும் இயற்கை ஏராளமாக வழங்கியிருக்கும் சென்னையைப் போன்ற ஒரு மாகாணத்தில், உணவுக்கான இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் மக்கள் அறிந்தால் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்றே நான் கூறுவேன்.

—காந்தியடிகள் (30-1-1948)


நான் நீண்ட காலம் எந்தவகை மருந்தும் சாப்பிட்டதில்லை. மருந்து சாப்பிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நோய் ஏற்பட்டதில்லை.

—நேரு (14-10-1962)


கடந்த காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போதெல்லாம் ஆயிரக் கணக்கில் ஏழைகள் செத்துப் போவார்கள். அதற்கு தலைவிதியை நொந்து கொள்வார்கள். ஆனால், இப்போது காலம் மாறிப்போய் விட்டது. இன்று பட்டினிச்சாவு ஏற்பட்டால், பெரிய புரட்சியே தோன்றிச் சமுதாயச் சீர்குலைவு ஏற்படும்.

—சி சுப்பிரமணியம் (28-11-1966)

(மத்திய உணவு அமைச்சர்)

என்னுடைய இரண்டுமகன்களும் வளர்ந்துவிட்டார்கள் பிரதம மந்திரி என்ற அதிகாரியின் கெடுபிடிக்கெல்லாம் அவர்கள் பணிந்து விடுவதில்லை. அவர்கள் தங்களுடைய தனித்தன்மையைக் காத்து வருகிறார்கள்.

— இந்திரா காந்தி (20-11-1970)


ஒருமுறை படே குலாம் அலிகான் பாட்டுபோல நிறைய பிருகா எல்லாம் போட்டுப் பாட வேண்டிய பாட்டு ஒன்றை என்னிடம் கொடுத்துப் பாடச் சொன்னர்கள். பாட்டைப் பார்த்தேன். ‘இது என்னால் பாட முடியாது. என் சாரீரம் பிருகா சாரீரம் இல்லை. என்னே டிரை பண்ணுவதற்குப் பதிலாக சீர்காழி கோவிந்தராஜனிடம் கொடுங்கள். பிருகா போட்டு நன்றாகப் பாடுவார்,’ என்று சொன்னேன். என்னால் முடியாததை முடியாது என்று சொல்வேனே தவிர முடியும் என்று சொல்லி அவமானப்பட் மாட்டேன்.

—டி. எம். செளந்தரராஜன் (18-11-1971)


நான் உத்தியோகம் செய்த காலத்தில் என் சமுசாரத்திற்கு ஒருவிதமான நகையும் செய்து போடவில்லை. செய்து போட வேண்டுமென்று நினைக்கவுமில்லை. பணம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நினைவுமில்லை. கடவுளை நம்பினல் அவர் எல்லாம் கொடுப்பார் என்ற விசுவாசம் பலமாயிருந்தது. நான் சம்பாதித்த பணத்தில் மீதி ஏதாவது இருந்தால் என்னுடைய பிள்ளைகளின் படிப்புக்கே செலவழித்தேன். அதற்குச் செலவு செய்ய நான் பின் வாங்கவில்லை

—டிப்டி தாசில்தார் கதிர்வேல் நாயனார் (1918)


என் தொண்டில் எனக்கு உதவியாக இருந்தவர்கள் பலர் அவர்களால் கனவில்கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அடைந்தார்கள். அடைந்தும் வருகிறார்கள்.

—பெரியார்

நாம் பாவமும் செய்யவில்லை. புண்ணியமும் செய்ய வேண்டுவதில்லையென்று சிலர் சொல்லுவார்கள். அது கூடாது. அதேனென்றால், அரசனுக்குட்பட்ட குடிகள் அரசன் கட்டளைப்படி, செய்யும்படி சொன்னதையும் செய்ய வேண்டும். செய்யாதே என்றதையும் செய்யக் கூடாது. அந்த கட்டளைப்படி நடவாதவர்களைத் தண்டிப்பான். இந்த அசுத்த வஸ்துக்களைப் புசிக்காதே என்றபடி புசிக்கக்கூடாது. இந்தக் கிரகத்தை (வீட்டை) வெள்ளையடித்துச் சுத்தம் செய் என்றபடி சுத்தஞ் செய்ய வேண்டும். முன்னால் சொன்னதும் இவர்கள். நன்மைக்குத்தான். பின்னல் சொன்னதும் இவர்கள் நன்மைக்குத்தான். இரண்டில் ஒன்று தவறினலும் அரசன் தண்டிப்பான்.

—சோ. வீரப்ப செட்டியார் (1902-ல்)

(நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபையில்)


ஞானியார் சுவாமிகளை யான் கால் நூற்றாண்டாக அறிவேன். சுவாமிகள் அடியின் கீழ் நின்று பேசும் பேறும் அவருடன் நெருங்கி உரையாடும் பேறும் எனக்குப் பலமுறை வாய்த்ததுண்டு. அடிகளின் ஆசி பெற்றவருள் சிறியேனும் ஒருவன்.

—திரு. வி. க. (18-11-1939)

(ஞானியார் மடத்தின் பொன் விழாவில்)


வக்கீல் உத்தியோகத்தில் எனக்குள்ள அனுபவத்தைக் கூறுகிறேன். 1924-ஆம் வருடத்தில் மீண்டும் நான் வக்கீல் தொழிலில் புகுந்தேன். அப்போது சராசரி மாதம் ரூபாய் ஆயிரம் எனக்கு வரும்படி வந்தது. அவ்வமயம் இருபது வக்கீல்களே என்னுடனிருந்தனர். இப்பொழுது நாற்பது வக்கீல்களிருக்கின்றனர். எனவே, இப்பொழுது மாதம் ரூபாய் நானூறு ஐந்நூறுதான் வருகின்றது. பிராமணர், பிராமணரல்லாதார் சண்டைக்குக் காரணம் உத்தியோகமென்றே கூறலாம்,

—வ. உ. சி. (3-3-1928)

(காரைக்குடியில்)

குடும்பக் கட்டுப்பாடு மிக முக்கியமானதொரு விஷயம்; பாரதத்தின் தற்போதைய நிலைமைக்கும், தனிப்பட்ட குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இது ஒரு அத்தியாவசியமான சமுதாயக் கடமை. நம்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்திற்கும், மக்கட் பெருக்கத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.

—ஜவாஹர்லால் நேரு

நான் பொருளாதார நிபுணர் அல்ல. அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் பொருளாதார நிபுணர்கள் அல்ல என்பதே என் கருத்து.

—பிரதமர் இந்திராகாந்தி (4-9-1973)

அறிஞர் அண்ணாவுடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக காரில் பாண்டிச்சேரி நோக்கி போய்க் கொண்டிருந்தேன். வழியில் ஒரு டீ கடை முன் காரை நிறுத்தி, சில பலகாரங்களை பொட்டலமாகக் கட்டி வாங்கிக் கொண்டு போனோம். அப்படி பொட்டலமாக மடிக்கப்பட்ட காகிதத்தில் “கல்லைத் தான் மண்ணைத்தான் கரைத்துத்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்ற பாட்டு இருந்தது. இதில் ’தான்’ என்ற சொல் தேவையில்லாமல் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டேன். பிறகு பாவமன்னிப்பு படத்துக்கு பாட்டு எழுதும்போது எனக்கு இந்த ‘தான்’ நினைவுக்கு வந்தது. அத்தான் என் அத்தான் என்னைத்தான்’ என்ற பாட்டை எழுதினேன்.

—கவிஞர் கண்ணதாசன் (22-11-1962)


மனிதன் வளர வளர குனிய வேண்டும் என்பதுபோல், பாராட்டுக்களை எச்சரிக்கைகளாகக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பாராட்டை எச்சரிக்கையாகவே கருதுகிறேன்.

7

—சிவாஜி கணேசன் (30.4-1960)

நம்மவர்களில் பலர் இன்னும் பல இடங்களிலும் சமயம் நேர்ந்தால் நம் வீடுகளையும நமக்கு வசேஷ நன்மை செய்திருக்கும இக் கவர்ன்மெண்டையும் காப்பதற்காகப் போர் செய்து, தங்கள் உயிரையும் தியாகஞ் செய்யத் தயாராயிருக்கிறார்கள். நான் கடினமாய்ப் பேசக் கூடும். ஆயினும் நான் சொல்வது உண்மை. தங்களையும் தங்கள் தேசத்தைக்காக்கக்கூடிய ஆற்றலையும் அழித்துவிட்டால், வேறெந்தப் பரிகாரத்தையும் எந்த நாடும் தேட முடியாது.

—ராஜா ராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)

சாதரணமாக ஒருவன் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு புத்தகத்தைப் படிப்பு முடிந்து 10-ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாசிப்பானானால், அதன் உட்பொருள்களும்,இன்பமும் அப்பொழுதுதான் அவனுக்குத் தெரியவரும். அதன் பிரயோஜனத்தை அவன் பின்புதான் அடையக்கூடும். அதனால்தால் நாம் பள்ளிக்கூடத்தை விட்ட பின்பும் கல்வி கற்க வேண்டியது அவசியமெனக் கூறுகிறேன்.

—சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928)

(Y. M. C. A. பட்டிமன்றத்தில்)


மாணவர்களாக இருக்கும் பொழுதே நீங்கள் பேசிப் பழக்கிக் கொள்வீர்களானல், அது உங்களுக்கு வருங்காலத்தில், மிகுந்த உதவியாயிருக்கும். ஒவ்வொருவரும் சுயேச்சையாகச் சிந்திக்க வேண்டும். கூட்டங்களில் வெளியிடப்படும் அபிப்பிராயங்களை உள்ளபடி திரும்பிக் கூறிவிடுவது உபயோகப்படாது. உங்களுடைய அபிப்பிராயம் எப்படியிருத்தாலும் பாதகமில்லை. அதைப்பற்றி உங்களுடைய கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.

—ஏ. ராமசாமி முதலியார் (16 - 1 - 1928)

சிந்தாதிரிப்பேட்டை மாணவர் சங்க ஆண்டு நிறைவு விழாக் கூட்டத்தில்.)

சங்கீதத்தை நாம் நன்றாக ரசித்து, அநுபவித்து அதனால் உள்ளம் நெகிழுவதற்குப் பாஷை அவசியம். பாஷை தான் நாம் அதை அதிகம் அதுபவிக்கும்படிச் செய்கிறது. எனவே, கேட்பவரின் ஹிருதயத்தைத் தொடுவதற்கு அவருக்குப் புரியும் பாஷையிலேதான் பாட்டுகள் பாடப்பட வேண்டியது நியாயம்.

—ராஜாஜி (30-1-1942)

(காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.)

இன்று பிரபல நட்சத்திரங்களாக இருக்கும் எங்களுக்கு அந்தக் காலத்தில் கார் கிடையாது! அப்போது நாங்கள் எல்லாம் வெறும் “பிளாட்பாரம் டிக்கட்டுகள்” ஆனால் அந்தக் காலத்திலேயே மிகவும் விலையுயர்ந்த காரில் சவாரி செய்தார், பாகவதர்! திருச்சியில் அரண்மனைபோல் வீடு கட்டி, ராஜாபோல் வாழ்ந்தார்.

—எம். ஆர்.ராதா (17 - 12 - 1959)


உண்மையைச் சொன்னல் எனக்கு சமைக்கத் தெரியாது. ஒருமுறை சமைக்க தெரியும் என்று சொல்லிவிட்டுப் புத்தகத்தை படித்து சமையல் செய்தேன். அப்போது பட்ட அவதி எனக்குத்தான் தெரியும். கையில் சூடுபட்டு படாதபாடு பட்டேன்.

—ராஜஸ்ரீ


பணம், காசு, பண்டம் முதலியவற்றில் எனக்குப் பேராசை உண்டு. இவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியம் காட்டியிருப்பேனே தவிர, அவைகளில் நாணயக் குறைவையோ, நம்பிக்கை துரோகத்தையோ நான் காட்டியிருக்க மாட்டேன். வியாபாரத்துறையில், பொய்பேசி இருந்தாலும், பொது வாழ்வில், பொய்யையோ மனம் அறிந்து மாற்றுக்கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன்.

—பெரியார் (1 - 1 - 1962)

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.

—சார்லஸ் டார்வின்


எனக்கு என் அப்பாவின் பேரில் தனி ஈடுபாடுண்டு. அவரைப் பெரிதும் மதித்தேன். நான் பார்த்தவர் களெல்லோரிலும் அவர் மிகுந்த வலிமையும், ஊக்கமும் உடையவராகத் தோன்றினர். நானும் பெரியவனாக வளரும்போது அப்பாவைப் போலவே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். நான் எவ்வளவுக்கெவ்வளவு அவரை மதித்தேனோ, நேசித்தேனோ அவ்வளவுக்கவ்வளவு அவரைக் கண்டு அஞ்சினேன்.

—நேரு


சங்கீதத்தை எல்லோரும் ரசிக்க வேண்டுமென்பதே இயக்கத்தின் நோக்கமாதலால் இதுபற்றி விவாதங்கள் செய்வது கேவலமான காரியம். இயக்கத்தின் கருத்தைத் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் எவ்விதமான ஆட்சேபமும் இருப்பதற்கில்லை. நான் சிதம்பரம் மகாநாட்டுக்குப் போயிருந்தேன். அங்கு நிறைவேறிய தீர்மானம் மிதமான முறையிலேயே இருந்து. தமிழர்களால் தமிழ் நாட்டில் ஏற்பாடு செய்யப்படும் கச்சேரிகளில் பாட்டுகள் எல்லாமே தமிழில் இருக்க வேண்டுமென்று என் சொந்த ஹோதாவில் யோசனை சொல்கிறேன். அபிப்ராய பேதங்களை மறந்து ஒற்றுமையாக விருந்தால் எல்லாருக்கும் க்ஷேமம். அப்படிச் செய்வதன் மூலம் தேசிய வாழ்வு நலம்பெறச் சேவை செய்ததாக ஏற்படும்.

—கல்கி (25 - 10. 1941)

(தேவகோட்டை தமிழிசை மாநாட்டில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_91-100&oldid=1009829" இலிருந்து மீள்விக்கப்பட்டது