எனது நண்பர்கள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

முன்பதிப்பு : 1984

இரண்டாம் பதிப்பு : 1989

மூன்றாம் பதிப்பு : 1999

பதிப்பு : உரிமையுடையது

 


விலை: ரூ. 30-00

 





அச்சிட்டோர் : ஜீவோதயம் அச்சகம், சென்னை–5


பதிப்புரை

முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், தம்முடைய சில நண்பர்களை இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்கள்.

‘பெரியோர் சிறப்புகளைப் பெரியோர்தான் அறியமுடியும்’ என்பது எவ்வளவு பொருள் பொதிந்த வாக்கு என்பதனை, இந்த நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு உணர்த்துகின்றது.

இத்தகைய பெரியோர்கள் வாழ்ந்த பெருமை நம் தமிழ் மண்ணுக்கு உரியது என்ற பெருமித உணர்வு; நமக்கும், வருங்கால மக்களுக்கும் ஒளியேற்றும்.

இந்நூலை வெளியிட இசைவு தந்த முத்தமிழ்க்காவலர் அவர்கட்கு எங்கள் நன்றி உரியதாகும். தமிழ்மக்கள் விரும்பிக் கற்றுப் பயன் காண்பார்கள் என்று நம்புகின்றோம்.

பாரி நிலையத்தார்

பொருளடக்கம்
13
25
30
36
39
47
51
53
57
62
66
72
77
90
96
102
108
113
115
128
133
138
147
152



முன்னுரை

இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, தொண்டனாகவோ கருதாமல் நண்பனாகவே கருதிப் பழகி வந்தவர்கள்.

இவர்களில் எவருடைய வரலாற்றையும் நான் முழுமையாக எழுதிவிடவில்லை, எழுதவும் என்னால் இயலாது. அவர்கள் என்னுடன் பழகிய—தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகளிற் சிலவே இதில், இடம் பெற்றுள்ளன.

என் வரலாறு ஒன்றை நானே எழுதி வெளியிட வேண்டுமெனச் சிலர் விரும்பினர். நான் விரும்பவில்லை. காரணம் மேலைநாடுகளில் ஒருவருடைய வரலாறு ஒரு நாட்டின் வரலாற்று நூலாகவும், தமிழகத்தில் அது தற்புகழ்ச்சி நூலாகவும் கருதப்படுவதினாலேயாம். என்றாலும், அவர்களுக்கும் இந்நூல் சிறிது ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.

நாவலர் ந.மு.வே. நாட்டாரய்யா, பெரியார் ஈ. வே. ரா., மதுரை சர். பி.டி. இராஜன் ஆகிய மூவரின் வரலாற்றுச் செய்திகளையும் தனி நூலாக வெளியிட எண்ணியுள்ளேன். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் ஓய்வும் கிடைக்க இறைவன் துணை புரிய வேண்டும்.

என் வாழ்நாளில் இப்பேரறிஞர்களோடு பழகிய பேற்றை ஒரு பெரும்பேறாகவே கருதி மகிழ்கிறேன். அவர்களின் பண்பும், பழக்க வழக்கங்களும் வழி காட்டுதலும், அறிவுரைகளும் எனக்குப் பயன்பட்டன. அவைகளை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டேன். உங்களுக்கும் பயன்படுமா? என்று பாருங்கள். பயன்படுத்திக் கொண்டால் மகிழ்வேன்.

என் நூல்கள் அனைத்தையும் அச்சிட்டு வழங்கியதுபோலவே இந்நூலையும் அச்சிட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய சென்னை பாரிநிலையத்தாருக்கும், ஜீவோதயம் அச்சகத்தாருக்கும், மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நடுவர் உயர் திரு. பு. ரா. கோகுலகிருஷ்ணன் எம்.ஏ.பி.எல்., அவர்கட்கும் என் நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திருச்சிராப்பள்ளி–8 தங்களன்பிற்குரிய,

27–3–84 கி. ஆ. பெ. விசுவநாதம்


மாண்புமிகு உயர்நீதி மன்ற

நீதிபதி பு. ரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள்

முன்னுரை

கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுடைய “எனது நண்பர்கள்” புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். கி.ஆ.பெ. அவர்களுக்கு போற்றுதற்குரிய நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். அதிர்ஷ்டசாலி. அவரைவிட நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். காரணம், நாவன்மையும், நாணயமும், எழுத்தாற்றலும், இன்பத் தமிழ்பால் மாறாத காதலும், அன்பும், பண்பும் நிலைத்த கி.ஆ.பெ. அவர்கள் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்; அவருடைய ஆசிபெற்று வாழ்கிறோம். பல நுணுக்கமான விஷயங்கள், பெரியவர்களுடைய எண்ண அலைகள், கி. ஆ. பெ. அவர்களுடைய விளக்கங்கள் , ஆகியவைகளை எனது நண்பர்கள்’ புத்தகத்திலே நிரம்பப் பார்க்கிறேன்.

“பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும் அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்கவேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?” என வினாக்களை அடுக்கிக்கொண்டே வந்து, “என் தாய் அழுக்கற்றவள், என் தாய் அழுக்கற்றவள்” எனச் சொல்லியவர் மறைமலை அடிகள். அவரைச் சைவர் அல்லர் என்று யாரும் சொல்ல முடியாது. இறையருள் பெற்றவரும், இறைவழிபாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரும் ஆவார் மறைமலை அடிகள். அவர் மறைந்ததும், கி.ஆ.பெ. அவர்கள் நெக்குருகிப் பாடிய பாவைப் பாருங்கள்:

“மலையே! மறையே! மறைமலையே! சாய்ந்தனையோ!” அவர் உடல் எரிவதைப் பார்த்து,

“பெரியாரைப் போற்றும் பெருங்குணத்தை இழந்துவிட்டு

சிறியாரைப் போற்றிச் சீரழியும் தமிழ் மண்ணில்

.................

தமிழ் வாழ்வு வாழாமல் தமிழ் எரித்து வாழ்கின்றோம்”

கி ஆ.பெ. அவர்கள், திரு.வி.க.வினுடைய நன் மதிப்பை எவ்வளவு பெற்றிருக்கிறார் என்பதை திரு.வி.க. அவர்கள் தன்னுடைய அந்திமகாலத்தில், கி.ஆ.பெ. அவர்களைப் பார்த்து,

“நாடு இருக்கிறது...மொழி இருக்கிறது...மக்கள் இருக்கிறார்கள்...நீங்களும் இருக்கிறீர்கள்...பார்த்துக் கொள்ளுங்கள்”

என்று சொன்னதிலிருந்து, நன்கு புலப்படுகின்றது.

நம்மிலே பலருக்குத் தெரியாது. திருவள்ளுவர் திருநாள் என்று இப்போது நாம் கொண்டாடி வருகின்றோமே பொங்கல் நிகழ்ச்சிகளை ஒட்டி, இதைத் துவக்கி வைத்தவர் யாரென்று. பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் இதை ஆரம்பித்து வைத்தார் என்பதை அழகுற எழுதியிருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பேராசிரியர் நமச்சிவாய முதலியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்வளவு பெரிய பகுத்தறிவுத் தத்துவத்தை இனிமையாகத் தமிழிலே சொல்லிச் சென்றார்கள் என்பதை கி. ஆ. பெ., அவர்கள் எடுத்துத் தந்திருக்கின்றார்கள். பேராசிரியர் நமச்சிவாயர் முதலியார் அவர்கள் அந்தச் சொற்பொழிவில்,

“தமிழுக்குத் தெய்வத் தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறுகின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை . தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன.”

எனக் கூறியிருக்கின்றார்கள்.

இந்தக் காலத்தில் நம்மைப் பார்க்க யாராவது வருகின்றார்கள் என்றால் ஏதோ காரணத்திற்காக வருகின்றார்கள் என்பது தான் பெரும்பாலும் ஏற்படுகின்ற நிகழ்ச்சி, பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார் அவர்கள், கி.ஆ.பெ, அவர்களைத் தமிழுக்காகப் பார்த்தார்; தனக்காகப் பார்க்கவில்லை. கி. ஆ. பெ. அவர்கள் இல்லத்திற்குச் சென்ற பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்களை. கி.ஆ.பெ. வந்த காரணமென்ன என்று கேட்டபோது, தங்களைப் பார்க்க வந்தேனே தவிர, வேறு காரியம் எதுவுமில்லை என்று சொல்லிச் சென்றாராம். இப்படி அன்பொழுகும், தமிழார்வம் ஒழுகும் கதிரேசஞ் செட்டியார் தன் இல்லத்திற்கு வந்ததை கி.ஆ.பெ. அவர்கள்,

“என் வாழ் நாட்களில் பெரும்பேறு பெற்று மகிழ்ச்சியடைந்த நாட்கள் சில, அவற்றில் பண்டிதமணி அவர்கள் ஒரு வேலையுமின்றி ஏன் இல்லத்திற்கு வந்த நாளும் ஒன்று”

என்று கூறியுள்ளார்.

தன்னுடைய நண்பர் டபிள்யு. பி.ஏ. செளந்திர பாண்டியன் நாடார் பற்றி எழுதுகின்றபோது, ஒரு மாபெரும் தத்துவத்தை நாடார் அவர்கள் சொல்லியதாக எளிமையாக விளக்கி இருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பொய் பேசுவதனை நாடார் அவர்கள் ஒருபோதும் மன்னித்ததே கிடையாது. இதற்குக் காரணம் கேட்ட போது,

“ஒருவனுக்குக் குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் நேரிடுவன. பொய்’ பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடைய அயோக்யத்தனத்தினாலேயே நேரிடுவது என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்”

என்று குறிப்பிட்டுள்ளார் கி.ஆ.பெ. அவர்கள். தாய்ச்சொல்லிற்காக திராட்சைரசத் தொழிற்சாலை அமைப்பதையே விட்டுவிட்டவர் நாடார் அவர்கள். இந்த நிகழ்ச்சியை அறிந்த கி.ஆ.பெ. அவர்கள் தன்னுடைய புத்தகத்தில்,

“ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்லுக்கே உண்டு என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன்பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது” என விளக்கியுள்ளார்.

“சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும்

காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூறமுடியும்”

என்று கசிந்துருகி எழுதியிருக்கின்றார், கி.ஆ.பெ.

பேரறிஞர் அண்ணாவினைத் தன் நண்பராகப் பெற்றவர் இந்நூலாசிரியர். அண்ணாவினுடைய ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர்

“இன்னும் இரண்டாண்டுகள் இருந்திருந்தால் உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருப்பார். என் செய்வது? தமிழும், தமிழகமும் பெற்ற பேறு அவ்வளவுதான்”

என வெதும்பி எழுதியிருக்கிறார் கி. ஆ. பெ. அவர்கள்.

தமிழிசைக்குப் பெருமை சேர்த்த ராஜா சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் கி.ஆ.பெ. வினுடைய உள்ளத்தைக் கவர்ந்த நண்பர்களில் ஒருவர். தந்தையும், தனயனும், தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிவந்த, வருகின்ற தொண்டினைப் பாராட்டி இந்நூலாசிரியர், தமிழிசை இயக்கத்திற்கு சென்னையில் ராஜா. சர். அண்ணாமலை செட்டியார் தமிழிசை மன்றம் நிறுவினார்; மதுரை நகரில் தமிழிசை மன்றம் கட்டி மகிழ்பவர் ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்கள் எனக் கூறியுள்ளார். இச்செயல்கள் கி.ஆ.பெ. அவர்களுக்கு சோழப் பரம்பரையின் சாதனையை நினைவூட்டி இருக்கின்றது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழிசைச் சங்கங்கள், ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட பெருங்கோயிலைப் போன்றும், ராஜேந்திர சோழனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப் பெற்ற பெருங்கோயிலைப் போன்றும் அமைந்திருக்கிறதென்று எழுதியிருக்கின்றார்கள்.

இடமஞ்சி, பல அருமையான விளக்கங்களை, நிகழ்ச்சிகளை என்னால் இந்த முன்னுரையில் எடுத்துக் கூற இயலவில்லை. உன்னுடைய நண்பர்களைச் சொல், பிறகு நான் உன்னை மதிப்பிடுகிறேன்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.

கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்களை இப்புத்தகத்தில் படித்தபிறகு, இந் நூலாசிரியர் எவ்வளவு பெரியபாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர் என்பது விளங்குகின்றது. சரித்திரப் புகழ்பெற்று, நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் தமிழகப் பெரியவர்கள் பலர், கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்கள். இப்பெரியவர்கள் வளர்த்த நட்பு எனும் அந்தப் பண்பை இக்காலத்தில் பலர் நன்றாகப் படித்துணர வேண்டும். உதட்டளவு பேசி, உதவாத, விஷயங்களுக்காக வாதிட்டு,நெஞ்சில் வஞ்சத்தை ஏந்திச் செல்லும், இனங் கண்டு கொள்ள முடியாத மனிதர்கள் உலவும் இவ்வேளைகளில், உற்ற நண்பர்கள் யார், எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், கருத்து. வேறுபாடு இருப்பினும், காழ்ப்புணர்ச்சியற்று எப்படி அன்பு செலுத்தினார்கள் என்பன போன்ற உயரிய, பண்புகள் இப்புத்தகத்தில் நிரம்ப அடங்கியுள்ளன.

இதைப் படிப்போர் பயனுறுவார்கள். படித்து, பலருக்கு எடுத்து விளக்கினால், சமுதாயம் பயனுறும். இத்தகைய சீரிய நூலை எழுதிய முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். வணங்குகிறேன்.

அன்புள்ள,

பு. ரா. கோகுலகிருஷ்ணன்

சென்னை,

1–1–84

"https://ta.wikisource.org/w/index.php?title=எனது_நண்பர்கள்&oldid=1519500" இலிருந்து மீள்விக்கப்பட்டது