இலக்கியத் தூதர்கள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

© அங்கப்ப பிள்ளை நவநீதகிருட்டிணன் (1921)


THE SOUTH INDIA SAIWA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,



Ed 1 Sept, 1965;
Reprint: May 1966



O31,1 :g
K6


ILAKKIATH THOOTHARKAL


(Paper used 51×76 cms, 10.9 kg White Printing)


Appar Achakam, Madras-1.

பதிப்புரை

பிரிந்தும் மாறுபட்டும் உள்ள இருவரை வேறொருவர் ஒன்றாகச் சேர்த்து வைக்க முயலும் முயற்சியே தூது. பிரிந்திருக்கும் தலைவன் தலைவியருள் ஒருவரிடம் மற்றொருவர் அன்பு காரணமாக அனுப்பும் தூது அகத்துறைத் தூதின்பாற்படும். பகை காரணமாகப் பிரிந்திருக்கும் மன்னர் இருவர் பாலும் செல்லும் தூது புறத்துறைத் தூது எனப்படும். இவ்வாறு அன்பைத் தெரிவிப்பதற்காகவும் பகை தீர்ப்பதறகாகவும் பல தூதர்கள் சென்றுள்ளனர். அவை பல்வேறு இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துத்தொகுத்து இலக்கியச் சுவை வெளிப்பட இயற்றப் பட்டதே ‘இலக்கியத் தூதர்கள்’ என்னும் இந்நூல். அன்னப் பறவையிலிருந்து ஆண்டவன் வரை எல்லோருமே சிலசில சமயங்களில் தூதராகச் சென்று தொண்டாற்றியுள்ளனர்.

சமயக்குரவர் நால்வருள் ஒருவரான சுந்தரருக்காகப் பாவை நாச்சியாரிடம் சிவபெருமானே தூது செல்கின்றார். செங்கோலேந்தும் இருவரிடைத் தூது செல்கின்றார் குழலூதும் கண்ணன். அருந்தமிழ்ப் பாட்டியாராய ஒளவை மூதாட்டியாரே அதியமானின் தூதராகத் தொண்டைமானிடம் செல்கிறார். மறைவழிகாட்டும் மாமுது பார்ப்பான் மாதவிக்காகக் கோவலன்பால் தூது செல்கின்றான். இலங்கை வேந்தன் இராவணனிடம் இராமபிரானின் தூதனாகச் செல்கிறான் அனுமன். இவர்களைப்


இலக்கியத் தூதர்கள்

போன்ற இலக்கியத் தூதர்கள் இன்னும் பலர் உளர். இவர்களைப் பற்றியும் இவர்கள் மேற்கொண்ட தூதினைப் பற்றியும் விளக்குவதே இந்நூல்.

இந்நூலைச் சுவைபட, நயம்மிக இயற்றித் தந்தவர் திருக்குறள்மணி அ. க. நவநீத கிருட்டிணன் என்பவர் ஆவர். சொற்சுவை பொருட்சுவைபட எழுதுவதில் தனித்திறமை படைத்தவர் இவர். இவருடைய நடை இளைஞரை ஈர்க்கும் இனியநடை. இந்தப் பயனுடை நூலை எழுதித் தந்த இவருக்குக் கழகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்நூலைப் பலரும் படித்துப் பயன்பெறுவதோடு, குறிப்பாகப் பள்ளியில் பயிலுஞ் சிறார் அனைவரும் கற்றுத் தெளிந்து களிப்புறுவர் என நம்புகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

அணிந்துரை

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககாலம் முதல் இக்காலம் வரை எழுந்த அருந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் தூதர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தமிழில் ‘தூது’ என்னும் வகையைச் சார்ந்த சிற்றிலக்கியங்களும் பலவுள. தெயவப் புலவராகிய திருவள்ளுவர் தம் நூலில் தூதின் இலக்கணத்தைச் திறம்பட வகுத்துரைக்கின்றார். இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டே ‘இலக்கியத் தூதர்கள்’ என்னும் இச்சிறிய நூலை உருவாக்கினேன். இந்நூலில் காதல் குறித்துச் செல்லும் அகத்துறைத் தூதரும், போர்குறித்துச் செல்லும் புறத்துறைத் தூதரும் ஆகிய இருவகைத் தூதரையும் காணலாம்.

இந்நூல் வெளிவருவதற்குச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக ஆட்சியாளரும் தமிழ்நூற் காவலருமாகிய திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் காட்டிய கருணைத்திறன் பெரிதும் பாராட்டுதற்குரியது. அச்சிடத் தொடங்கி இரண்டாண்டுகட்குப் பின் இந்நூல் நிறைவுறுகிறது. நீண்ட காலத்தாழ்வுக்குரிய காரணம் பொருந்தாத நெறியிற் சென்ற எனது திருந்தாத அறிவே. எனினும் எனது நலத்தில் பெரிதும் கருத்துடைய கழக ஆட்சியாளரவர்கள் என்னை நன்னெறிப்படுத்தி யாட்கொண்டு மீண்டும் என் எழுத்துப் பணிக்கு ஊக்கமும் உரனும் ஊட்டியதன் விளைவாகவே இந்நூல் வெளிவரலாயிற்று. ஆதலின் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை யவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடுடையேன்.


இலக்கியத் தூதர்கள்

இந்நூல், உயர்நிலைப்பள்ளி மேல் வகுப்பு மாணவர்க்கு மிக்க பயன் விளக்கும் வகையில் சிறந்த தமிழ் இலக்கியங்களிலிருந்து. எடுத்த அரிய கருத்துக்களைத் துணையாகக் கொண்டு ஆக்கப் பெற்றது. ஆதலின் இதனைக் கண்ணுறும் உயர்நிலைப்பள்ளித் தலைவர்களும், தமிழ்ப் புலவர்களும் தத்தம் பள்ளிகளில இதனைப் பாடமாக்கி, எளியேனது தமிழ்ப்பணிக்கு ஏற்ற நல்லாதரவை நல்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ் வெல்க!
அ. க. நவநீதகிருட்டிணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=இலக்கியத்_தூதர்கள்&oldid=1519791" இலிருந்து மீள்விக்கப்பட்டது