சங்ககிரிக் கோட்டையின் மர்மம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


சங்ககிரிக் கோட்டையின் மர்மம்





பெ. தூரன்







M

THE MACMILLAN COMPANY OF INDIA LIMITED
Madras Bombay Calcutta Delhi
Associate companies throughout the world


Copyright © by P. Thooran, 1978
First printed 1978




Rs 3.75





PUBLISHED BY S G WASASNI FOR THE MACMILLAN COMPANY OF INDIA LTD AND PRINTED BY B S BALDREY at MACMILLAN INDIA PRESS, MADRAS 600002


முன்னுரை

இந்த நூலுக்கு முன்னுரை தேவையா? என்னையே நான் கேட்டுக்கொள்கின்றேன்.

சில உண்மைகளையும், நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வதற்கு முன்னுரை தேவைப்படுகிறது. அதனால் எழுதுகின்றேன்.

துணிச்சலும் செயல்திறனும் கொண்ட கதைகள் (Adventure Starties) நம் இளைஞர்களுக்கு நிறைய வேண்டும். நூற்றுக்கணக்காக வேண்டும்.

தங்கள் சொந்த அறிவுத் திறமையைப் பயன்படுத்தி அவர்களே பல அரிய செயல்கள் செய்வதை எடுத்துச் காட்டினால் இளம் வயதினர் உற்சாகங்கொண்டு அந்த வழியைத் தன்னம்பிக்கையோடு பின்பற்றுவார்கள்.

பன்னிரண்டு, பதிமூன்று வயதாகி இருக்கும். அப்பொழுதும் பெற்றோர்கள் “அவனுக்கு அல்லது அவளுக்கு என்ன தெரியும்? - குழந்தை” என்று சொல்லுவார்கள். தங்கள் முயற்சிகளிலும் யோசனைகளிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வதை இவ்வாறு புறக்கணிப்பதால் இளைஞர்கள் தன்னம்பிக்கை பெறுகின்ற வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்; தாழ்வு மனப்பான்மை மேலோங்க இது காரணமாகின்றது.

இந்த நிலைமை இக்காலத்திலே சிறிதுசிறிதாக மாறி வருகின்றது. இதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் கதைகள் எழுத வேண்டுமென்பது என்னுடைய ஆவல். நான் கொண்டுள்ள ஆவலால் உந்தப்பட்டு எழுதும் நீண்ட கதைகளிலே இது இரண்டாவதாகும். கொல்லிமலைக் குள்ளன் என்ற முதற்கதையில் வருகின்ற அதே தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் இக்கதையிலும் முக்கிய பாத்திரங்களாக வருகின்றனர். தங்கமணி அன்புடன் வளர்த்து வருகின்ற ஜின்கா என்ற குரங்கும். இக்கதையிலும் வந்து பல சாகசங்களைச் செய்கின்றது. தங்கமணிக்கு ஜின்கா எப்படிக் கிடைத்தது? அதை அவன் எவ்வாறு வளர்த்தான்? இவற்றைப் பற்றியெல்லாம் முதற் கதையிலே விரிவாக எழுதியிருக்கிறேன். இணை பிரியாத இந்த நால்வரையும் வைத்து மேலும் பல கதைகள் எழுத எண்ணியுள்ளேன்.

திப்புசுல்தான் கட்டிய கோட்டையை இன்றும் சங்ககிரியில் கண்டு மகிழலாம். அவனுடைய தேசபக்திக்கும், வீரத்திற்கும், முன்யோசனைக்கும் இதுவும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இனிக் கதையைப் படியுங்கள். இதற்குமேல் நீண்ட முன்னுரை என்றால் உங்களுக்கும் பிடிக்காது. ஜின்கா தன் திறமைகளைக் காட்டத் தயாராக இருக்கிறது. வேறு என்ன வேண்டும்?

கடைசியாக ஒரு வார்த்தை . இக்கதையை நூல் வடிவத்திலே அழகாக வெளிக்கொணர்ந்த மாக்மில்லன் கம்பெனியாருக்கு எனது நன்றி உரியது.

சென்னை
பெ. தூரன் 25-11-78

உள்ளடக்கம்